என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட குணசேகரன்.
வேப்பூர் அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
- வேப்பூர் அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையிலிருந்து வீட்டிற்கு தனியாக வந்தார்.
கடலூர்:
வேப்பூர் அருகே சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன்(வயது22). 9ம் வகுப்பு படித்துள்ளார். இவர், கடந்த 4 ஆண்டுகளாக தனது பெற்றோருடன், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையிலிருந்து வீட்டிற்கு தனியாக வந்தார். நேற்று காலை அவரது நண்பர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது, குணசேகரன் வீட்டின் மேற்கூரையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






