search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suresh Raina"

    • கபில் தேவ்-ன் சாதனையையும் வாஷிங்டன் சுந்தர் முறியடித்துள்ளார்.
    • வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசி நாட் அவுட்டாக இருந்தார்.

    ஆக்லாந்து:

    நியூசிலாந்து - இந்தியா மோதிய முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 306 ரன்களை குவித்தது. இந்திய அணியின் தொடக்க ஜோடியான தவான்- சுப்மன் கில் முதல் விக்கெட்டிற்கு 124 ரன்களை சேர்த்தனர். இதன் பின்னர் வந்த பண்ட் (15), சூர்யகுமார் யாதவ் (4) என சொதப்பியதால் மிடில் ஓவரில் தடுமாறியது. அப்போது நிதானமாக ஆடும் சூழலுக்கு தள்ளப்பட்ட சஞ்சு சாம்சன் ( 36) , ஸ்ரேயாஸ் ஐயர் (80 ) ரன்களை அடிக்க, இந்திய அணியின் ஸ்கோர் 250 ரன்களை கடந்தது.

    எனினும் ஆக்லாந்து மைதானம் மிக சிறியது என்பதால் 300 ரன்கள் என்பது கட்டாயம் வேண்டும். ஆனால் 4 ஓவர்கள் தான் மீதம் இருந்தது. அப்போது உள்ளே வந்த வாஷிங்டன் சுந்தர் அனைவருக்கும் ஆச்சரியம் தந்தார். 16 பந்துகளை மட்டுமே சந்தித்த சுந்தர் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசி நாட் அவுட்டாக இருந்தார்.

    இதன் மூலம் வாஷிங்டன் சுந்தர் 13 வருட சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது நியூசிலாந்து மண்ணில் அதிவேகமாக (16 பந்துகளில்) 30 ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார். 2009-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் 38 ரன்களை அடித்தார். அதன்பின்னர் ஒரு வீரரால் கூட அடிக்க முடியவில்லை. ஏனென்றால் நியூசிலாந்து மண்ணில் அதிரடி காட்டுவது சாதாரணம் அல்ல. பிட்ச் அந்த அளவிற்கு கடினமாக இருக்கும்.

    இதே போல கபில் தேவ்-ன் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து மண்ணில் ஏற்கனவே கூறியதை போல அதிரடி காட்ட முடியாது. அங்கு கடந்த 1992ம் ஆண்டு கபில் தேவ் 206.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடினார். அதன்பின் சுரேஷ் ரெய்னா 2009-ல் 211.11 வைத்திருந்தார். தற்போது வாஷிங்டன் சுந்தர் 231.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல ஆண்டுகளாக ரெய்னா சிஎஸ்கே அணிக்கு மேட்ச் வின்னராக இருந்தவர்.
    • 2020-ம் ஆண்டு டோனியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரெய்னாவும் ஓய்வு அறிவித்தார்.

    ஐபிஎல் வரலாற்றில் மிகவும் திறமையான பேட்டர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா இந்திய டி20 லீக் மற்றும் நாட்டில் நடைபெறும் பிற உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஒருவரான ரெய்னா 2022 மெகா ஏலத்தில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பல ஆண்டுகளாக ரெய்னா சிஎஸ்கே அணிக்கு மேட்ச் வின்னராக இருந்தவர். அவர் 205 ஐபிஎல் போட்டிகளில் 32.5 சராசரி மற்றும் 136.7 ஸ்ட்ரைக் ரேட்டில் 5528 ரன்கள் குவித்துள்ளார்.

    2020-ம் ஆண்டு டோனியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரெய்னாவும் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் உள்நாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த ரெய்னா தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அத்துடன் இதுவரை தனக்கு ஆதரவு அளித்த பிசிசிஐ, உத்திரபிரதேச கிரிக்கெட் சங்கம், ஐபிஎல் நிர்வாகம், ராஜீவ் சுக்லா மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் ரெய்னா இடம்பெற்றிருந்தார். 226 ஒருநாள் போட்டிகளில் 5,615 ரன்களும், 78 டி20 போட்டிகளில் 1,605 ரன்களும் எடுத்ததன் மூலம் அவர் தனது சர்வதேச வாழ்க்கையை முடித்தார்.

