search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி பகுதிகளில் பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர்
    X

    ஊராட்சி பகுதிகளில் பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர்

    • ஊராட்சி பகுதிகளில் பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர்.
    • பள்ளி தலைமை ஆசிரியர் சின்னசாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கினர்.

    அதன்படி செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டாபட்டி அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவினை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துராமன் வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னசாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் கோவி லாங்குளம் ஊராட்சிக் குட்பட்ட கருகப்பிள்ளை அரசு பள்ளியில் தலைவர் ஜெயந்தி முத்துராமன் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தை களுக்கு உணவு வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராட்சி பிரேமா, ராமர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சியில் தலைவர் முத்துலட்சுமி இருளப்பன் தொடங்கி வைத்தார்.இதில் துணைத் தலைவர் வனிதா சுரேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் உஷாதேவி, ஊராட்சி செயலாளர் விஜயபாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் பள்ளி குழந்தைகளுக்கு சமையல் செய்வதற்காக தன்னார்வலர்களாக வந்த மூன்று பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

    ஆ.கொக்குளம் ஊராட்சியில் தலைவர் நர்மதா கபி.காசிமாயன், கருமாத்தூர் ஊராட்சியில் தலைவர் பாண்டீஸ்வரி இளங்கோவன், கிண்ணிமங்கலம் ஊராட்சியில் தலைவர் மயில்முருகன், கொ.புளியங்குளம் ஊராட்சியில் தலைவர் சிவகாமி தர்மர், நாகமலை புதுக்கோட்டை ஊராட்சியில் தலைவர் பாப்பாத்தி, மேலக்குயில்குடி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் தலைவர் ஜெயபிரபு, கொடிமங்கலம் ஊராட்சியில் தலைவர் உமாதேவி திருக்குமரன் ஆகியோர் முதல்வரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினர்.

    இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×