search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊர்வலம்"

    • சொத்தவிளை, சின்னவிளை கடலில் விநாயகர் சிலைகள் இன்று கரைப்பு
    • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் நாளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தினமும் காலை, மாலை 2 வேளைகளும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. சிவசேனா சார்பில் வைக் கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று தாமிர பரணி ஆற்றில் கரைக்கப் பட்டது.

    வீடுகளில் வைக்கப் பட்டுள்ள சிலைகளையும் பெண்கள் ஆற்றில் கொண்டு வந்து கரைத்தனர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக விநாயகர் சிலை கள் கரைக்கப்படுகிறது. இந்து மகா சபா சார்பில் வைக்கப்பட்டிருந்த விநா யகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சொத்தவிளை கடலில் கரைக்கப்படுகிறது.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் வைக்கப் பட்டிருந்த விநாயகர் சிலை கள் நான்கு சக்கர வாகனங்களில் நாகராஜா திடலுக்கு கொண்டு வரப்பட்டது. நாகராஜா கோவில் திடலில் இருந்து விநாயகர் ஊர்வலம் இன்று மதியம் தொடங்குகிறது. நாகராஜா திடலில் இருந்து புறப்படும் விநாயகர் ஊர்வலம் பீச் ரோடு வழியாக சொத்தவிளை செல்கிறது. சொத்தவிளை கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.

    இதேபோல் மணவாளக் குறிச்சியில் இருந்து சின்ன விளை கடலிலும் விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப் பட உள்ளது. விநாயகர் ஊர்வலத்தையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது.

    முக்கிய சந்திப்புகளில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். விநாயகர் ஊர்வலம் நடைபெறும் நேரங்களில் நாகர்கோவிலில் பஸ் போக்குவரத்தை மாற்றி விடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை (24-ந்தேதி) கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • கடந்த 18-ந்தேதி முதல் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு
    • ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு

    கோத்தகிரி,

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 18-ந்தேதி முதல் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர்.

    தொடர்ந்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட்டது.

    அப்போது இந்து முன்னணி சார்பில் 81 சிலைகளும், அனுமன்சேனா சார்பில் 32 சிலைகளும் கோத்தகிரியின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் உடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

    கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து துவங்கிய ஊர்வலம் காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பஸ் நிலையம், கடைவீதி, ராம்சந்த் வழியாக உயிலட்டி நீர்வீழ்ச்சியை வந்தடைந்தது. பின்னர் அவை நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன. முன்னதாக விநாயகர் சிலை ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • அலுவலக மேலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
    • இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட திருக்கோ வில் நிர்வாக அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் சுசீந்திரத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. அலுவலக மேலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், துளசிதரன் நாயர், ஜோதீஷ்குமார், சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருவனந்த புரம் பத்மநாபசாமி கோவி லில் நடைபெறும் நவராத்திரி விழாவில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலைகள் பங்கேற்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக வருகிற 12-ந்தேதி புறப்பட்டு செல்கிறது. மீண்டும் சாமி சிலைகள் திருவனந்த புரத்தில் இருந்து 26-ந்தேதி புறப்பட்டு குமரி மாவட்டத் திற்கு வருகிறது. சாமி சிலை கள் குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்வதையும் திருவனந்த புரத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு திரும்பி வருவதையும் சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில் திருக்கோவில் நிர்வாகம் மேற்கொள்வது, மேலும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் அம்மனுக்கு நேர்ச்சையாக வழங்கும் பட்டு மற்றும் துண்டுகள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய இணை ஆணையரிடம் அனுமதி கேட்பது, குமரி மாவட்ட திருக்கோவில்களில் நடை பெறும் திருவிழாக்களுக்கு கோவில் மேலாளர் மற்றும் ஸ்ரீ காரியங்களுக்கு முன் பணம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

    • அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வழியாக ஏரிப்புறக்கரை கடலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
    • 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை அதிராம்பட்டினம் வண்டிப் பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து விநாயகர் ஊர்வலம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வழியாக ஏரிப்புறக்கரை கடலுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் இளைஞர்கள் கலந்துக்கொண்டனர்.

    ஏரிப்புறக்கரையில் சிலைகளை கரைக்க கடற்கரையில் படகு தயார் நிலையில் நிறுத்தி வைக்கபட்டது.

