search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்கள்"

    • ஆசிரியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் இன்று நடைபெறும் என தமிழக பள்ளி கல்வித் துறை அறிவித்தி ருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் எண்ணும் எழுத்தும் பயிற்சி இன்று நடந்தது.

    இந்த நிலையில் விருது நகர் மாவட்ட பள்ளி ஆசிரி யர்களுக்கு விருது நகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இன்று காலை பயிற்சி நடைபெறும் கல்லூரிக்கு வந்த

    200-க்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததால் அதிருப்தியடைந்தனர். அவர்கள் பயிற்சியை புறக்கணித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆசிரியர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போதிய அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாத கல்லூரியில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மையத்திற்கு வந்து செல்வது மற்றும் பயிற்சியில் பங்கேற்பது சிரமமாக உள்ளதாகவும், இதனால் பயிற்சியை வேறு மையத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் அப்போது அவர்கள் கூறினர்.

    போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அங்கிருந்த கலைந்து செல்ல மறுத்த ஆசிரியர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த சாலையில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
    • பணி நிரந்தரம் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும்.

    சென்னை:

    தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

    மாநில தலைவர் சேசுராஜா, மாநில செயலாளர் ராஜா தேவகாந்த், மாநில பொருளாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலையில் தொடர் உண்ணாவிரதம் நடந்தது.

    தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    உடற்கல்வி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 12 ஆண்டுகளாக 16,459 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம்.

    பணி நிரந்தரம் செய்யக் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த காலங்களில் முதல்வர், கல்வி அமைச்சர் கவனத்தை பெற கவன ஈர்ப்பு, காத்திருப்பு போராட்டம் நடைபெற்றும் எந்த பலனும் இல்லை. 12 ஆண்டுகளாக வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் எங்களின் ஒற்றை கோரிக்கையான பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதம் இருக்கிறோம். பணி நிரந்தரம் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வட்டார வாரியாக 152 தமிழ் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு தமிழ் ஆசிரியர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • அனைத்து மாணவர்களையும் தமிழில் எழுத மற்றும் படிக்க வைக்க தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை செயின் மேரீஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழ் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி மற்றும் பயிற்சி கட்டகம் வெயிடுதல் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரக்கூடிய மாணவ- மாணவிகளில் தமிழ் எழுத, வாசிக்க தெரியாத மாணவர்களுக்காக மாவட்ட கலெக்டர் தலைமையிலும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முன்னிலையிலும் ஒவ்வொரு பள்ளியிலிருந்து ஒருங்கிணைப்பு தமிழ் ஆசிரியர்கள் மொத்தம் 152 பேர் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு வட்டாரம் வாரியாக இந்த 152 தமிழ் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு தமிழ் ஆசிரியர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டு இவர்களின் செயல்பாடுகளை கவனிக்க 29 தலைமை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நிகழ்ச்சியில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு 55 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்.தொடர்ந்து மாவட்டம் முழுமையும் ஒரே மாதிரியாக இந்த மாணவர்களுக்கு நடத்தப்பட்டு மாதம் இருமுறை இந்த மாணவர்களுக்கு தேர்வும் நடத்தி அனைத்து மாணவர்களையும் தமிழில் எழுத மற்றும் படிக்க வைக்க தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவை அனைத்தையும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு பள்ளியாக சென்று ஆய்வு செய்து மாதம் 2 முறை அறிக்கைகள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முத்தையா அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று மதுரையில் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் மாநிலத் தலைவர் மூ.மணி மேகலை தலைமையில் நடைபெற்றது.

    துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன் முன்னிலை வகித்தார். எஸ்.டி.எப்.ஐ. பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜாண் கிறிஸ்துராஜ் வரவேற்புரை ஆற்றினார். மாநிலப் பொருளாளர் ஜீ.மத்தேயு நன்றி கூறினார்.

    கூட்ட முடிவுகள் குறித்து மாநில பொதுச்செயலாளர் ச.மயில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை. எனவே, தி.மு.க அரசு தனது தேர்தல் அறிக்கையில் எழுத்து மூலமாகக் கொடுத்த வாக்குறுதிகளின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    1.6.2009-க்குப் பின்பு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவின் அறிக்கையை விரைவாகப் பெற்று ஊதிய முரண்பாடுகளை களைவதுடன், மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழ்நாட்டின் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

    அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயிலும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலைச் சிற்றுண்டித் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும், சலுகைகளும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

    தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்மு றையீடு செய்வதோடு, பதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வு தேவையில்லை என்பதைக் கொள்கை முடிவாக அறி விக்க வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலி யாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களை மாணவர்களின் கல்வி நலன் கருதி காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை விரைந்து பெற்று புதிய மாநிலக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும்.

    ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன், சமூக நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வருகிற 29-ந்தேதி சென்னையில் நடைபெறும் கோட்டை நோக்கிப் பேரணியில் 10 ஆயிரம் ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்திட மாநிலச் செயற்குழு முடிவு செய்துள்ளது.

