search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண்"

    • ஆட்டோவில் இருந்து கீழே சட்டையை பிடித்து வெளியே இழுத்து போட்டு செருப்பால் சரமாரியாக தாக்கினார்.
    • அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

    ராயபுரம்:

    புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 36 வயது திருமணமான இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக வண்ணாரப்பேட்டையில் இருந்து ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தார்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் இளம்பெண் டிரைவர் இருக்கை அருகே அமர்ந்து இருந்தார். அப்போது ஷேர் ஆட்டோ டிரைவர் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனை இளம்பெண் கண்டித்தும் ஆட்டோ டிரைவர் தனது சில்மிஷத்தை தொடர்ந்தார்.

    இதனால் பொறுமை இழந்த இளம்பெண் புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோயில் பஸ் நிறுத்தத்தில் இறங்கியதும் அந்த டிரைவரை ஷேர் ஆட்டோவில் இருந்து கீழே சட்டையை பிடித்து வெளியே இழுத்து போட்டு செருப்பால் சரமாரியாக தாக்கினார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பெண் டிரைவரை கடுமையாக எச்சரித்து அங்கிருந்து சென்றார். சில்மிஷம் செய்த ஆட்டோ டிரைவரை இளம்பெண் இழுத்துபோட்டு செருப்பால் தாக்கும் காட்சியை ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • சிலம்பரசன் இவரது மனைவி செல்வ குமாரி (28), இவருக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமாரி அங்கிருந்த விவசாய கிணற்றில் குதித்து விட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அபினவம் காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி செல்வ குமாரி (28), இவருக்கும் அவரது கணவ ருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்க ளுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமாரி அங்கிருந்த விவசாய கிணற்றில் குதித்து விட்டார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை காப்பாற்ற முயன்றனர்.

    ஆனாலும் அவர் இறந்து விட்டார். இது குறித்து அவரது தாய் பரமேஸ்வரி ஏத்தாப்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் சூரமங்கலத்தை அடுத்த சேலத்தாம்பட்டியை சேர்ந்தவர் குமார் , மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி, இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
    • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலத்தை அடுத்த சேலத்தாம்பட்டியை சேர்ந்தவர் குமார் , மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (29), இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் குமார் கடந்த தீபாவளி பண்டிகையன்று குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். மேலும் தீபாவளிக்கு புதிய ஆடைகள் எதுவும் எடுத்து கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ரேவதி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை பார்த்த உறவினர்கள்அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மீட்டு தரக்கோரி கணவர் போலீசில் புகார்
    • அன்னூர் போலீசார் தீவிர விசாரணை

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் சேவூரை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    இளம்பெண் தனது குடும்பத்துடன் கோவை மேட்டுப்பாளையம் குமாரகவுண்டன்புதூரில் உள்ள தனியார் நிறுவன குடியிருப்பில் தங்கி இருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    அப்போது இளம்பெண்ணுக்கு அங்கு வேலை பார்க்கும் ஈரோட்டை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்கா தலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை வீட்டிற்கு அழைத்து ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளகாதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் 3 குழந்தைகளுடன் அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி யடைந்தார். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது இளம்பெண் 3 குழந்தைகளுடன் வாலிபருடன் சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் குழந்தைகளுடன் வாலிபருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை மீட்டு தரும்படி அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 குழந்தைகளை அழைத்துக் ெகாண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை
    • மகளை மீட்டு தரகோரி நகோமி வடசேரி போலீசில் புகார் செய்தார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பள்ளிவிளை அம்மன்கோவில் வடக்குதெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி நகோமி(41), இவர்களது மகள் ஜாஸ்மின்(19).

    இவர் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் பள்ளிவிளை அம்மன்கோவில் வடக்கு தெருவை சேர்ந்த பவின்(21) என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு அவர்கள் இருவரும்வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

    இது குறித்து வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து ஜாஸ்மினை மீட்டு வந்தனர். பின்னர் தோட்டியோடு பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டார்.

    பின்னர் மீண்டும் 20 நாட்கள் கடந்த நிலையில் ஜாஸ்மின் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 29.9.2023 அன்று ஜாஸ்மின் மீண்டும் மாயமானார். இந்த நிலையில் மகளை மீட்டு தரகோரி நகோமி வடசேரி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நகோமி மதுரை உயர் நீதிமன்றத்தில் மகளை மீட்டு தரகோரி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக விசாரணை நடத்த வடசேரி போலீசுக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் வடசேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று இந்த கிணற்றில் இளம் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.
    • தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணின் உடலை கயிறு கட்டி மீட்டனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே அவினாசிபாளையம் அருகில் உள்ள கோவில்பாளையம், லட்சுமி நகரில் ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணறு சுமார் 30 அடி ஆழம் கொண்டது. தற்போது நல்ல மழை பெய்து வருவதால கிணற்றில் நீர்மட்டம் சற்று உயர்ந்து 8 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இந்த கிணற்றில் இளம் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. உடனே இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இதுகுறித்து காங்கயம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணின் உடலை கயிறு கட்டி மீட்டனர். விசாரணையில், அவினாசிபாளையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சக்திவேல். இவரது மனைவி எஸ்.கவுசல்யா (வயது 25). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது என்று தெரியவந்தது. சுடிதார் அணிந்து டிப்-டாப்பாக காணப்படும் இந்த பெண், எப்படி இறந்தார் என்று தெரியவில்ைல. யாராவது இவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்ற பல கோணங்களில் அவினாசிபாளையம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குழந்தையை கொடுப்பது போல நடித்து கைவரிசை
    • பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஓடையாகுளம் சுப்பையா நகரை சேர்ந்தவர் உமாபதி. இவரது மனைவி மணியம்மாள் (வயது 60).

