search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழங்காலப் பொருட்கள் கண்காட்சி
    X

    பழங்காலப் பொருட்கள் கண்காட்சி

    • திருக்கோகர்ணத்தில் பழங்காலப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது
    • வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடந்த கண்காட்சியினை ஏராளமானவர்கள் பார்வையிட்டனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் பழங்காலப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் ஆலோசகர் கவிஞர் அஞ்சலி தேவிதங்கம்மூர்த்தி தொடங்கிவைத்தார்.பின்னர் அவர் பேசிய போது,இந்தக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொருட்களைப் பார்க்கின்ற போது நமக்கு பழைய ஞாபகங்கள் வந்துவிடுகின்றன. மரத்தாலான பொருட்கள், பீங்கான்பொருட்கள், போன்ற அரியவகை பொருட்களை இந்தத்தலைமுறை அறிந்து கொள்ள இந்தக்கண்காட்சி பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.நெகிழிப்பயன்பாடுகளை தவிர்க்கவேண்டிய கட்டயாத்திலிருக்கின்ற இந்தக்காலத்தில் இதுபோன்ற பழையபுராதன பொருட்கள் மறுபடி பயன்பாட்டுக்கு வந்தால் இயற்கையை பாதுகாக்கலாம் காண்போரை வியக்கவைத்தது கண்காட்சி என்று தெரிவித்தார்.இந்தகண்காட்சியை ஏற்பாடு செய்து நடத்திய முற்போக்குஎழுத்தாளர் சங்கத்தின் நகரத்தலைவர், தொல்லியல்துறை மாவட்டப் பொறுப்பாளர் கவிஞர் சு.பீர்முகமது காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை பற்றிய விளக்கங்களை பார்வையாளர்களுக்கு விளக்கினார்.விழாவில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, கோமதிப்பிள்ளை ஆசிரியர்கள் கணியன்செல்வராஜ், உதயகுமார், கவிஞர்கள் சுரேஷ் மான்யா, புதுகைப்புதல்வன், ஈழபாரதி. பேராசிரியர் ராமன், மற்றும் ஏராளமானபொதுமக்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

    Next Story
    ×