search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சி"

    • பொரும்பூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.
    • பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து மாணவர்களுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து களப்பயிற்சி அளிக்கப்பட்டது.

    அக்.21-ம் தேதி தொடங்கி நடைபெறும் ஒருவார முகாமின் 2-வது நாளாக பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி குறித்த நேரடி கள பயிற்சி ஐ.சி.ஐ.சி.ஐ. பவுண்டேசன் சார்பாக வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் தலைமை வகித்தார்.

    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில் வரவேற்றார்.

    பயிற்சியில் ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பாக சிவானந்தம், இயற்கை விவசாயி கணேசன், வீரசிம்மன் ஆகியோர் கலந்துகொண்டு பாரம்பரிய நெல் ரகங்கள், அதன் மருத்துவ குணங்கள் குறித்தும் இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் செய்முறை குறித்த நேரடி கள பயிற்சியை வழங்கினர்.

    முன்னதாக, இப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் குத்தாலம் லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து பொரும்பூர் அமிர்தானந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் மற்றும் செல்லியம்மன் கோவில்களில் உழவா ரப்பணி மேற்கொண்டனர்.

    கோவில் வளாகத்திலும் மதிற்சுவரை சுற்றியுள்ள பகுதியிலும் இருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு கோவில் வாசலில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இதில், குத்தாலம் லயன்ஸ் சங்கத் தலைவர் பார்த்திபன், விஜயசரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மருத்துவ சங்கப் பொருளாளர் டாக்டர். சுந்தரமூர்த்தி, மருத்துவ சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர். ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • டாக்டர்.பாலமுரளி,டாக்டர்.பிரபலதா மற்றும் மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    இந்திய மருத்துவ சங்கம், திருப்பூர் டெக்ஸ் சிட்டி கிளை, திருப்பூர் மாவட்ட காவல்துறை இணைந்து நடத்திய போலீசாருக்கான மருத்துவ முதலுதவி சிகிச்சை பயிற்சி முகாம் பல்லடம் வனாலயத்தில் நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கம் டெக்ஸ் சிட்டி கிளை தலைவர் டாக்டர் ஏஜாஸ் அன்சாரி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியா,மருத்துவ சங்கப் பொருளாளர் டாக்டர். சுந்தரமூர்த்தி, மருத்துவ சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர். ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் வரவேற்றார். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் இந்த பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசுகையில்:- எங்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும் முதலில் அழைப்பது போலீசாரைத்தான். எனவே போலீசார் முறையான முதலுதவி சிகிச்சையை தெரிந்து வைத்துக் கொண்டால் பல உயிர்களை காப்பாற்ற முடியும். அதற்காகத்தான் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. விபத்து ஏற்பட்ட இடத்தில் பாதிக்கப்பட்டவர்களை கையாளும் முறை, அவர்களுக்கு அளிக்க வேண்டிய உடனடி முதலுதவி சிகிச்சை ஆகியவற்றை, இது குறித்து பயிற்சி பெற்ற போலீசார் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்தால், பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்பு எளிதில் குணம் அடைய வாய்ப்புகள் அதிகம்.

    எனவே போலீசார் முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சியை அறிந்து கொள்வது அவசியமாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.இந்த பயிற்சி முகாமில் டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை குறித்து செயல்முறை விளக்கத்தை செய்து கான்பித்தனர். விபத்து ஏற்பட்டு கை, கால் முறிவு, மரண தருவாயில் உள்ளவரை காப்பாற்றுவது, பெரிய விபத்துக்களில் இருந்து மீட்பது, தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது,பின்னர் சிகிச்சை முறை அளிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.பின்னர் முதலுதவி சிகிச்சை பயிற்சி பெற்ற போலீசாருக்கு சான்றிதழ்களை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், டாக்டர்.பாலமுரளி,டாக்டர்.பிரபலதா மற்றும் மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

    • பூஷ்ணகுமார் அடையாள அட்டைகளை வழங்கினார்
    • 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்பு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பலத்த மழை, சூறாவளி காற்று. நிலச்சரிவு. வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே தீயணைப்பு. வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு இக்கட்டான நேரங்களில் உதவியாக செயல்படுவதற்காக குன்னூரில் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை திட்டத்தின்கீழ் சமுதாய பங்களிப்பின் அவசியம் குறித்த பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர்களுக்கு கோட்டாட்சியர் பூஷ்ணகுமார் அடையாள அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தீயணைப்பு துறையினர் மற்றும் 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளின் தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி
    • பெண் குழந்தைகள் பள்ளி இடை நிற்றலை தவிர்த்தல், குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பம், தற்காப்பு கலை

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளின் தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சியானது சங்ககிரி ஆர்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமை வகித்தார்.

