search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை
    X

    கணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் முனீஸ்வரி(வயது25). இவரும் விருதுநகர் அம்மன் கோவில் பட்டியை சேர்ந்த பட்டாசு தொழிலாளி கருப்பசாமி என்பவரும் கடந்த 6ஆண்டுகளுக்கு முன்பு காத லித்து திரும ணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இ தன் காரணமாக முனீஸ்வரி கலிங்கப்ப ட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் பிரிந்து சென்ற கணவருடன் சேர்ந்து வாழ முனீஸ்வரி விருப்பம் தெரிவித்தார். கருப்பசாமி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

    சம்பவத்த ன்று கணவர் வேலை பார்க்கும் பட்டாசு ஆலைக்கு சென்று சேர்ந்து வாழ வேண்டும் என்று முனீ ஸ்வரி கூறியுள்ளார். அதற்கு கருப்பசாமி பெரியோர்கள் முன்னி லையில் பேசிய பின் சேர்ந்து வாழலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தியுடன் வீட்டுக்கு வந்த முனீஸ்வரி வாழ்க்கையில் வெறுப்படைந்து யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கருப்பையா கொடுத்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×