search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை
    X

    திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

    • அவனியாபுரத்தில் திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • பிறந்தநாள் அன்றே வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    அவனியாபுரம்

    அவனியாபுரம் செம்பூரணியை சேர்ந்த வேல்முருகனின் மகன் பாண்டித்துரை (வயது30). கட்டிட தொழிலாளி.

    நேற்று இவர் தனது பிறந்த நாளையொட்டி மது குடித்தார். போதையில் இருந்த பாண்டித்துரை திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதற்காக உடலில் கத்தியால் கீறினார்.

    மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவனியாபுரம் போலீசார் பாண்டித்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணமாகாத விரக்தியில் பிறந்தநாள் அன்றே வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×