    இதில் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பள்ளி இடை நிற்றலை தவிர்த்தல், குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பம், தற்காப்பு கலை ஆகியவற்றை குறித்து எடுத்துக்கூறி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு சிலம்பு போட்டி நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் பரிசுகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் விஜய் ஆனந்தன் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • முத்தனூர் தனியார் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி
    • அளிப்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினார்கள்.

    வேலாயுதம் பாளையம்,  

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள தனியார் பள்ளியில் சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினத்தை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.

    வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை பயிற்சியை செய்து காட்டினார்கள்.

    வெள்ள பாதிப்புகளின் போது பழைய பொரு ட்களைக் கொண்டு மீட்பு பணிகள் மேற்கொ ள்வது, தீவிபத்தின் போது தற்காப்பு நடவடிக்கை உள்ளிட்ட வைகளை தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்த னர். மேலும் கட்டிட இடி பாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினார்கள்.

    • பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி
    • பயிற்சியின்காலஅளவு 30 நாட்கள்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புபயிற்சி மையத்தின் மூலம்பெண்களுக்கான தையல்கலை பயிற்சி இலவசமாக அளிக்கப்பட இருக்கின்றது.

    மேலும் இப்பயிற்சியில் சிம்மிஸ், பெட்டிக்கோடு, பட்டுப்பாவாடை , யூனிஃபார்ம்ஸ்கர்ட், அரைக்கை சர்ட், யூனிஃபார்ம் டிராயர் , பேபி ஃபிராக், கட்டோரி பிளவுஸ் , நைட்டி , சுடிதார் டாப் , அம்பர்லா டாப் , நைட் சூட் சிறந்த வல்லுநர்களால் கற்று தரப்பட இருக்கின்றது.

    பயிற்சியின்காலஅளவு 30 நாட்கள் பயிற்சிநேரம் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை. பயி ற்சி காலத்தில் மதிய உணவு மற்றும் கா லை,மாலை தேனீர்வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படுகிறது.

    விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஐ.ஓ.பி. வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை வங்கி கணக்கு புத்தகம் , பான் கார்டு ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அக்டோபர் 18-ந் தேதி நடக்கவிருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்ற பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    • பூச்சிகளின் இனப்பெருக்கம் குறித்து அறிந்து கொண்டனர்.
    • காப்பர் சல்பேட் ஏக்கருக்கு 20 கிலோ மணலில் கலந்து வயலில் இட பரிந்துரை செய்யப்பட்டது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே நாகக்குடி ஊராட்சியில் உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது.

    இதில் 25 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு குழுவிற்கு 5 விவசாயிகள் வீதம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் சிலந்தி, பொறிவண்டு, தரை வண்டு, ஊசித்தட்டான், குளவி என தனித்தனியே பெயர்கள் வழங்கப்பட்டன.

    ஒவ்வொரு குழுவும் வயல் பகுதிக்கு சென்று நன்மை, தீமை செய்யும் பூச்சிகளை இனம் கண்டு அவைகளின் இருப்பிடம், உணவு, இனப்பெருக்கம் ஆகியவை குறித்து அறிந்து கொண்டனர்.

    விவசாயிகளுக்கு கும்பகோணம் வட்டார வேளாண்மை அலுவலர் அசோக்ராஜ், கும்பகோணம் வட்டார துணை வேளாண் அலுவலர் சாரதி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடு களை பகுதி உதவி வேளாண்மை அலுவலர் துர்கா தேவி செய்திருந்தார்.