    எம்எஸ் டோனி விக்கெட் கீப்பராக பணியாற்றுவது வசதியாக இருக்கும் என விராட் கோலி உணர்கிறார். டோனி எப்போதும் கேப்டன் என ரெய்னா தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து 2017-ல் இருந்து விலகினார். என்றாலும் எப்போதும் அவர்தான் கேப்டன் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘வீரர்கள் பெயர் அடங்கிய பேப்பரில் டோனி கேப்டனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மைதானத்தில் விராட் கோலிக்காக எம்எஸ் டோனிதான் கேப்டன். ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து பந்து வீச்சாளர்களை வழிநடத்தும் அவருடைய பணி இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது.



    அவர் கேப்டன்களுக்கெல்லாம் கேப்டன். டோனி ஸ்டம்பிற்கு பின்னால் இருப்பதை, விராட் கோலி வசதியாக உணர்கிறார். இதை அவர் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளார்’’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான சுரேஷ் ரெய்னா, நடிகர் சூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என்.ஜி.கே’. இப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் சூர்யாவிடம் கேள்வி கேட்டார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உங்களுக்கு பிடித்த வீரர் யார் என்று சுரேஷ் ரெய்னா கேட்க, அதற்கு சூர்யா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும் சுரேஷ் ரெய்னா கேள்வி கேட்டது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது என்று சூர்யா கூறினார்.



    அதன்பின் ஜோதிகா, கார்த்தியுடன் சேர்ந்து நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, இன்றுதான் ஒரு கதை கேட்டேன். நன்றாக இருக்கிறது. அது அமைந்தால் ஜோதிகாவுடன் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதுபோல் கார்த்தியுடனும் நடிக்க ஆசைதான். அதற்கான நேரம் காலம் அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
    ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல தொடக்கம் கிடைத்தும் அதை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டதாக சென்னை அணியின் பொறுப்பு கேப்டன் ரெய்னா கூறினார். #IPL2019 #SRHvCSK
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை சாய்த்தது. இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 132 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த எளிய இலக்கை டேவிட் வார்னர் (50 ரன்), ஜானி பேர்ஸ்டோ (61 ரன்) ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் ஐதராபாத் அணி 16.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. தொடர்ச்சியாக 3 தோல்விக்கு பிறகு வெற்றிப்பாதைக்கு திரும்பிய ஐதராபாத் அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது.

    தோல்விக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பொறுப்பு கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறுகையில், ‘இந்த தோல்வி, எங்களுக்கு நல்லதொரு எச்சரிக்கையாகும். நாங்கள் போதுமான அளவுக்கு ரன்கள் எடுக்கவில்லை. பிளிஸ்சிஸ்- ஷேன் வாட்சன் ஜோடி (முதல் விக்கெட்டுக்கு 79 ரன்) அருமையான தொடக்கம் அமைத்து தந்தும் அதை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். தொடக்க ஜோடி பிரிந்ததும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது பின்னடைவாகி விட்டது. பந்துகளை வீணாக்காமல் ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் தொடர்ச்சியாக எடுத்திருக்க வேண்டும். எது எப்படியோ 30 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்.

    முதுகில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக டோனிக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது அவர் நன்றாக இருப்பதாக உணர்கிறார். அனேகமாக அடுத்த ஆட்டத்தில் (21-ந்தேதி பெங்களூருவுக்கு எதிராக) அவர் விளையாடுவார்.’ என்றார்.

    சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், ‘இந்த தொடரில் முதல்முறையாக இது போன்ற ஒரு (மோசமான) ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். இந்த குறைபாட்டை வீரர்கள் எப்படி சரி செய்யப்போகிறார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.

    தோல்வி குறித்து அதிகமாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. பலவீனமான பகுதியை கண்டறிந்து அதை திருத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

    இந்த ஆட்டத்தில் முதல் 10 ஓவர்கள் வரை சிறப்பாக பேட் செய்தோம். அதன் பிறகு நெருக்குதலுக்கு உள்ளாகி, விக்கெட்டுகளை வேகமாக இழந்தோம். அதாவது ஐதராபாத் பவுலர்கள் அபாரமாக பந்து வீசினர். நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. 170 ரன்கள் வரை எடுத்திருந்தால் அது சவாலான ஸ்கோராக இருந்திருக்கும்’ என்றார். #IPL2019 #SRHvCSK
    ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இடம்பெற போவது டோனியா, ரெய்னாவா அல்லது ரோகித் சர்மாவா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. #IPL2019 #200sixes #MSDhoni #SureshRaina #RohitSharma
    ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் வருகிற 23-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருப்பதால் ரசிகர்களிடம் ஐபிஎல் ஜுரம் தொற்றிக் கொண்டது. இதனால் ஐபிஎல் தொடர் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை நெருங்குவது யார் என்ற போட்டியில் எம்.எஸ். டோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் உள்ளனர்.