    500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

    • சிலைகள் சின்ன சேலத்தில் உள்ள முக்கிய வீதிகளில் தாரை தப்பட்டையுடன் ஊர்வல மாக சென்றது.
    • 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஏரியில் கரைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 3 அடி முதல் 10 அடி உயரம் வரை 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். அப்போது விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற்றது.  இந்நிலையில் 3-ம் நாளான நேற்று அனைத்து சிலைகளும் ஏரியில் கரைப்பதற்கு அந்தந்த பகுதியில் உள்ள சிலைகள் சின்ன சேலத்தில் உள்ள முக்கிய வீதிகளில் தாரை தப்பட்டை யுடன் ஊர்வல மாக சென்றது. இதனைக் காண திரளான பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை காவல் துறை துரிதமாக செயல்பட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி பொதுமக்கள் செல்வதற்கு வழிவகுத்தனர். இந்த நிகழ்ச்சியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சின்ன சேலம் காவல் ஆய்வாளர் ராஜாராமன் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.

    பின்னர் விநாயகர் சிலையை ஒன்றன்பின் ஒன்றாக கிரேன் மூலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் உதவியுடனும் விநாயகர் சிலையை சின்னசேலம் ஏரியில் கரைக்கப்பட்டது. சிலையை கரைக்கும் போது பக்தர்கள் ஏரிக்குள் அனுமதிக்கவில்லை. முழுக்க முழுக்க போலீ சாரின் கட்டுப்பாட்டில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஏரியில் கரைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் இந்து முன்னணி சார்பாக நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு, இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் விழுப்புரம் மாவட்ட ஏ.டி.எஸ்.பி கோவிந்தராஜ் தலைமையில் திண்டி வனம் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக் டர்கள் கலையரசி, லட்சுமி, கலையரசன் நகரம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர். இந்து முன்னணி சார்பாக 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக அமைதியான முறையில் நடைபெற்றது.

    • முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக காவிரி ஆற்றின் பகவத் படித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
    • போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் நேரடி மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் பகுதியில் 87 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. பின்னர், விநாயகர் சதுர்த்தி நாளிலேயே 40 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

    இந்நிலையில் கும்ப கோணம் மகாமகக்குளம் பகுதியில் இருந்து பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்ய ப்பட்டிருந்த 47 விநாயகர் சிலைகளை மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு நாகேஸ்வ ரன்கோவில் கீழவீதி, வடக்கு வீதி, காந்தி பூங்கா, மடத்து தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக காவிரி ஆற்றின் பகவத் படித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்க ப்பட்டன.

    இதில் பா. ஜனதா கட்சியின் அறிவு சார்பு பிரிவின் மாநில தலைவர் கார்த்திகேயன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன், பா.ஜனதா மாவட்ட தலைவர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் நேரடி மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கீர்த்திவாசன் (கும்பகோணம்), ஜாபர்சித்திக் (திருவிடை மருதூர்), பூரணி (பாபநாசம்) உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நகரில் மொத்தம் 41 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சீர்காழி நகர் மற்றும் புளிச்சக்காடு, நந்தியநல்லூரர், பட்டவி ளாகம், திட்டை, கோயில்பத்து, வினாயக ர்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆபத்து காத்தவிநாயகர், கணநாதர், சித்திவிநாயகர்,விஸ்வரூப விநாயகர்.

    மாணிக்க விநாயகர், செங்கழுநீர் விநாயகர், ராஷ்ட்ர விநாயகர், சித்திவிநாயகர், வீரசக்திவிநாயகர், செல்வவிநாயகர் என 41 இடங்களில் விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு 3தினங்கள் வழிபாடு நடைபெற்றது.இதனிடையே திங்கள்கிழமை 5விநா யகர்சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்ட நிலையில் செவ்வாய் இரவு மீதமுள்ள 36விநா யகர்சிலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டது.

    முன்னதாக சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு அனைத்து விநாயகர் சிலைகளும் சிறப்பு பேன்டு வாத்தியம், வாணவே டிக்கையுடன் ஊர்வலமாக பழைய பேருந்துநிலையத்தில் ஒன்றிணைந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்ட பின்னர் ஊர்வலமாக உப்பனாற்றுக்கு சென்றது.

