search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காட்சி"

    • சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்
    • கண்காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வையிட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் உள்ள மாவட்ட அரசு அருங்காட்சிய கத்தில் ஏராளமான அரிய பொருட்கள் உள்ளன. இந்த பொருள்களின் முக்கியத்து வத்தை எடுத்துக்கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு பொருள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தமாதம் கலைநயம் மிக்க பாரம்பரிய விளக்குகள் கண்காட்சிகள் இடம்பெற்றன.

    கலை ஆர்வம் மிக்க நமது முன்னோர்கள் செம்பிலும், பித்தளையிலும் மிகுந்த கலை நுணுக்கத்துடன் வீட்டு உபயோக பொருள்களை வடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக விளக்குகளில் பல்வேறு வகையான விளக்குகளை பயன்படுத்தி உள்ளனர். இந்த கண்காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வை யிட்டனர். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள விளக்குகளை பார்ப்பவர்கள் காமாட்சி அம்மன் விளக்கு என்று கூறினர். ஆனால் உண்மையில் இவை கஜ லட்சுமி விளக்குகள் என்று சொல்லப்படுகின்றன.2 யானைகளுக்கு நடுவில் அம்மன் உள்ளது. கஜம் என்பது சமஸ்கிருதத்தில் யானையை குறிக்கும். 19-ம் நூற்றாண்டில் இந்த மாதிரியான விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ள விளக்குகள் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. நமது முன்னோர்கள் பயன்படுத்திய அரும் பொருட்களின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே கண்காட்சியின் நோக்கம் என்று கன்னியாகுமரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்தார்.

    • அகில இந்திய நாய்கள் கண்காட்சி சேலம் நான்கு ரோடு சிறுமலர் பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • 45 வகையான 425 நாய்கள் கலந்து கொண்டன.

    சேலம்:

    அகில இந்திய நாய்கள் கண்காட்சி சேலம் நான்கு ரோடு சிறுமலர் பள்ளி வளாகத்தில் நடந்தது.

    இந்த கண்காட்சியில் பூனா, கோலாப்பூர், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், போபால், கொல்கத்தா, மற்றும் பல மாநிலங்களில் இருந்து பொமோரியன், டேஸ் ஹவுண்ட், பீகிள், ராடுவில்லர், டால்மேசன், கேன் கார்சோ, செயின்ட், கிரேடன், ராஜபாளையம், புல்டாக், சலூகி, பூடுல், ஐரிஸ்டிடம் உள்பட 45 வகையான 425 நாய்கள் கலந்து கொண்டன.

    வெற்றி பெற்ற நாய்களுக்கு பழக்கம் வழங்கப்பட்டது. நடுவர்களாக டாசன், ஆண்டோனியா, ரஞ்சித், முன்ஜால் செயல்பட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தலைவர் விசு காளியப்பன் செயலாளர் சாந்தமூர்த்தி பொருளாளர் சீனிவாசன் துணைத் தலைவர்கள் நடராஜ், பிரகாஷ், இணைச் செயலாளர் மோகன்ராஜ், அண்ணாதுரை மற்றும் பலர் செய்திருந்தனர்.

    • புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் முதல் புகைப்பட கேமிரா, திரைப்பட கருவி கண்காட்சி நடைபெற்றது
    • பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முதல் சினிமா கருவியை பார்த்து வியந்து அவற்றோடு செல்பி எடுத்துக் கொண்டனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, முதல்புகைப்படக்கருவி மற்றும் திரைப்படக்கருவி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. புகைப்படத்திலிருந்து சினிமா என்கிற நிலைக்கு தொழில்நுட்பமாற்றம்நிகழ்த்திய கருவிகளை சேகரித்து பாதுகாத்து வரும் நா. முகமதுஅப்சர்என்ற பதினொன்றாம் வகுப்பு மாணவன் காட்சிப்படுத்தியிருந்தார். முதல்சினிமா கருவியோடு உலகத் திரைப்பட தினத்தை முன்னிட்டு சினிமாதொழில் நுட்பம் வளர்ந்த வரலாறுகளை மாணவன் விளக்கிக் கூறினார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முதல் சினிமா கருவியை பார்த்து வியந்து அவற்றோடு செல்பி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் பள்ளிமுதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மாணவனைப் பாராட்டி பரிசு வழங்கினார். துணை முதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரியர்கள் பலர்கலந்து கொண்டனர்.

    • ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது.
    • அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது பிரமாண்டமாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது.