    இதுவரை நடந்துள்ள ஐபிஎல் போட்டிகளில் டோனி 186 சிக்சர்களும், சுரேஷ் ரெய்னா 185 சிக்சர்களும், ரோகித் சர்மா 184 சிக்சர்களும் அடித்துள்ளனர்.



    இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சிக்சர்கள் அடித்து 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.

    ஐபிஎல் தொடரில் சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் 292 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2019 #200sixes #MSDhoni #SureshRaina #RohitSharma
    20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றார். #SureshRaina #T20Cricket
    புதுடெல்லி:

    சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ள உத்தரபிரதேசம்-புதுச்சேரி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த உத்தரபிரதேச அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய புதுச்சேரி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன்களே எடுத்தது. இதனால் உத்தரபிரதேச அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடிய இந்திய சீனியர் வீரர் சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 11 ரன்னை எட்டிய போது சுரேஷ் ரெய்னா 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் (சர்வதேச, உள்ளூர் போட்டிகள் எல்லாம் சேர்த்து) 8 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 300-வது 20 ஓவர் போட்டியில் ஆடிய சுரேஷ் ரெய்னா 8,001 ரன்கள் குவித்துள்ளார். உலக அளவில் 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா 6-வது இடத்தில் உள்ளார்.

    வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 12,298 ரன்னும் (369 போட்டி), நியூசிலாந்து வீரர் பிரன்டன் மெக்கல்லம் 9,922 ரன்னும் (370 போட்டி), வெஸ்ட்இண்டீஸ் வீரர் பொல்லார்ட் 8,838 ரன்னும் (451 போட்டி), பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 8,603 ரன்னும் (340 போட்டி), ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 8,111 ரன்னும் (259 போட்டி) எடுத்து முறையே முதல் 5 இடங்களில் இருக்கிறார்கள். இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 251 போட்டிகளில் விளையாடி 7,883 ரன்கள் குவித்து 7-வது இடத்தில் உள்ளார்.

    டெல்லியில் நடந்த சர்வீசஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய பரோடா அணி 18.2 ஓவர்களில் 75 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய சர்வீசஸ் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூரத்தில் நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-குஜராத் அணிகள் மோதின. முதலில் ஆடிய தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சதுர்வேத் 34 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 33 ரன்னும், ஜெகதீசன் 29 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். கேப்டன் ஆர்.அஸ்வின் 1 ரன்னில் ‘அவுட்’ ஆனார். பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி 19.5 ஓவர்களில் 124 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் தமிழக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. 3-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

    இந்தூரில் நடந்த கோவா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காயத்தில் இருந்து மீண்டு வந்த மும்பை வீரர் பிரித்வி ஷா 47 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சூரத்தில் நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தானுக்காக ஆடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 20 ஓவர் போட்டியில் அவர் 5 விக்கெட்டுகள் சாய்த்தது இதுவே முதல்முறையாகும்.
    அதிரடி பேட்ஸ்மேன் ஆன சுரேஷ் ரெய்னா 32 மாதங்கள் கழித்து இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். #ENGvIND #Raina
    இந்திய அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. 31 வயதான இவர் 2005-ல் ஒருநாள் போட்டியில் முதன்முதலாக இந்திய அணியில் அறிமுகமானார். சுழற்பந்து வீசுவதுடன் தனது அதிரடி பேட்டிங்கால் குறுகிய காலக்கட்டத்திலேயே சிறந்த பேட்ஸ்மேனாக வளர்ச்சியடைந்தார். டி20 போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    திடீரென இவரது ஆட்டத்தில் சறுக்கல் ஏற்பட்டது. இதனால் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை.



    அதன்பின் தீவிர பயிற்சிக்குப்பின் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம்பிடித்தார். இன்று நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியில் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைத்துள்ளது.

    இதன்மூலம் 32 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் இடம்பிடித்துள்ளார். இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்கிடைக்க வாய்ப்புள்ளது. சுரேஷ் ரெய்னா 223 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 சதத்துடன் 5568 ரன்கள் அடித்துள்ளார்.