    உப்பனாற்றில் அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன.இதில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் கே.சர ண்ராஜ்,விநாயகர் சதுர்த்தி விழாக்குழு ஒருங்கிணை ப்பாளர் வி.கே.செந்தில்கு மார், மற்றும் பலர் பங்கே ற்றனர். சீர்காழி டி.எஸ்.பி.லா மெக் மேற்பார்வையில் , காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் ௨௦௦-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டி ருந்தனர். பூதலூர் ஆனந்த காவேரி வாய்க்கால் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த விநாயகர் கோவில் அருகில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    நேற்று மாலை ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார ஊர்தியில் வைக்கப்பட்டு பூதலூர் பெரியார் புரத்தில் இருந்து அதிரடி இசை முழங்க ஊர்வலம் தொடங்கியது.ஊர்வலம் வடக்கு பூதலூர் வந்த போது மழை பெய்தது மழையில் நனைந்து கொண்டே விநாயகர் ஊர்வலம் சென்று வெண்ணாற்றில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

    • கரைப்பதற்கு கடும் கட்டுப்பாடு
    • நாகராஜா கோவிலில் இருந்து கொண்டு செல்லப்படும் சிலைகள் சங்குதுறை பீச்சிலும் கரைக்கப்படுகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் பிர திஷ்டை செய்யப்பட்டு உள்ளது. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யை மேற்கொண்டு வரு கிறார்கள். பூஜைக்கு வைக்கப்பட்டுள்ள விநாய கர் சிலைகள் குமரி மாவட்டத்தில் மூன்று நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. நாளை மறுநாள் (22-ந் தேதி) சிவ சேனா சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இருந்து ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது.

    23-ந் தேதி இந்து மகா சபா சார்பில் வைக்கப் பட்டுள்ள விநாயகர் சிலை கள், நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்த விளை பீச்சில் கரைக்கப்படு கிறது. மணவாளகுறிச்சி பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மணவாளக்குறிச்சி கடலில் கரைக்கப்படுகிறது.

    24-ந் தேதி இந்து முன்னணி சார்பில் வைக்கப் பட்டுள்ள சிலைகள் 11 இடங்களில் இருந்து ஊர்வல மாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சுசீந்திரத்தில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது. தோவா ளையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் சிலைகள், பள்ளி கொண்டான் அணையிலும், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இருந்து கொண்டு செல்லப்படும் சிலைகள் சங்குதுறை பீச்சிலும் கரைக்கப்படுகிறது.

    தக்கலையில் இருந்து கொண்டு செல்லப்படும் சிலைகள் மண்டைக் காட்டிலும், குலசேகரத்தில் இருந்து கொண்டு செல்லப் படும் சிலைகள் திற்பரப்பு அருவியிலும், கருங்கலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் விநாயகர் சிலைகள் தேங்காய் பட்டனம் கடலி லும் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போல் மேலும் ஒரு சில இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன.

    விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண்பிரசாத் உத்தரவின் பேரில் மாவட் டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள் ளது. மினிலாரி போன்ற 4 சக்கர வாகனங்களில் மட்டுமே சிலைகளை கொண்டு செல்ல வேண்டும். விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடத்திலோ, கரைப்பதற்கு கொண்டு செல்லும் ஊர்வலத்திலோ, சிலையை கரைக்கும் இடத்திலோ கண்டிப்பாக பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்படுகின்றது.

    விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள், துணிகள் அழகு சாதன பொருட்கள் கரைக்கப்ப டுவதற்கு முன்பு பிரிக்கப்பட வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிலைகள் கரைப்பதற்கு அறி விக்கப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

    சிலை கரைப்புக்கான ஊர்வலம் காவல் துறை யினர் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்லப் பட வேண்டும். சூரியன் மறைவதற்குள் அனைத்து சிலைகளும் கரைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பா டுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    • சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சூலூர் முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடத்தப்பட்டது
    • 60-க்கும் மேற்பட்ட போலீசார் பேரணியாக கலந்து கொண்டனர்

    சூலூர்,

    சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நாளை நொய்யல் ஆற்றில் மற்றும் அருகில் உள்ள குளங்களில் கரைக்கப்பட உள்ளது.

