search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adolescent suicide"

    • சிலம்பரசன் இவரது மனைவி செல்வ குமாரி (28), இவருக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமாரி அங்கிருந்த விவசாய கிணற்றில் குதித்து விட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அபினவம் காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி செல்வ குமாரி (28), இவருக்கும் அவரது கணவ ருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்க ளுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமாரி அங்கிருந்த விவசாய கிணற்றில் குதித்து விட்டார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை காப்பாற்ற முயன்றனர்.

    ஆனாலும் அவர் இறந்து விட்டார். இது குறித்து அவரது தாய் பரமேஸ்வரி ஏத்தாப்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செவ்வாய்பேட்டை - ஜங்ஷன் இடையில் ரெயில் வந்தபோது சுமார் 30 வயது மதிக்கதக்க வாலிபர் திடீரென தண்டவாளத்தில் படுத்து கொண்டார்.
    • ரெயில் ஏறியதில் அந்த வாலிபர் தலை துண்டாகி பலியானார்.

    சேலம்:

    விழுப்புரம் மாவட்டம் விருதாச்சலத்தில் இருந்து சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு இன்று காலை 7 மணி விருதாச்சலம் பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    செவ்வாய்பேட்டை - ஜங்ஷன் இடையில் ரெயில் வந்தபோது சுமார் 30 வயது மதிக்கதக்க வாலிபர் திடீரென தண்டவாளத்தில் படுத்து கொண்டார்.

    தற்கொலை

    அவர் மீது ரெயில் ஏறியதில் அந்த வாலிபர் தலை துண்டாகி பலியானார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணை

    இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    அவரது கையில் ஈஸ்வரி தனபால் என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. இதை வைத்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் தொடர்ந்து தண்டவாளத்தில் தற்கொலை செய்யும் சம்பவங்கள் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • ராஜபாளையத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள அய்யனாபுரம் சுப்பிர மணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிர மணியம். விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆவுடையம்மாள் (வயது 38). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக ஆவுடையம்மாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் மன நல பாதிப்பும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத் தன்று ஆவுடையம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

    ஆபத் தான நிலையில் பாளையங் கோட்டை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆவுடை யம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழராஜகுல ராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தங்கராஜ். இவரது மனைவி சகுந்தலா (வயது 39). இவர் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார்.
    • கடந்த சில மாதங்களாக சரியாக வியாபாரம் இல்லாத நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி சகுந்தலா (வயது 39). இவர் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக சரியாக வியாபாரம் இல்லாத நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவரை அவரது தாய் பாக்கியம் உள்பட உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் தனியாக இருந்த அவர் விஷ இலையை அரைத்து குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். இதனை பார்த்த தாய் பாக்கியம் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனி ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர் பரிதாப மாக இறந்தார்.

    இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரையில் இளம்பெண்-சிறுவன் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பெத்தானியா புரம் திலீபன் குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சங்கீதா (வயது 23). இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கரிமேடு போலீஸ் நிலையத்தில் சங்கீதாவின் தந்தை முருகன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காளவாசல் பாண்டியன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் கலையரசன் (17). இவர் கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிறுவனின் தந்தை முனியாண்டி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்லூர் ஜான்சிராணி புரம் முதல் தெருவை சேர்ந்தவர் தவமுருகன் (52), கூலித் தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தவமுருகனின் மனைவி நல்லம்மாள் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணமான 3 மாதத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வத்திராயிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள அபிராமம் அச்சங்குளத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது27). இவரும் அதே ஊரை சேர்ந்த குணசுந்தரி என்பவரும் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் 2 பேரும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன் பட்டியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

    குணசுந்தரி அதே பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்தார். கடந்த சில வாரங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் இரவு அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே குணசுந்தரி வீட்டின் மாடி அறைக்கு சென்றுவிட்டார். அப்போது குடும்ப பி ரச்சினையால் விரக்தியில் இருந்த அருண்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த குணசுந்தரி கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    வத்திராயிருப்பு அருகே உள்ள கோபாலபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் சஞ்சீவி(வயது65). இவருக்கு கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பு இருந்தது. இதில் விரக்தி யடைந்த சஞ்சீவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வத்திரா யிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிறந்தநாள் பார்ட்டிக்கு தந்தை பணம் தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    திருப்பாலை சக்கிமங்கலம் கரந்தமலை நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் அய்யனார் (வயது21). இவருக்கு நிரந்தர வேலை இல்லை. இந்த நிலையில் அவருக்கு பிறந்தநாள் வந்தது. நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த அய்யனார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பாலை போலீஸ் நிலையத்தில் மூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரின்தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை சிந்தாமணி கண்ணன் காலனியை சேர்ந்தவர் சோமஸ் கந்தமூர்த்தி (45). இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் ஆசிட்டை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சோமஸ் கந்தமூர்த்தியின் மகள் ஹம்சவாகினி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • தளவாய்புரம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை(31), ஒர்்க்ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிபழக்கம் இருந்தது. இதனை கைவிட முடியாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பற்றிவிட்டனர். இந்த நிலையில் நேற்று மனைவி வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது வீடு பூட்டி இருந்தது. தட்டிப்பார்த்தும் திறக்காததால் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது சேலையில் தூக்குப்போட்டு இருந்தார். அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அண்ணாதுரையின் உறவினர் கலைச்செல்வன் கொடுத்த புகாரின்பேரில் தளவாய்புரம்

    சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • திருமங்கலம் அருகே தொழிலாளி-இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
    • பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள எட்டிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 56), கூலி தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் வீட்டுக்கு அருகே உள்ள ஆட்டுத் தொழுவத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து சுந்தரத்தின் மகன் சுந்தரலிங்கம் கள்ளிக்குடி போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர் அருகே உள்ள பேரையம்பட்டியை சேர்ந்த வர் பாண்டி. இவரது மகள் செல்வி (30). இவர் 9 ஆண்டு களுக்கு முன்பு மெய்ய னூத்தன்பட்டியை சேர்ந்த ராஜாராம் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் ராஜா ராம் வௌயூர் சென்றி ருந்தபோது செல்வி பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.

    உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாண்டி கொடுத்த புகாரின்பேரில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் பலராமன் (வயது50). இவரது மனைவி சியாமளா தேவி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி குடிக்க பணம் கேட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். மனைவி பணம் கொடுக்க மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவாராம். இந்த நிலையில் சம்பவத்தன்று பலராமன், மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மனைவி பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த அவர் அறையின் கதவை பூட்டிக்கொண்டு பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.

    உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சியாமளா தேவி பந்தல்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல்லில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • காதல் திருமணம் செய்த இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    காதல் திருமணம்

    நாமக்கல் அருகே உள்ள சிங்கிலிபட்டியை சேர்ந்தவர் நந்தீஸ்வரன். இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 30). இவர்களுக்கு 3½ வயதில் குழந்தை உள்ளது.

    காதல் திருமணம் செய்த இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றும் அவர்க ளுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இளம்பெண் தற்கொலை

    இதில் மனமுடைந்த தாமரை செல்வி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரத பரிசோ தனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    திருச்சுழி

    விருதுநகர் அருகே உள்ள திருச்சுழி முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ். இவரது மனைவி கனகா(வயது28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கனகாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மனநல பாதிப்பில் இருந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கனகா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×