    பொன்விழா மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அனைத்து அம்சங்களுடனும், தகவல்களுடனும் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முன்னோடி திட்டங்களான தாலிக்கு தங்கம், மாணவ-மாணவிகளுக்கு லேப்-டாப், அம்மா உணவகம் ஆகியவை குறித்து மாதிரிகளுடன் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.

    ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது, தொட்டில் குழந்தை திட்டம் போன்றவை குறித்தும் தகவல்களும், மாதிரிகளும் இடம்பெற்றிருந்தன. ஜெயலலிதாவை சமூக நீதி தலைவராக அடையாளம் காட்டிய 69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்த தீர்மானம் பிரமாண்டமாக காட்சிப்படுத்தபட்டிருந்தது.

    1989-ம் ஆண்டு சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் ஜெயலலிதாவின் சபதம் ஆகியவை குறித்தும் படங்கள் மூலம் விளக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் எம்.ஜி.ஆர்., ஆட்சியில் சத்துணவு திட்ட அமைப்பாளராக இருந்தது, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறித்த புகைப் படங்களும் இடம் பெற்றிருந்தன.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது, புதிய மாவட்டங்கள் மற்றும் வருவாய் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட நலத்திட்டங்கள் குறித்து மாதிரிகளும், புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தது.

    அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது பிரமாண்டமாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது. மேலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலங்களில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் புகைப்படங்களுடன் விளக்கப்பட்டிருந்தன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கட்-அவுட்களும் வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சி அரங்கை தொண்டர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

    நீண்ட காலமாக கட்சியில் உள்ள தொண்டர்கள் தங்கள் பழைய நினைவுகளை அங்கிருந்த படங்களை சுட்டிக்காட்டி அருகில் இருந்தவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அ.தி.மு.க. வரலாற்று அரங்கமாக கண்காட்சி அரங்கம் காட்சி அளித்ததாக தொண்டர்கள் கூறினர்.

    • மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் அருகே தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், அமைச்சர் கள், மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகள் ஆகியவைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியை 200 -க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏளாளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

    • திருக்கோகர்ணத்தில் பழங்காலப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது
    • வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடந்த கண்காட்சியினை ஏராளமானவர்கள் பார்வையிட்டனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் பழங்காலப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் ஆலோசகர் கவிஞர் அஞ்சலி தேவிதங்கம்மூர்த்தி தொடங்கிவைத்தார்.பின்னர் அவர் பேசிய போது,இந்தக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொருட்களைப் பார்க்கின்ற போது நமக்கு பழைய ஞாபகங்கள் வந்துவிடுகின்றன. மரத்தாலான பொருட்கள், பீங்கான்பொருட்கள், போன்ற அரியவகை பொருட்களை இந்தத்தலைமுறை அறிந்து கொள்ள இந்தக்கண்காட்சி பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.நெகிழிப்பயன்பாடுகளை தவிர்க்கவேண்டிய கட்டயாத்திலிருக்கின்ற இந்தக்காலத்தில் இதுபோன்ற பழையபுராதன பொருட்கள் மறுபடி பயன்பாட்டுக்கு வந்தால் இயற்கையை பாதுகாக்கலாம் காண்போரை வியக்கவைத்தது கண்காட்சி என்று தெரிவித்தார்.இந்தகண்காட்சியை ஏற்பாடு செய்து நடத்திய முற்போக்குஎழுத்தாளர் சங்கத்தின் நகரத்தலைவர், தொல்லியல்துறை மாவட்டப் பொறுப்பாளர் கவிஞர் சு.பீர்முகமது காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை பற்றிய விளக்கங்களை பார்வையாளர்களுக்கு விளக்கினார்.விழாவில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, கோமதிப்பிள்ளை ஆசிரியர்கள் கணியன்செல்வராஜ், உதயகுமார், கவிஞர்கள் சுரேஷ் மான்யா, புதுகைப்புதல்வன், ஈழபாரதி. பேராசிரியர் ராமன், மற்றும் ஏராளமானபொதுமக்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

    • அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் கல்லூரி சந்தை நடைபெற்றது
    • திண்டுக்கல் மாவட்ட த்தில் உள்ள 25 சுய உதவி குழுக்கள் மற்றும் மதுரை, தேனி, ராமநாதபுரத்தை சேர்ந்த சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.

    திண்டுக்கல்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் கல்லூரி சந்தை நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல் மாவட்ட த்தில் உள்ள 25 சுய உதவி குழுக்கள் மற்றும் மதுரை, தேனி, ராமநாதபுரத்தை சேர்ந்த சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது. சிறுதானிய உணவுகள், ஜெல்லி மிட்டாய், தரை விரிப்புகள், டெரகோட்டா வெண்பொம்மைகள், கீ செயின், சின்னாளபட்டி சுங்குடி மற்றும் பட்டுச் சேலைகள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. ரூ.10 முதல் ரூ.2000 வரையிலான பொருட்களை கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர்.

    இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் சரவணன், மேலாளர் வேல்முருகன், கல்லூரி முதல்வர் லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நாமக்கல் கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
    • கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மருத்துவ காப்பீடு அட்டையினை 20 பணியாளர்களுக்கும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 12 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் முத்ரா கடன் உதவிகளையும் வழங்கினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நாமக்கல் கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மருத்துவ காப்பீடு அட்டையினை 20 பணியாளர்களுக்கும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 12 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் முத்ரா கடன் உதவிகளையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் டாக்டர் உமா பேசியதாவது:-

    கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்டு 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக நாடு முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.

    கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியா ளர்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டையும் நெச வாளர் முத்ரா திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்க ளுக்கு முத்ரா கடன் உதவி களும் வழங்கப்படுகிறது. இதுபோன்று நெசவா ளர்களின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வரு கிறது. நெசவாளர்கள் இத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து சிறப்பாக நெசவுத் தொழில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவா ளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி துண்டுகள், வேட்டி கள், காட்டன் சேலைகள், காட்டன் கோர்வை சேலைகள், ஜமுக்காளம் இடம்பெற்றுள்ளன.

    நிகழ்ச்சியில் கைத்தறி உதவி இயக்குனர் பழனி குமார், தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ஜெயலட்சுமி, கைத்தறித்துறை அலுவ லர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து ராசிபுரம் நகராட்சி வேலா பூங்கா அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தவறிய தடுப்பூசி தவணைகளை செலுத்தும் சிறப்பு முகாமினையும் கலெக்டர் உமா பார்வையிட்டார்.

    • பூம்புகார் விற்பனை நிலையத்தில் உள்ள பொருட்களை மேயர் பார்வையிட்டார்.
    • ரூ.75 முதல் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் இடம் பெற்றுள்ளன.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருட்களின் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது. அதன்படி தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி, விற்பனையை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார் .

    தொடர்ந்து அவர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் உள்ள பொருட்களை பார்வையிட்டார். கலைத்தட்டுக்களில் நுணுக்கமான முறையில் கருணாநிதி உருவம் பதிக்கப்பட்டதை பார்வையிட்டார். இந்த கண்காட்சி மற்றும் விற்பனையில் கலைத்தட்டுக்கள், சுவாமி மலையில் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட கடவுளின் சிலைகள், நாச்சியார் கோவில், மதுரை, வாகைக்குளத்தில் செய்யப்படும் பித்தளை விளக்குகள், காகிதக்கூழ் பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நவரத்தின கற்கள், கருங்காலி மாலைகள், ஸ்படிக மாலைகள், சந்தற மாலைகள், வாசனை திரவியங்கள், வெள்ளை மரம் , செம்மர கூலினால் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள், காட்டன் புடவைகள் உள்பட பல்வேறு பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

    இக்கண்காட்சியில் ரூ. 75 முதல் ரூ. 2,00,000 வரை மதிப்பிலான பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் இடம் பெற்றுள்ளன. வருகிற 19ஆம் தேதி வரை இந்த சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் பூம்புகார் விற்பனை நிலையம் மேலாளர் சக்திதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் திறந்து வைத்தார்
    • கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது

    திருச்சி 

    1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கிரடாய்(இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) அமைப்பின் அங்கமான திருச்சி கிரடாய் சார்பில் திருச்சியில் ஆண்டுதோறும் வீடுகளின் கண்காட்சி நடத்தப்படுகிறது. 8-வது ஆண்டாக திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் ஃபேர்ப்ரோ-2023 என்ற பெயரில் வீடுகளின் கண்காட்சி மத்திய பஸ்நிலையம் அருகே கலையரங்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்த கண்காட்சி 6-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

    கண்காட்சியை திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் திறந்து வைத்து மலரை வெளியிட்டார். கலெக்டர் பிரதீப் குமார் முன்னிலை வகித்தார்.

    விழாவில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், தினமலர் ஆசிரியர் ராமசுப்பு, இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் ஸ்ரீமதி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நவீன் குமார்,

    திருச்சி கிரடாய் அமைப்பு சேர்மன் கோபிநாதன், அவங்கதலைவர் ரவி, பேர்ப்ரோ கமிட்டி தலைவர் மோகன் சீனிவாசன்.