    அதேபோல் கேஎல் ராகுல் 10 மாதங்கள் கழித்து அணியில் இடம்பிடித்துள்ளார். சித்தார்த் கவுல் அறிமுகமாகியுள்ளார்.
    யோ-யோ சோதனையில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் இருந்து நீக்கப்பட்ட அம்பதி ராயுடுவுக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #AmbatiRayudu #YoYotest #SureshRaina

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி, ஓவ்வொரு தொடரில் விளையாடுவதற்கு முன்பாகவும் வீரர்களுக்கு யோ-யோ சோதனை என்ற உடற்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டோனி, ரெய்னா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். இதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி மற்றும் இங்கிலாந்து உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க அவர்கள் தகுதிப்பெற்றனர். 

    இந்த சோதனையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி, இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற அம்பதி ராயுடு, குறைவான மதிப்பெண்களை பெற்று தோல்வியடைந்தார். இதனால் அவர் இங்கிலாந்து தொடரில் விளையாடு இந்திய அணியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். ராயுடு சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    இந்நிலையில், ராயுடுவுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் ஜூலை 3-ம் தேதி தொடங்க உள்ளது. 

    இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்: விராட் கோலி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.டோனி, தினேஷ் கார்த்திக், சஹால், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ். #AmbatiRayudu #YoYotest #SureshRaina
    கேப்டன் எம்எஸ் டோனிக்காக இந்த முறை கோப்பையை வெல்ல விரும்புகிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரெய்னா தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK
    ஐபிஎல் 2018 சீசனின் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னேறியுள்ளது. இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் நோக்கத்தில் உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அல்லது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 9 வருடமாக இருந்து வரும் எம்எஸ் டோனிக்காக கோப்பையை வெல்ல இருக்கிறோம் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ரெய்னா கூறுகையில் ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்எஸ் டோனி அதிக அளவில் அக்கறை எடுத்து வருகிறார். நாங்கள் எல்லோரும் சிறப்பாக விளையாடி வருகிறோம். 2008-ல் இருந்து சென்னை அணிக்காக மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் மிகவும் சிறந்த நபராக வளம் வருகிறார். ஆகவே, இந்த முறை டோனிக்காக ஐபிஎல் கோப்பையை வெல்ல விரும்புகிறோம்’’ என்றார்.
    இரண்டு வருடங்கள் தடைக்குப்பின் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் அணி போன்று விளையாடுகிறது என ரெய்னா கூறியுள்ளார். #IPL2018 #CSK
    ஐபிஎல் தொடரில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற அனைத்து தொடரிலும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது.

    ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னா இடம்பிடித்து விளையாடி வருகிறார். இரண்டு ஆண்டுகள் தடைக்குப்பின் தற்போது களம் இறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் அணி போன்று விளையாடுகிறது என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ரெய்னா கூறுகையில் ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சில வீரர்கள் தங்களது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு, அணியின் வெற்றிக்கான பொறுப்பை கையில் எடுத்துள்ளனர். இப்படி இருக்கும்போது நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் சாம்பியன் அணி போன்றுதான் விளையாடுகிறோம். நாங்கள் எங்களுடைய போட்டிகளை பயமின்றி விளையாடுகிறோம்’’ என்றார்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் அடித்ததன் மூலம் ரெய்னா சாதனையை முறியடித்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா. #IPL2018 #RohitSharma
    மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். இவர் ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு சாதனையாக படைத்து வருகிறார். நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 31 பந்தில் இரண்டு பவுண்டரி, 1 சிக்சருடன் 36 ரன்கள் சேர்த்தார்.

    இந்த ரன்கள் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக மட்டும் 747 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் கேகேஆர் அணிக்கெதிராக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து ரெய்னாவை பின்னுக்குத்தள்ளி முதல் இடம்பிடித்துள்ளார்.



    கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணிக்கெதிராக ரோகித் சர்மா 747 ரன்கள் அடித்துள்ளார். சுரேஷ் ரெய்னா 746 ரன்கள் அடித்துள்ளார். விராட் கோலி 490 ரன்கள் அடித்து ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

    டேவிட் வார்னர் 677 ரன்களுடன் 3-வது இடத்திலும், கிறிஸ் கெய்ல் 594 ரன்கள் நான்காவது இடத்திலும் உள்ளனர். தவான் 459 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும், 455 ரன்களுடன் டோனி 6-வது இடத்திலும் உள்ளனர்.
    ×