    சம்பவத்தன்று இவர் பொள்ளாச்சிக்கு செல்வதற்கு திட்டமிட்டார். அதன்படி ஓடையாகுளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறினார். ஜமீன்ஊத்துக்குளி கைகாட்டியில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பஸ்சில் ஏறினார்.

    பஸ்சில் கூட்டம் அதிக மாக இருந்ததால் இளம்பெண் தனது குழந்தையை மணியம்மாளிடம் கொடுத்தார். அப்போது அவருக்கு தெரியாமல் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை இளம்பெண் பறித்தார். பின்னர் இளம்பெண் மார்க்கெட் சந்திப்பில் இறங்கி சென்றார். அதன் பின்னர் மூதாட்டி தனது கழுத்தை பார்த்த போது அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயின் மாயமாகி இருந்தது.

    இது குறித்து மூதாட்டி பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கொடுப்பது போல நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயினை பறித்து சென்ற இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • விருப்பப்பட்டவருடன் செல்கிறேன்-என்னை யாரும் தேட வேண்டாம் என கடிதம்
    • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த வாலிபருடன் இளம்பெண் அடிக்கடி கணவருக்கு தெரியாமல் செல்போனில் பேசி வந்தார். சம்பவத்தன்று இளம் பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். இளம் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் வேலை முடிந்து வந்து வீட்டில் பார்த்தபோது இளம்பெண்ணை காணவில்லை. இளம்பெண் வெளியே செல்வதற்கு முன்பு ஒரு கடிதத்தை எழுதி கட்டிலில் வைத்திருந்தார்.

    அதை எடுத்து இளம்பெண்ணின் கணவர் படித்தார். அதில் நான் விருப்பப்பட்ட வாலிபருடன் செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என எழுதி இருந்தார்.இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கணவரை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • மதுரையில் இளம்பெண்கள் தற்கொலை செய்துகொண்டார்.
    • 10 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருந்து வருகிறார்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கவிதா (வயது37). 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினையில் மகள் மீது கணவர் ஆசிட் ஊற்ற முயன்றுள்ளார். இது தொடர்பான வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் கணவரை ஜாமீனில் கொண்டுவர கவிதா ப லமுறை முயற்சித்துள்ளார். ஆனால் கணவரை அவரால் ஜாமீனில் எடுக்க முடியவில்லை. இதனால் மன விரக்தியில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு கிருஷ்ணபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பிரியா (27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவர் வீட்டில் பிரியா வசித்து வந்தார். இதனால் மன விரக்தியில் இருந்த அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரியா இறந்தார். இது குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவருடன் கருத்து வேறுபாடு எதிரொலி
    • அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எஸ்.ஆர்.எம்.வீதியை சேர்ந்தவர் முரளி.

    இவரது மனைவி செல்வி (வயது42). இவர்களுக்கு சஞ்சய்ராம் (14) என்ற மகனும், ஆத்மிகா(5) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் செல்வி, தனது கணவரிடம், நம் குழந்தைகளுடன் நாம் தனிக்குடித்தனம் செல்லலாம் என கூறியுள்ளார்.

    அதற்கு முரளி, தனது தாயை தனியாக விட்டு, நான் வர முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களை சமாதானம் செய்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவன், மனைவிக்கு இடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த முரளி, தனிக்குடித்தனம் வர மறுப்பு தெரிவித்து விட்டு வெளியில் சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த செல்வி, தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து, டீயில் கலந்து தனது குழந்தைகளுக்கு கொடுத்தார். அதன்பின்னர் தானும் அதனை அருந்தினார். சிறிது நேரத்தில் 3 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

    சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த முரளி, மனைவி மற்றும் குழந்தைகள் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

    அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • நேற்று காலை மல்லிகார்ஜூனன் வேலைக்கு சென்ற நிலையில் சித்ரா தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார்
    • கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் சித்ரா பிணமாக கிடந்தார்.

    காங்கயம்:

    காங்கயம், உடையார் காலணி, பி.எஸ்.என்.எல் ஆபீஸ் அருகில் வசிப்பவர் மல்லிகார்ஜூனன். இவர் காங்கயத்தில் உள்ள ஒரு ரைஸ்மில்லில் டிரைவராக வேலை செயது வருகிறார். இவரது மனைவி சித்ரா(வயது 25). கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை உள்ளது. நேற்று காலை மல்லிகார்ஜூனன் வேலைக்கு சென்ற நிலையில் சித்ரா தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார். மதியம் 2மணிக்கு மல்லிகார்ஜூனன் வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் சித்ரா பிணமாக கிடந்தார். இது பற்றி காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 வருடமே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.

    • பொதுமக்களிடையே அதிக அளவில் வாக்குகள் சேகரித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்
    • கூட்டத்தில் மாநில மகளிர் அணி நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி கலந்துகொண்டார்

    ஆரல்வாய்மொழி :

    தோவாளையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி மற்றும் இளைஞர் இளம்பெண் பாசறை நிர்வாகிகள் கூட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவரும், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநில மகளிர் அணி நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி கலந்துகொண்டார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பொதுமக்களிடையே அதிக அளவில் வாக்குகள் சேகரித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை நிர்வாகி அட்சய கண்ணன், மாநில விவசாய அணி தானு பிள்ளை, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பரமேஸ்வரன், தோவாளை ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை இணைச்செயலாளர் பகவதியப்பன் மற்றும் தோவாளை பகுதியை சேர்ந்த விவசாய அணி முத்துசாமி, சிவச்சந்திரன், ராஜேந்திரன், மது, ராஜன், சரிதா சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×