    இதையொட்டி சூலூர், சுல்தான்பேட்டை போலீசார் சூலூர், கண்ணம்பாளையம், பள்ளபாளையம், பீடம் பள்ளி காங்கேயம் பாளை யம், காடம்பாடி, அப்பநாய க்கன்பட்டி, பாப்பம்பட்டி, சுல்தான்பேட்டை, செஞ்சே ரிமலை, ஜல்லிப்பட்டி, செஞ்சேரி புத்தூர், ஜெ.கிருஷ்ணாபுரம், குமாரபாளையம் உள்ளிட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

    மேலும் நேற்று மாலை சூலூர் போலீசார் ஆயுதப்படை மற்றும் சிறப்பு ஆயுதப்படைகாவலர்களுடன் சூலூர் சுற்றுவட்டார பகுதி யில் அணிவகுப்பு ஊர்வலங்களை நடத்தினர். இதன்மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த முடியும் என சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தெரிவித்தார்.

    இந்த அணி வகுப்பு ஊர்வலத்தில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சூலூர் முக்கிய வீதிகளில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.

    • நீலாயதாட்சி அம்மன் கோவில் முன்பு யாகசாலை பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    • சிறிய விநாயகர் சிலை படகில் கொண்டு செல்லப்பட்டு வெட்டாற்றில் கரைக்கப்டுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 32 அடி உயர அத்தி மரத்திலான விஸ்வரூப விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதற்கு முன்னதாக ஒன்றரை அடி உயர களிமண்ணால் ஆன விநாயகர் சிலை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் வைக்க ப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.

    இதையடுத்து இரவு 32 அடி உயர அத்திமரத்திலான விநாயகர் சிலை ஊர்வல த்தையடுத்து நீலாயதாட்சி அம்மன் கோவில் முன்பாக யாக பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை ஊர்வல வாகனத்தில் எழுந்தருள செய்யப்பட்டது.

    தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

    ஊர்வலம் கோவில் முன் தொடங்கி நீலா கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி சாலை, காடம்பாடி, பால் பண்ணை ச்சேரி வழியாக நாகூர் வந்தது. ஊர்வலத்தின் முன்பாக மங்கள இசையுடன் பல்வேறு கச்சேரிகள் இசைக்கப்பட்டது.

    இன்று(19ம் தேதி) காலை ஊர்வலம் நாகூர் வெட்டாற்று பாலத்தை வந்தடைந்ததும் விஸ்வரூப விநாயகருக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த சிறிய விநாயகர் சிலையை படகில் கொண்டு செல்லப்பட்டு வெட்டாற்றில் கரைக்கப்டு கிறது ஊர்வலத்தை முன்னிட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • செங்கோட்டை நகரில் மட்டும் சுமார் 37 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
    • ஊர்வலம் வரும் இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி, விஜர்சன ஊர்வ லங்கள் ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    37 விநாயகர் சிலைகள்

    கடந்த 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் செங்கோட்டை நகரில் மட்டும் சுமார் 37 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அவை முறையே பள்ளிமேட்டு பகுதி, காமாட்சி அம்மன் கோவில், வீரகேரள விநாயகர் கோவில், பூதத்தார் கோவில், காளியம்மன் கோவில் திடல், ஓம் காளி திடல், வம்பளந்தான் முக்கு, செல்வவிநாயகர் கோவில், எஸ்.ஆர்.கே. தெரு, மேலூர் அப்பா மாடசாமி, பள்ளத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.

    இந்த சிலைகள் அனைத்தும் இன்று ஓம்காளி திடலில் இருந்து புறப்பட்டு வம்பளந்தான் முக்கு, செல்வ விநாயகர் கோவில் தெரு, தாலுகா அலுவலக முக்கு, மேலூர், பெரிய பள்ளிவாசல் வழியாக மேலபஜார், பூதத்தார் கோவில், காசுகடை பஜார், கீழ பஜார், காவல்நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு செங்கோட்டை குண்டாறு அணை பகுதியில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது.

    பாதுகாப்புடன் விஜர்சனம்

    விநாயகர் சிலைகள் விஜர்சனத்திற்காக எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 21 இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ள அனைத்து இடங்களிலும் சுமார் 65 சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன் காமிராக்கள் மூலமாகவும் ஊர்வலம் செல்லும் விநாயகர் சிலைகளை கண்காணிக்க ஏற்பாடு தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து குண்டாற்றில் அவை விஜர்சனம் செய்யபடுகிறது.

