search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இயற்கை இடுபொருளை தோட்டத்திலேயே தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
    X

    கோப்புபடம். 

    இயற்கை இடுபொருளை தோட்டத்திலேயே தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி

    • மாவட்ட, மத்திய திட்டங்கள் வேளாண் துணை இயக்குனர் புனிதா தலைமை வகித்தார்.
    • 2023 - 24ம் ஆண்டு நஞ்சில்லா வேளாண் விளை பொருட்கள் உற்பத்திக்காக வேளாண்துறையால் ஆர்வம் உள்ள 60 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    உடுமலை:

    ஆனைமலை வட்டார வேளாண் விரிவாக்க மையம் சார்பில், பாரம்பரிய வேளாண் மேம்பாட்டு திட்டம் செயல்படுகிறது. 2023 - 24ம் ஆண்டு நஞ்சில்லா வேளாண் விளை பொருட்கள் உற்பத்திக்காக வேளாண்துறையால் ஆர்வம் உள்ள 60 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த விவசாயிகள் மூன்று ஆண்டு காலத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக இயற்கை வேளாண் இடுபொருட்களை தங்கள் தோப்பிலேயே தயாரித்து தென்னை மற்றும் பிற பயிர்களுக்கு குறைந்த செலவில் பயன்படுத்துவது குறித்து, ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பயிற்சி நடந்தது.

    மாவட்ட, மத்திய திட்டங்கள் வேளாண் துணை இயக்குனர் புனிதா தலைமை வகித்தார். ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். பெரம்பலுார் மாவட்ட சர்வதேச அங்ககசான்றிதழ் பெற்ற விவசாயி மணிவாசன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

    பயிற்சியில், தோப்பினை சுற்றி உயிர்வேலியாக சவுக்கு, வேம்பு போன்ற மரங்கள் நெருக்கமாக வளர்த்தல், மழைக்காலங்களில் ரசாயன உரங்கள் பயன்படுத்தும் விவசாய நிலங்களில் இருந்து வரும் மழைநீர் மற்றும் பாசன நீரை தனியே மடை அமைத்து வெளியேற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

    மேலும் 20 வகையான பயறு, சிறுதானிய, எண்ணெய் வித்து பலதானியங்கள், விதைப்பு செய்து, 20 -30 நாட்களுக்குள் மடக்கி உழுதல், தென்னை மட்டை போன்ற பண்ணை கழிவுகளை, 3 அடிக்குள் பண்ணையிலேயே மட்க வைத்தல் குறித்து விளக்கப்பட்டது.பஞ்ச காவ்யா, ஜீவாமிர்தம், மீன்கரைசல் ஆகியவற்றை பயிருக்கு தெளிப்பதால், பயிரில் ஏற்படும் வளர்சிதை மாற்ற நன்மைகள், தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    நன்கு மக்கிய மண் புழு உரம், ஒரு ஆண்டு மக்கிய மாட்டு எரு பயன்படுத்துவதை விவசாயிகள் உறுதி செய்ய வேண்டும். முதலாண்டில் இம்முறைகளை திட்டமிட்டு தோப்புகளில் செயல்படுத்தினால், தரம் மற்றும் விளைச்சலில் குறைவு ஏற்படாது.

    இம்முறையை தொடர்ந்து கடைபிடிப்பதால், சர்வதேச ஏற்றுமதியில் ஈடுபடவும், இவ்விவசாய குழுவை சார்ந்த விவசாயிகளின் விளைபொருட்களின் சந்தை விற்பனை விலையை விட பலமடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×