    பயிற்சியில் பார்வையிட்ட வகையில் வயல்களில் பாசி அதிகளவு காணப்பட்டதால் அதனை கட்டுப்படுத்த காப்பர் சல்பேட் ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 20 கிலோ மணலில் கலந்து வயலில் இட பரிந்துரை செய்யப்பட்டது.

    • மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது
    • கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப்பதிவாளா் ரா.மது அறிவிப்பு

    ஊட்டி,

    ஊட்டி ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மைக் கிளையில் நடப்பு ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப் பதிவாளா் ரா.மது கலந்து கொண்டு பேசியதாவது:

    கூட்டுறவு பயிற்சியை ஆா்வம், முழு ஈடுபாட்டுடன் பயில வேண்டும். கூட்டுறவு சங்கத்தின் இருப்பு நிலை குறிப்பு தயாரிப்பதற்கான பயிற்சி, கணக்கு பதிவியல் மற்றும் கூட்டுறவு தணிக்கை பாடங்களின் மூலம் கற்றுத்தரப்படும்.

    நடப்பு ஆண்டுக்கான முழுநேர பட்டயப்பயிற்சி மாணவா் சோ்க்கைக்காண கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அத்தாட்சி செய்த நகல்களுடன் பெற்றோா் அல்லது பாதுகாவலருடன் நேரடியாக வந்திருந்து பயிற்சி நிலைய முதல்வரை அணுகலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

    நிகழ்ச்சியில் ராமலிங்க கூட்டுறவு சங்க துணைப்பதிவாளா் கே.ஆா்.விஜயகணேஷ், விரிவுரையாளா்கள் ஜெ. மணி, சந்திரசேகா் மற்றும் பயிற்சி மாணவ, மாணவியா் ஆகியோா் பங்கேற்றனா்.

    • கறவை மாடு வளா்ப்பு பயிற்சி நாளை 12-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
    • கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி நாளை 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி நாளை 12-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி நாளை 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்தப்பயிற்சியில் பங்கேற்று கறவை மாடு வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களைத் தெளிவு படுத்திக்கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421- 2248524 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாவட்ட, மத்திய திட்டங்கள் வேளாண் துணை இயக்குனர் புனிதா தலைமை வகித்தார்.
    • 2023 - 24ம் ஆண்டு நஞ்சில்லா வேளாண் விளை பொருட்கள் உற்பத்திக்காக வேளாண்துறையால் ஆர்வம் உள்ள 60 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    உடுமலை:

    ஆனைமலை வட்டார வேளாண் விரிவாக்க மையம் சார்பில், பாரம்பரிய வேளாண் மேம்பாட்டு திட்டம் செயல்படுகிறது. 2023 - 24ம் ஆண்டு நஞ்சில்லா வேளாண் விளை பொருட்கள் உற்பத்திக்காக வேளாண்துறையால் ஆர்வம் உள்ள 60 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த விவசாயிகள் மூன்று ஆண்டு காலத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக இயற்கை வேளாண் இடுபொருட்களை தங்கள் தோப்பிலேயே தயாரித்து தென்னை மற்றும் பிற பயிர்களுக்கு குறைந்த செலவில் பயன்படுத்துவது குறித்து, ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பயிற்சி நடந்தது.

    மாவட்ட, மத்திய திட்டங்கள் வேளாண் துணை இயக்குனர் புனிதா தலைமை வகித்தார். ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். பெரம்பலுார் மாவட்ட சர்வதேச அங்ககசான்றிதழ் பெற்ற விவசாயி மணிவாசன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

    பயிற்சியில், தோப்பினை சுற்றி உயிர்வேலியாக சவுக்கு, வேம்பு போன்ற மரங்கள் நெருக்கமாக வளர்த்தல், மழைக்காலங்களில் ரசாயன உரங்கள் பயன்படுத்தும் விவசாய நிலங்களில் இருந்து வரும் மழைநீர் மற்றும் பாசன நீரை தனியே மடை அமைத்து வெளியேற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

