search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student molested"

    சேத்தியாத்தோப்பு அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 7-ம் வகுப்பு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    சம்பவத்தன்று இரவு மாணவி அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த திலகர் மற்றும் ஜெய்சங்கர் அந்த மாணவியை தாக்கி, அங்குள்ள மறைவான பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவளை பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது அவள் அந்த பகுதியில் உள்ள கோவில் அருகே மயங்கிய நிலையில் கிடந்தாள்.

    அந்த சிறுமியை பெற்றோர் மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர். அவளிடம் பெற்றோர் விசாரித்தனர். அதற்கு பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.

    சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தாள். பின்னர் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மயக்கம் தெளிந்த பின்னர் அந்த மாணவியிடம், அவளது பெற்றோர் எதற்காக வி‌ஷம் குடித்தாய்? என்று விசாரித்தனர். அப்போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கூறி கதறி அழுதாள்.

    இதையடுத்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் திலகர், ஜெய்சங்கர் ஆகிய 2 வாலிபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலகரை கைது செய்தனர். ஜெய்சங்கரை வலைவீசி தேடிவருகின்றனர்.
    மதுரை அருகே 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கர்ப்பமாக்கிய நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம், சேடப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட சின்னகட்டளையைச் சேர்ந்த 16 வயது பெண், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    பெற்றோர் பெரும்பாலான நாட்களில் கூலி வேலைக்கு சென்றுவிட, அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் சூழல் ஏற்பட்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாணவியின் தாயார் அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.

    அப்போது டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், மாணவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இந்த நிலைமைக்கு யார் காரணம்? என பலமுறை கேட்டுள்ளனர். ஆனால் மாணவியால் சரியான தகவலை தெரிவிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

    இதனிடையே கடந்த 10-ந்தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அந்த மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மைனர் பெண் என்பதால் தற்போது அந்த மாணவி சிறுமிகள் நல காப்பகத்தில் அனுமதிக்கப்பட உள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து சேடப்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் இந்த நிலைமைக்கு யார் காரணம்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிப்பட்டு அருகே 10-ம் வகுப்பு மாணவியை பம்புசெட்டில் 5 நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்து கொன்றது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டை அடுத்த வெங்கடாபுரத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி பள்ளிக்கு சென்றபோது மாயமானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கிச்சலம் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் உள்ள ஓடையில் மாணவியின் எலும்புக்கூடுகளும், பள்ளி சீருடையும் கிடந்தது. அவர் அணிந்திருந்த கம்மல், வெள்ளி கொலுசு ஆகியவையும் கிடைத்தன.

    இதையடுத்து மாயமான மாணவி கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த போலீசார் எலும்புக் கூடுகளை சென்னையில் உள்ள தடயவியல் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மாணவி கொலையில் அதே கிராமத்தை சேர்ந்த சங்கரய்யாவை போலீசார் கைது செய்தனர்.

    அவர் கொடுத்த தகவலின்படி கீச்சலத்தை சேர்ந்த கரும்பு தோட்ட உரிமையாளர் நாதமுனி, கிருஷ்ணமூர்த்தி, ஜெகதீஷ், மோகன்ராஜ் ஆகிய 4 பேரையும் அதிரடியாக பிடித்தனர்.

    அவர்கள் அனைவரும் சேர்ந்து மாணவியை பம்புசெட்டில் அடைத்து வைத்து கொடூரமாக கற்பழித்து கொலை செய்து இருப்பதும், பின்னர் உடலை புதைத்ததும் தெரியவந்தது.

    கொலையுண்ட மாணவியை சங்கரய்யா ஒருதலையாக காதலித்து வந்தார். ஆனால் மாணவி இந்த காதலை ஏற்கவில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி மாணவியிடம் சங்கரய்யா பேச்சு கொடுத்தார். அப்போது அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் உனது நண்பர் ஒருவர் சந்திக்க காத்து இருப்பதாக மாணவியிடம் தெரிவித்தார்.

