search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக எழுச்சி மாநாடு"

    • ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது.
    • அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது பிரமாண்டமாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது.

    பொன்விழா மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அனைத்து அம்சங்களுடனும், தகவல்களுடனும் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முன்னோடி திட்டங்களான தாலிக்கு தங்கம், மாணவ-மாணவிகளுக்கு லேப்-டாப், அம்மா உணவகம் ஆகியவை குறித்து மாதிரிகளுடன் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.

    ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது, தொட்டில் குழந்தை திட்டம் போன்றவை குறித்தும் தகவல்களும், மாதிரிகளும் இடம்பெற்றிருந்தன. ஜெயலலிதாவை சமூக நீதி தலைவராக அடையாளம் காட்டிய 69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்த தீர்மானம் பிரமாண்டமாக காட்சிப்படுத்தபட்டிருந்தது.

    1989-ம் ஆண்டு சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் ஜெயலலிதாவின் சபதம் ஆகியவை குறித்தும் படங்கள் மூலம் விளக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் எம்.ஜி.ஆர்., ஆட்சியில் சத்துணவு திட்ட அமைப்பாளராக இருந்தது, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறித்த புகைப் படங்களும் இடம் பெற்றிருந்தன.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது, புதிய மாவட்டங்கள் மற்றும் வருவாய் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட நலத்திட்டங்கள் குறித்து மாதிரிகளும், புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தது.

    அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது பிரமாண்டமாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது. மேலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலங்களில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் புகைப்படங்களுடன் விளக்கப்பட்டிருந்தன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கட்-அவுட்களும் வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சி அரங்கை தொண்டர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

    நீண்ட காலமாக கட்சியில் உள்ள தொண்டர்கள் தங்கள் பழைய நினைவுகளை அங்கிருந்த படங்களை சுட்டிக்காட்டி அருகில் இருந்தவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அ.தி.மு.க. வரலாற்று அரங்கமாக கண்காட்சி அரங்கம் காட்சி அளித்ததாக தொண்டர்கள் கூறினர்.

    • கொள்ளையர்களை கோட்டையை விட்டு வெளியேற்றும் போராட்டத்தை அ.தி.மு.க. தொடங்கி இருக்கிறது.
    • மீண்டும் அம்மாவின் ஆட்சியை கோட்டையில் அமர்த்துவோம்.

    அ.தி.மு.க. மாநாட்டில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் கவியரங்கம் நடந்தது. இதில் கவிஞர் முத்துலிங்கம் உள்பட கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள்.

    கவியரங்கை தொடங்கி வைத்து பா.வளர்மதி பேசியதாவது:-

    இந்த உணர்ச்சிமிகு எழுச்சி மாநாட்டை நடத்த ஆகஸ்டு மாதத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்ததிலும் ஒரு முக்கியத்துவம் உண்டு.

    இதே ஆகஸ்டு மாதத்தில் தான் செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்துடன் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடங்கினார். இதே ஆகஸ்டு மாதத்தில் தான் வெள்ளையனை வெளியேற்றி சுதந்திரம் பெற்றோம்.

    இப்போது கொள்ளையர்களை கோட்டையை விட்டு வெளியேற்றும் போராட்டத்தை அ.தி.மு.க. தொடங்கி இருக்கிறது. இதே உணர்ச்சி யோடும், எழுச்சியோடும் இந்த முழக்கத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வோம். மீண்டும் அம்மாவின் ஆட்சியை கோட்டையில் அமர்த்துவோம் என்றார்.

    • இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக அ. தி.மு.க.வை உருவாக்க எடப்பாடியார் வழிவகை செய்தார்.
    • சுருளிராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் வட்ட நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பத்தூரில் மதுரையில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெற உள்ள மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் பேசுகையில், புரட்சித்தலைவி அம்மா தலைமையில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்ததை தற்போது பொதுசெயலாளர் எடப்பாடியார் தலைமையில் 2 கோடியே 47 ஆயிரம் உறுப்பினர்களாக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக அ. தி.மு.க.வை உருவாக்க எடப்பாடியார் வழிவகை செய்தார். கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டிற்கு குடும்பத்துடன் திரண்டு வர வேண்டும் என்றார். மாவட்ட பொருளாளர் ரவி, ஆவடிகுமார், பகுதி செயலாளர்கள் கே.பி.முகுந்தன், ஜெ.ஜான், சி.வி.மணி,எஸ்.சங்கர், ஹேமேந்திரன், பிரகாஷ், எல்.என்.சரவணன், வக்கீல் அறிவரசன், வக்கீல் பார்த்தசாரதி, சுருளிராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் வட்ட நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி விளம்பர லோகோவை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
    • இந்திய அளவில் யாரும் மாநாட்டிற்காக இதுபோன்ற பந்தல் அமைத்ததில்லை.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு பொதுமக்களை பங்கேற்கச் செய்யும் வகையில், ஜெயலலிதா பேரவை சார்பில் உசிலம்பட்டியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், விளம்பர லோகோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி விளம்பர லோகோவை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே.தமிழரசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் பொன்விழா எழுச்சி மாநாடு 65 ஏக்கர் பரப்பளவில் நடைபெறுகிறது. இதில் 35 ஏக்கரில் உணவு கூடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 25 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் சிறப்பான வகையில் ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. இந்த மாநாட்டின் அனைத்து நகர்வுகளும் நாள்தோறும் எடப்பாடியாரின் தகுந்த வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை முதல் இரவு வரை சுடச்சுட உணவு வழங்கப்பட்டுகிறது. இந்த மாநாட்டுக்காக மூன்று லட்சம் சதுர அடியில் பந்தல் போடப்பட்டது. இதனை தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொண்டர்கள் வெயிலில் வாடக்கூடாது என்று எடப்பாடியார் ஆணையின் படி கூடுதலாக வலது புறமும், இடதுபுறமும் தலா ஒரு லட்சம் சதுரடியில் பந்தல் போடப்பட்டு வருகிறது. ஏறத்தாழ ஐந்து லட்சம் சதுரடியில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் யாரும் மாநாட்டிற்காக இதுபோன்ற பந்தல் அமைத்ததில்லை.

    இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சேலம், நாமக்கல், கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், கரூர், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தேனி உள்ளிட்ட 40 மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கப்பலூர் டோல்கேட் வழியாகவும்,

    சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 30 மாவட்டங்கள் விரகனூர் பைபாஸ் வழியாகவும்,

    தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் வாகனங்கள் வளையங்குளம் ரிங்ரோடு வழியாகவும் வருகின்றன. இந்த வாகனங்களை நிறுத்தும் வகையில் 13 இடங்களில், 300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்பட்டுள்ளது. உலக அதிசயம் ஏழாக இருந்தாலும் எடப்பாடியார் உரையாற்றும் போது, இந்த மாநாடு 8-வது உலக அதிசயமாக திகழும்.

    பாராளுமன்ற கூட்டத்தில் பாரதப் பிரதமர் கட்சத் தீவை தாரை வார்த்தது தி.மு.க. தான் என்று தி.மு.க.வின் துரோகத்தை அம்பலப்படுத்திவிட்டார். அதனைத் தொடர்ந்து மணிப்பூர் சம்பவம் குறித்து கனிமொழி பேசிய போது, அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 1989-ம் ஆண்டு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை சேலையை பிடித்து அவமானப்படுத்திய சம்பவத்தை நினைவு கூர்ந்து, அவருக்கு நடந்த கொடுமையை, அவமானத்தை எடுத்துரைத்தார்.

    புரட்சித்தலைவி அம்மா அப்போது நான் மீண்டும் சட்டசபைக்கு முதலமைச்சராக வருவேன் என்று சபதம் போட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக தான் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

    தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை டெல்லியில் தோலுரித்துக் காட்டினார். பெண்கள் மீது பாசம் உள்ளது போல தி.மு.க. நாடகம் போடுகிறது. அம்மாவின் தைரியத்தை டெல்லியில் பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தைரியமாக எடுத்துரைத்தார்.

    எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரும் வகையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான கால்கோள் விழாவாக மதுரை மாநாடு அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×