    அகில இந்திய கிரடாய் துணைத்தலைவர் (தெற்கு) ஸ்ரீதரன், தமிழ்நாடு கிரடாய் தலைவர் இளங்கோ, செயலாளர் ஆனந்த்,

    கிரடாய் செயலாளர் மனோகரன், பொருளாளர் முகமதுஇப்ராகிம், ஃபேர் ப்ரோ செயலாளர் நசுருதீன், ஆலோசகர் ஷாஜகான்

    உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் அனைத்து சேவைகளும் ஒரே கூரையின் கீழ் இருப்பதால் என்ன விலையில், எங்கு வீடு வாங்கலாம் என்பதை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.மேலும், கண்காட்சியில் வீடு வாங்க குறைந்த வட்டி வீதத்தில் வங்கி கடனுதவியை எளிதாக பெறுவதற்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    கண்காட்சியில் 1000-க்கும் மேற்பட்ட படைப்புகளை 24 கட்டுமான நிறுவனத்தினர்களும், 6 வங்கிகள் மற்றும் வீடுகளுக்கான கதவுகள், டைல்ஸ், உள்அலங்காரம், எலக்ட்ரிகல் போன்ற 8 நிறுவனங்களுடன் 50 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    கண்காட்சியில் வீடு வாங்குபவர்களுக்கு வெவ்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கப்படுகிறது. இங்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை உடன் குடிபுகும் நிலையிலும், சில மாதங்களில் முடிவுறும் நிலையிலும் வீடுகள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. கண்காட்சியினை பார்வையிடுவதற்கு அனுமதி இலவசம் ஆகும்.

    • நிறைவு நாளான 6-ந்தேதி நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
    • கண்காட்சியில் கட்டிடம் மற்றும் வீடுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில்

    நாகர்கோவில் :

    பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கன்னியாகுமரி சென்டர் சார்பாக கட்டிட பொருட்களின் கண்காட்சி நாகர்கோவில் பெருமாள் திருமண மண்டபத்தில் நாளை (4-ந்தேதி) தொடங்கி வருகிற 6-ந்தேதி வரை 3 நாட்கள் காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. கண்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கட்டிட பொருட்களின் கண்காட்சியை நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் ஆனந்த் மோகன் திறந்து வைக்கிறார். பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா அகில இந்திய முன்னாள் தலைவர் என்ஜினீயர் வேதானந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கன்னியாகுமரி சென்டர் நிறுவன தலைவர் என்ஜினீயர் ஜஸ்டின்பால் கவுரவ விருந்தினராக கலந்துகொள்கிறார். கட்டிட பொருட்களின் கண்காட்சியின் நிறைவு நாளான 6-ந்தேதி நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    இந்த கண்காட்சியில் கட்டிடம் மற்றும் வீடுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கண்டுகளிக்க மற்றும் அதன் உபயோகத்தை தெரிந்து கொள்வதற்கு வசதியாக அமைந்துள்ளது. கட்டிட பொருட்களின் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கன்னியாகுமரி சென்டர் தலைவர் என்ஜினீயர் காசிநாதன், பில்ட் எக்ஸ்போ தலைவர் என்ஜினீயர் கோவிந்தன், பில்ட் எக்ஸ்போ துணை தலைவர் என்ஜினீயர் சரவணா சுப்பையா, பில்ட் எக்ஸ்போ செயலாளர் என்ஜினீயர் தாமஸ் பிரேம்குமார், பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கன்னியாகுமரி சென்டர் செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர், பில்ட் எக்ஸ்போ துணை செயலாளர் என்ஜினீயர் ராஜேஷ் குமார், பில்ட் எக்ஸ்போ பொருளாளர் ஆல்பர்ட் நெல்சன் மற்றும் முன்னாள் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து செய்து வருகிறார்கள். 

    • புதுக்கோட்டை 6வது புத்தகத் திருவிழாவில் 112 அரங்குகளில், 3 லட்சம் புத்தகங்கள்
    • அமைச்சர் மெய்யநாதன் தகவல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகர மன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 6வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சுற்றுச்சூழல் மற்றும்காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு, பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, இந்த புத்தக திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 75 பதிப்பகங்களிலிருந்து சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுஅறிவு, அறிவியல், அரசியல், கவிதைகள், வரலாறுகள் உள்ளிட்ட எண்ணற்றத் தலைப்புகளின்கீழ் புத்தகங்கள் கிடைக்கப்பெறுகின்றன. 112 அரங்குகளில் இதற்காக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தக திருவிழா ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்சின்னத்துரை, வருவாய் கோட்டாட்சியர்முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், ஒருங்கிணைப்பாளர்தங்கம்மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்செந்தாமரை பாலு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×