    மேலும், தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ ரத்து செய்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 3-ந்தேதி டெல்லியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நடத்தும் பேரணியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 500 ஆசிரியர்கள் பங்கேற்பதெனவும் மாநில செயற்குழு முடிவு செய்து உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தொண்டி அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.
    • மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவா டானை பஞ்சாயத்து யூனி யன் மேற்கு தொடக்கப் பள்ளியானது தூய்மைக்கான மாநில அரசின் விருது பெற்ற பள்ளியாகும். இந்த பள்ளியின் தலைமையாசி ரியர் நல்லாசிரியர் விருது பெற்றவர்.

    இந்த நிலையில் இப் பள்ளியில் எண்ணும், எழுத்தும், காலை உணவு திட்டம் போன்ற கல்வி சம்பந்தமான அரசின் திட்டங்களை நிறைவேற்ற ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றோர்-ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு தயாராக உள்ள நிலையில், கடந்த 3 ஆண்டு களுக்கும் மேலாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

    இந்த பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை 250 மாணவ-, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு 8 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற் போது 4 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ள னர். இதனால் மாணவ-மாணவிகள் சிரமமடைந்துள்ளனர்.

    தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த வசதியில்லாத மாணவ-மாணவிகள் அரசு பள்ளியை நம்பி வருகின்ற னர். இந்த நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை யால் முழுமையாக கல்வியை பெற முடி யவில்லை. ஆனால் அதிகாரி கள் இதுகுறித்து பாராமுக மாக இருப்பதாக கூறப்படு கிறது.

    காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவ தில் அக்கறையுடன் செயல் படவில்லை என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி குறித்த அறிக்கைகளை மாதந்தோறும் பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள் அதில் கூறப்பட்டுள்ள குறைகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் மாணவ-மாணவகளின் எதிர்காலம் கேள்வி குறியாகும் அபாயம் உள்ளது.

    இந்த நிலையில் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவிடைமருதூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    சுவாமிமலை:

    பள்ளிகளில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின் படி ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் பணிகளை, ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவிடைமருதூர் வட்டார கிளை சார்பில் திருவிடைமருதூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு டாக்டர். லாடமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் வட்டார செயலாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாவட்ட பொருளாளர் நாகராஜன், சங்க ஆலோசகர் மறைமணி, வட்டார பொருளாளர் சுரேஷ் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாநில அளவிலான வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    விழுப்புரம்:

    வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். செயலாளர் சந்தியா காப்பர் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் அன்புமணி விளக்க உரையாற்றினார். இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மேற்கொள்ளும் பணிகளை ஆசிரியர் பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல்,மரக்காணத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அளவிலான வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

    • விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைக்கிறார்
    • ரதயாத்திரை மொத்தம் உள்ள 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 30 நாட்களில் கடந்து செல்கிறது.

    கன்னியாகுமரி :

    அகில இந்திய ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இணைந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்க கோரியும், கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை ரதயாத்திரை நடத்த முடிவு செய்துள்ளது.

    அதன்படி இந்த ரத யாத்திரையின் தொடக்க விழா நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடக்கிறது. இந்த ரத யாத்திரையின் தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்குகிறார். மாநில பொதுச்செயலாளர் ரங்கராஜன் வரவேற்று பேசுகிறார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கொடியசைத்து ரதயாத்திரையை தொடங்கி வைக்கிறார். கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த ரத யாத்திரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, குஜராத், ஜார்க்கண்ட் உள்பட பல்வேறு மாநிலங்களை கடந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி டெல்லியை சென்றடைகிறது. இந்த ரதயாத்திரை மொத்தம் உள்ள 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 30 நாட்களில் கடந்து செல்கிறது.

    • 6 அம்ச கோரிக்கை களை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம்
    • ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    கடலூர்:

    தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தைப் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கைவிட வே ண்டும், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பி.எட் மாணவ ர்களைக் கொண்டு ஆசிரி யர்களின் கற்பித்தலை மதிப்பிடும் இயக்குநரின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும், தொடக்கக்கல்வி மாணவ ர்களுக்கான இணைய வழி ஆன்லைன் தேர்வுகளைக் கைவிட வேண்டும், எமிஸ் இணையதளத்தில் தேவை யற்ற பதிவுகளை மே ற்கொள்ள ஆசிரியர்களை நிர்பந்திக்க கூடாது, காலை உணவுத் திட்டத்தை 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்த வேண்டும், காலை உணவுத் திட்டப் பணியிலி ருந்து தலைமை ஆசிரியர்க ளையும், ஆசிரியர்களையும் விடுவித்து அத்திட்டம் சார்ந்த அனைத்துப் பணிக ளையும் சத்துணவு ஊழியர்க ளிடம் வழங்க வேண்டும் போன்ற 6 அம்ச கோரிக்கை களை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடந்த து. இந்த ஆர்ப்பாட்டம் பண்ரு ட்டி வட்டார கல்வி அலுவல கம் முன்பு நகர தலைவர் கீதா தலைமையில், ஏழும லை, சாந்தகுமார், முன்னி லையில் நடைபெற்றது. தொடர்ந்து நகர செயலாளர் உமா வரவேற்று பேசினார். வட்டாரச் செயலாளர் சாந்தகுமார் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட துணைசெயலாளர் நாராயணமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். இறுதியில் வட்டாரப் பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார். 

