search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்ண மீன்"

    • வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வண்ண மீன் வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
    • இப்பயிற்சிக்கு முதலில் பதிவு செய்யும் 28 நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். குறைந்தது 10-ம் வகுப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவாது:-

    நாமக்கல் மோகனூர் ரோட்டில் கால்நடை மருத்து வக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வண்ண மீன் வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

    இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், முதுநிலை கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம்.

    இதேபோல் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இம்மாத இறுதியில் கிராமப்புற இளைஞர்களுக்கான எதிர் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சானக் கொல்லிகள் உற்பத்தி செய்தல் பற்றிய திறன் மேம்பாட்டு பயிற்சி அட்மா திட்டத்தின் நிதியுதவியுடன் 6 நாட்கள் இலவசமாக நடைபெற உள்ளது. கிராமப்புற இளைஞர்களுக்கும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமப்புற இளைஞர்களுக்கும் இப்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு முதலில் பதிவு செய்யும் 28 நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். குறைந்தது 10-ம் வகுப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

    மேற்கண்ட பயிற்சிகளில் கலந்துகொள்ள விரும்பு பவர்கள் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி எண்களை தொடர்புகொண்டோ முன்பதிவு செய்து கொள்ள லாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×