    மேலும் 20 வகையான பயறு, சிறுதானிய, எண்ணெய் வித்து பலதானியங்கள், விதைப்பு செய்து, 20 -30 நாட்களுக்குள் மடக்கி உழுதல், தென்னை மட்டை போன்ற பண்ணை கழிவுகளை, 3 அடிக்குள் பண்ணையிலேயே மட்க வைத்தல் குறித்து விளக்கப்பட்டது.பஞ்ச காவ்யா, ஜீவாமிர்தம், மீன்கரைசல் ஆகியவற்றை பயிருக்கு தெளிப்பதால், பயிரில் ஏற்படும் வளர்சிதை மாற்ற நன்மைகள், தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    நன்கு மக்கிய மண் புழு உரம், ஒரு ஆண்டு மக்கிய மாட்டு எரு பயன்படுத்துவதை விவசாயிகள் உறுதி செய்ய வேண்டும். முதலாண்டில் இம்முறைகளை திட்டமிட்டு தோப்புகளில் செயல்படுத்தினால், தரம் மற்றும் விளைச்சலில் குறைவு ஏற்படாது.

    இம்முறையை தொடர்ந்து கடைபிடிப்பதால், சர்வதேச ஏற்றுமதியில் ஈடுபடவும், இவ்விவசாய குழுவை சார்ந்த விவசாயிகளின் விளைபொருட்களின் சந்தை விற்பனை விலையை விட பலமடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வண்ண மீன் வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
    • இப்பயிற்சிக்கு முதலில் பதிவு செய்யும் 28 நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். குறைந்தது 10-ம் வகுப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவாது:-

    நாமக்கல் மோகனூர் ரோட்டில் கால்நடை மருத்து வக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வண்ண மீன் வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

    இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், முதுநிலை கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம்.

    இதேபோல் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இம்மாத இறுதியில் கிராமப்புற இளைஞர்களுக்கான எதிர் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சானக் கொல்லிகள் உற்பத்தி செய்தல் பற்றிய திறன் மேம்பாட்டு பயிற்சி அட்மா திட்டத்தின் நிதியுதவியுடன் 6 நாட்கள் இலவசமாக நடைபெற உள்ளது. கிராமப்புற இளைஞர்களுக்கும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமப்புற இளைஞர்களுக்கும் இப்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு முதலில் பதிவு செய்யும் 28 நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். குறைந்தது 10-ம் வகுப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

    மேற்கண்ட பயிற்சிகளில் கலந்துகொள்ள விரும்பு பவர்கள் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி எண்களை தொடர்புகொண்டோ முன்பதிவு செய்து கொள்ள லாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • திருச்சி - லால்குடிகூட்டுறவு மேலாண்மை டிப்ளமோபயிற்சியில் சேர நாளை கடைசி நாள்
    • 0431-2715748, 9994647631 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    திருச்சி,  

    திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி நிலையத்தின் முதல்வர், லால்குடி கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி நிலையத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

    திருச்சி, லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும் டிப்ளமோ பயிற்சியில் சேருவதற்கு செப்டம்பர் 22-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின் படி விண்ணப்பிக்க நாளை 6-ந்தேதி கடைசி நாள்.

    இப்பயிற்சியில் பிளஸ் 2, பட்டதாரிகள், பத்தாம் வகுப்பு முடித்து டிப்ளமோ படித்து பின்னர் பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டு 1-ந்தேதி 17 வயது நறைவு பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக்கான விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் மூலமாக ரூ.200. பயிற்சி கட்டணம் 18 ஆயிரத்து 750 ரூபாய். பயிற்சி காலம் ஓராண்டு. பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் நகல்கள், புகைப்படம் ஆகியவற்றை மேலாண்மை நிலையத்திற்கு எடுத்து வந்து நேரில் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மேலாண்மை நிலையம், பழைய குட்ஷெட் ரோடு, அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடி வளாகம், சிங்காரத்தோப்பு என்ற முகவரியில் முதல்வரை நேரிலோ அல்லது 0431-2715748, 9994647631 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இதே போல லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம், லால்குடி கூட்டுறவு பல்தோழில் நுட்ப பயிலக கல்லூரி வளாகம், அய்யன் வாய்க்கால் ரோடு, ஆங்கரை கிராமம், லால்குடி என்ற முகவரியில் முதல்வரை நேரிலோ, அல்லது 9489955214 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    ×