    • ஊராட்சி பகுதிகளில் பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர்.
    • பள்ளி தலைமை ஆசிரியர் சின்னசாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கினர்.

    அதன்படி செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டாபட்டி அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவினை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துராமன் வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னசாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் கோவி லாங்குளம் ஊராட்சிக் குட்பட்ட கருகப்பிள்ளை அரசு பள்ளியில் தலைவர் ஜெயந்தி முத்துராமன் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தை களுக்கு உணவு வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராட்சி பிரேமா, ராமர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சியில் தலைவர் முத்துலட்சுமி இருளப்பன் தொடங்கி வைத்தார்.இதில் துணைத் தலைவர் வனிதா சுரேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் உஷாதேவி, ஊராட்சி செயலாளர் விஜயபாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் பள்ளி குழந்தைகளுக்கு சமையல் செய்வதற்காக தன்னார்வலர்களாக வந்த மூன்று பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

    ஆ.கொக்குளம் ஊராட்சியில் தலைவர் நர்மதா கபி.காசிமாயன், கருமாத்தூர் ஊராட்சியில் தலைவர் பாண்டீஸ்வரி இளங்கோவன், கிண்ணிமங்கலம் ஊராட்சியில் தலைவர் மயில்முருகன், கொ.புளியங்குளம் ஊராட்சியில் தலைவர் சிவகாமி தர்மர், நாகமலை புதுக்கோட்டை ஊராட்சியில் தலைவர் பாப்பாத்தி, மேலக்குயில்குடி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் தலைவர் ஜெயபிரபு, கொடிமங்கலம் ஊராட்சியில் தலைவர் உமாதேவி திருக்குமரன் ஆகியோர் முதல்வரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினர்.

    இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 11-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை 12 கட்டங்களாக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • மாணவர்களை எளிதாக ஆங்கிலம் வாசிக்க வைப்பதற்கான முறைகள் குறித்து சிறப்பு கருத்தாளர் ஆர்த்தி பயிற்சி அளித்தார்.

    சங்கரன்கோவில்:

    அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கிலத்திறனை மேம்படுத்துவதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை பலவிதமான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்கி வருகிறது.

    இதன் ஒரு கட்டமாக தமிழ்நாடு முழுவதும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "ஜாலி போனிக்ஸ்" என்ற பெயரில் ஆங்கில ஒலிப்பு பயிற்சி மற்றும் ஒலியின் அடிப்படையில் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளை எளிதில் வாசிக்க வைப்பது தொடர்பான பயிற்சி 2 நாட்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்தையா வழிகாட்டுதலின்படி கடந்த 11-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை 12 கட்டங்களாக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

    முதல் கட்ட பயிற்சியானது சங்கரன்கோவில் வட்டார தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கரிவலம்வந்தநல்லூர் ஆ.ம.செ.அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. பயிற்சியினை மாவட்ட உதவி திட்ட அலுவலர் சீவலமுத்து தலைமை தாங்கி தொடங்கி வைத்து பயிற்சியின் நோக்கங்கள் குறித்து பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன் வரவேற்று பேசினார். மேலும், குழந்தை மைய வழிமுறையில் உச்சரிப்பு, ஒலி முறையின் அடிப்படையில் மாணவர்களை எளிதாக ஆங்கிலம் வாசிக்க வைப்பதற்கான முறைகள் குறித்து சிறப்பு கருத்தாளர் ஆர்த்தி பயிற்சி அளித்தார். பயிற்சியில் சங்கரன்கோவில் வட்டாரத்தை சேர்ந்த 79 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தயாளன், சங்கரன்கோவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துச்செல்வி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்து வருகின்றனர்.

    • பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவராக சபரி என்பவர் கடந்த சுமார் 1½ ஆண்டாக இருந்து வருகிறார்.
    • தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்த் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கேத்துரெட்டிப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 173-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவராக சபரி என்பவர் கடந்த சுமார் 1½ ஆண்டாக இருந்து வருகிறார்.

    அவரின் குழந்தைகள் இந்த அரசு பள்ளியில் படிக்காத நிலையில் அவர் அரசியல் கட்சியில் உள்ளதால் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது தெரிய வந்தது.

    எனவே அவரை மாற்றி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி முன்பு இன்று காலை திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாணவர்களும் இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்த் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது பெற்றோர், ஆசிரியர் கழக தலைவரை மாற்ற வேண்டும் என பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பள்ளி விடுமுறை என பெற்றோர்கள் தெரிவித்த நிலையில் நேற்று சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் ஆப்சென்ட் ஆகி இருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    ×