    கிராமப்புற சிலைகள்

    செங்கோட்டையை அடுத்துள்ள வல்லம், பிரானூர், தேன்பொத்தை ஆகிய 3 இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் வழிபாடுகளுக்கு பின் விஜர்சனம் செய்யபடுகிறது. புளியரை, கேசவபுரம், லாலா குடியிருப்பில், தெற்கு தெரு மற்றும் வடக்குதெரு ஆகிய 5 இடங்களிலும், பண்பொழியில் தைக்கா தெரு, தெற்கு தெரு, தெற்கு ரதவீதி, பேட்டை தெரு, தர்மர் கோவில், அரசமர தெரு, திட்டு தெரு உள்ளிட்ட 11 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இன்று போலீஸ் பாதுகாப்புடன் அரிகரா நதியில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது.

    இதேபோன்று தென்காசி யில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று மாலை ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

    கடையநல்லூரில் 31 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப ட்டுள்ளது. மேல கடையநல்லூர் கண்ணார் தெரு, கிருஷ்ணா புரத்தில் மகாராஜ கணபதி, மறுகால் தெரு, வடக்குவா செல்வி அம்மன் கோவில், மாவடிக்கால், முத்து கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்ப ட்டுள்ளது. புளியங்குடியில் 35 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ள்ளது.

    நெல்லை-தூத்துக்குடி

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 222 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் 5 சிலைகள் கரைக்கப்பட்டு விட்டன. மாநகரில் 76 இடங்களில் சிலைகள் பிர திஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வருகிற 24-ந்தேதி கரைக்கப்படுகிறது.

    இதனையொட்டி மாவட்டம் முழுவதும் சுமார் 1,000 போலீசாரும், மாநகரில் 500 போலீசாரும் சிலைகளை பாதுகாத்து வருகின்றனர். களக்காட்டில் தோப்புத்தெரு, சாலை புதூர், கீழப்பத்தை, வியாசராஜபுரம், மாவடி, மலையடிபுதூர், பொத்தையடி பகுதியில் 14 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரபுரம், மூங்கிலடி உள்ளிட்ட பகுதிகளில் 15 இடங்களிலும், இடையன்குளம், கீழ உப்பூரணி, மஞ்சவிளை, பத்மநேரி உள்ளிட்ட பகுதிகளில் 24 இடங்களிலும் என மொத்தம் 53 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை உவரி கடல், பாபநாசம் தாமிரபரணி ஆறுகளில் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    திருச்செந்தூர் நகர இந்து முன்னணி சார்பில் வ.உ.சி. திடலில் 7 அடி உயரம் கொண்ட கல்வி கணபதி சிலையும், சுப்பிரமணியபுரம், ஜீவாநகர், சண்முகபுரம், முத்துநகர், முத்துமாலையம்மன் கோவில் தெரு, அண்ணா காலனி கோவில் தெரு உள்ளிட்ட 8 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    உடன்குடி சீர்காட்சி, தைக்கா ஊர், பரமன்குறிச்சி, வட்டன்விளை, விஜய நாராயணபுரம், முத்து கிருஷ்ணாபுரம், அம்மன்புரம், முருகேசபுரம், குலசேக ரன்பட்டினம், லட்சுமிபுரம், வேப்பங்காடு, அரசர் பேட்டை கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து குடும்பத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர்.

    • சீர்காழி நகரில் மட்டும் 40 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
    • ஊர்வலமாக உப்பநாற்றுக்கு சென்று விசர்ஜனம் செய்யப்படுகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மாவட்ட விநாயகர் கமிட்டி தலைவருமான சரண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் , சீர்காழி, மங்கை மடம், பூம்புகார், மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு ஆகிய இடங்களில் 147 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று இந்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டு மறுநாள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது.

    சீர்காழி நகரில் மட்டும் 40 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மறுநாள் பழைய பஸ் நிலையத்தில் அனைத்து விநாயகர் சிலைகளும் ஒன்றி ணைக்க ப்பட்டு பின்னர் ஊர்வ லமாக உப்பநாற்றுக்கு சென்று விசர்ஜனம் செய்யப்படுகிறது.

    விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்தில் அனைத்து பொதுமக்களும், பக்தர்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×