    இதனை நம்பிய மாணவி கரும்பு தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு வந்த சங்கரய்யா மாணவியை மிரட்டி அருகில் உள்ள பம்புசெட்டுக்கு அழைத்து சென்று கற்பழித்தார். பின்னர் பம்புசெட்டை வெளிப்புறமாக மூடிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இதைத் தொடர்ந்து பயந்து போன சங்கரய்யா மாணவியை கற்பழித்தது குறித்து ஜெகதீசிடம் தெரிவித்து இருக்கிறார். இதனால் சபலம் ஏற்பட்ட ஜெகதீஷ் மாணவி குறித்து நண்பர்களான நாதமுனி, கிருஷ்ண மூர்த்தி, மோகன் ராஜ் ஆகியோரிடமும் கூறி இருக்கிறார்.

    அவர்கள் 4 பேரும் பம்பு செட்டுக்கு வந்து மாணவியை மாறி மாறி கற்பழித்தனர். இந்த கொடூரம் தொடர்ந்து 5 நாட்களாக நடந்துள்ளது. இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாதமுனி உள்பட 4 பேரும் மாணவி இறந்தது குறித்து வெளியில் தெரிவிக்காமல் இருக்க சங்கரய்யாவிடம் கெஞ்சி கேட்டுள்ளனர். இதற்காக ரூ. 5 ஆயிரமும் கொடுத்ததாக தெரிகிறது.

    பின்னர் 5 பேரும் சேர்ந்து மாணவியின் உடலை கரும்பு தோட்டத்தில் புதைத்தனர். மாணவி மாயமான விவகாரத்தில் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காததால் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

    இதற்திடையே அந்த கரும்பு தோட்டத்தில் அறுவடை நடக்க இருந்தது. இதனால் மாணவி உடலை புதைத்தது வெளியில் தெரிந்துவிடும் என்று நினைத்து அவர்கள் கலக்கம் அடைந்தனர்.

    இதனால் மாணவியின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து அருகில் உள்ள கால்வாய் ஓரத்தில் புதைத்து இருக்கிறார்கள். உடலை ஆழமாக தோண்டி புதைக்காததால் மாணவியின் எலும்புக்கூடு வெளியே வந்துவிட்டது.

    இதனால் கொலையாளிகள் 5 பேரும் சிக்கிக் கொண்டனர். மாணவியை கொன்று புதைத்தது எப்படி? என்பது குறித்து சங்கரய்யா கொலை நடந்த இடத்தில் நடித்து காட்டினார்.

    அப்போது அங்கு புதைக்கப்பட்டிருந்த மாணவியின் புத்தக பையை போலீசார் மீட்டனர். கைதான 5 பேரிடமும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, டி.எஸ்.பி. சேகர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    மாணவியை 5 நாட்கள் அடைத்து வைத்து கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பள்ளிப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திண்டுக்கல் அருகே பாடம் நடத்துவதாக கூறி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கலிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் பிசியோதெரபிஸ்ட். இவர் தனது உறவினரின் 15 வயது மகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளார். மேலும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

    பலாத்காரம் செய்யப்பட்டதால் மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் மன உளைச்சலில் இருந்ததால் அவரது தாயார் இது குறித்து விசாரித்துள்ளார். அப்போது மாணவி, தங்கவேல் பலாத்காரம் செய்ததை தாயிடம் கண்ணீர் விட்டு அழுது கூறியுள்ளார்.

    இதனால் அதிர்சியடைந்த அவரது தாயார் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தங்கவேல் சிறுமியை பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பு என்கிற சுரேந்தர் (வயது 18). மயிலம் அருகே உள்ள வேங்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜன் (18).

    இவர்கள் 2 பேரும் கள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை வெளியே சொல்ல கூடாது என அந்த மாணவியை 2 வாலிபர்களும் மிரட்டினர். இதில் பயந்து போன மாணவி இதை பற்றி யாரிடமும் கூறவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி தனக்கு அடிக்கடி வயிற்று வலி வருவதாக அவரது பெற்றோரிடம் கூறினார்.

    இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினர்.

    இதை கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து மாணவியிடம் விசாரித்த போது நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

    இது குறித்து மயிலம் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் சுப்பு என்கிற சுரேந்தர், ராஜன், ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. #dharmapurigirlstudent #girlmolested
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்லிங் மலைகிராமாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷ், சதீஷ் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட சதீசுக்கு மருத்துவ பரிசோதனை எடுக்க போலீசார் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றனர்.

    இதைத்தொடர்ந்து சதீசை நேற்று தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மருத்துவ குழுவினர் செய்தனர்.

    இந்த நிலையில் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர், விசாரணை அதிகாரியான அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்து அங்குள்ள தடயங்களை ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

    மேலும் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் சரணடைந்த மற்றொரு குற்றவாளி ரமேஷை காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல் துறை திட்டமிட்டு உள்ளனர். இந்த வழக்கை சேலம் நீதிமன்றம் தருமபுரி மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு அனுப்பியவுடன் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். #dharmapurigirlstudent #girlmolested
    அரூர் அருகே பிளஸ்-2 மாணவியை நண்பருடன் சேர்ந்து கற்பழித்தது உண்மைதான் என கைதான வாலிபர் சதீஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். #dharmapurigirlstudent #girlmolested
    கம்பைநல்லூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சதீஷ் (வயது 22) நேற்று முன்தினம் ஏற்காட்டில் கைது செய்யப்பட்டார். அரூர் கொண்டுவரப்பட்ட அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை தருமபுரி மகளிர் விரைவு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 29-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு இன்று அதிகாலை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    கைதான வாலிபர் சதீஷ் மாணவியை கற்பழித்தது உண்மைதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம் அவர் கூறிய தகவல்கள் வருமாறு:-

    எனக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி அவரை சந்தித்து பேசுவேன். தீபாவளி சமயத்தில் ஊருக்கு வந்தபோது அவரை சந்தித்து தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டேன். அந்த சமயத்தில் அங்கு வந்த ரமேசும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட ரமேஷ் (22) என்ற வாலிபர் சேலம் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். 19-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி சிவா உத்தரவிட்டார். அவரை காவலில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்து உள்ளனர். இதேபோல சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சதீசையும் காவலில் எடுத்து விசாரிக்கலாமா? என்று போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த மாணவியின் உடல் நேற்று மாலை 5 மணிக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வேலூர் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் தண்டர்சீப், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் மதன்ராஜ், அமீர்தாசுல்தான் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். 3 மணி நேரம் நடைபெற்ற பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இரவு 8 மணிக்கு அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அரசு ஆம்புலன்ஸ் மூலம் சிட்லிங் மலை கிராமத்திற்கு மாணவி உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் அஞ்சலிக்கு பிறகு இரவு 11.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மாணவியின் வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் லட்சுமி.

    மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போஸ்கோ சட்டத்தின் கீழ் முதலில் கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். தற்போது போக்சோ சட்டப்பிரிவோடு, பாலியல் பலாத்காரம், கொலை ஆகிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. வழக்கு மாற்றம் குறித்த சட்ட மாறுதல் அறிக்கையும் இந்த வழக்கை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரியான அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி தாக்கல் செய்து உள்ளார். குற்ற பத்திரிகையில் வழக்கு மாற்றம் தொடர்பான விவரங்கள் இடம்பெறும். இந்த வழக்கில் விரைவான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாணவியின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை ஏற்கனவே மாணவி இறப்பதற்கு முன்பு 6-ந் தேதி ஒரு புகார் மனு கொடுத்து இருந்தார். அதில் மீண்டும் இந்த வழக்கில் புகார் மனு கொடுத்து உள்ளார். அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    எனது மகள் மலம் கழிக்க சென்றபோது சதீஷ், ரமேஷ் ஆகியோர் தன்னை கெடுத்ததாக கூறினார். இந்த விவரங்களை கடந்த 6-ந் தேதி பெண் உதவி ஆய்வாளர் விசாரித்தபோது பெண்ணின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு இதை சொல்லவில்லை என்றும் அவர் என்னிடம் கூறினார். இன்று எனது மகள் இறந்துவிட்ட நிலையில் என் மகளின் சாவுக்கு சதீஷ் மற்றும் ரமேஷ் இருவரும் தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மாணவியின் தந்தை அண்ணாமலை புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி சட்ட மாறுதல் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளார்.

    தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விரைவில் சிட்லிங் கிராமத்திற்கு வர உள்ளது. அவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் மாணவியின் குடும்பத்துக்கு விரைவில் நிதி உதவியும் வழங்கப்பட உள்ளது.

    ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன்

    மாணவியின் புகாரை பதிவு செய்யாமல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்துக் கிருஷ்ணன் மாவட்ட ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

    இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார்களா? என்பது குறித்து அரூர் ஆர்.டி.ஓ. புண்ணியக்கோடி விசாரணை நடத்தி வருகிறார். நேற்று அவர் மலை கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார். விரைவில் அவர் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் கோட்டப்பட்டி போலீசாரிடம் விசாரணை நடத்த உள்ளார். விசாரணை அறிக்கை தாக்கல் செய்த பிறகு போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கலெக்டர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் முடிவு செய்வார்கள்.  #dharmapurigirlstudent #girlmolested
    தருமபுரியில் பிளஸ்2 மாணவியை பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார். #DharmapuriGirlStudent #GirlMolested
    சேலம்:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் 3 நாட்களுக்கு பிறகு இறந்து போனார்.

    இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் தேடப்பட்ட சிட்லிங் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ரமேஷ் (22) என்ற வாலிபர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்தனர்.

    இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த ரமேஷ், சேலம் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார். இதையடுத்து அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கலாம் எனவும், இது தொடர்பாக விரைவில் மனு தாக்கல் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. #DharmapuriGirlStudent #GirlMolested
    அரூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலியானது தொடர்பான வழக்கை விசாரித்த கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் மாற்றப்பட்டார். #DharmapuriGirlStudent #GirlMolested
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் 3 நாட்களுக்கு பிறகு இறந்து போனார்.

    இந்த சம்பவத்தில் போலீசார் மெத்தனமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களை தப்பவிட்டதாக மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டினார்கள். மேலும் மாணவி கற்பழிக்கப்பட்டதை வெளியில் சொல்லக்கூடாது என்று அந்த மாணவியின் பெற்றோரை போலீசார் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    போலீசாரை கண்டித்து சிட்லிங் கிராம மக்கள் கடந்த 2 நாட்களாக மறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு ஆதரவாக 24 கிராம மக்கள் திரண்டனர். இதனால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. மாணவியின் பிணத்தையும் வாங்க மாட்டோம் என்று அவர்கள் கூறினர்.

    தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி சிட்லிங் மலை கிராமத்துக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உடன்பாடு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் களை 48 மணி நேரத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதேபோல சிட்லிங் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் தனிநபர் கழிப்பறை கட்டிக் கொடுக்க நிதி ஒதுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

    தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும், வெளிமாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர். தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றும். வெளிமாவட்ட டாக்டர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் மலைவாழ் மக்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. இதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர் தண்டர்சீப் என்பவர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டார்.

    இந்த நிலையில் பா.ம.க. தரப்பில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர்கள் செல்வகுமார், பராசக்தி ஆகியோர் பிரேத பரிசோதனைக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் நேற்று மாலையும், இன்று காலையும் மாணவியின் பிரேத பரிசோதனை நடைபெறவில்லை.

    பா.ம.க.வினர் குறிப்பிட்ட சென்னை டாக்டர் செல்வகுமார் தற்போது மாநாட்டிற்காக வெளியூர் சென்று உள்ளார். அவர் நாளை தான் ஊருக்கு திரும்புவார். அவர் வந்த பிறகுதான் பிரேத பரிசோதனை நடைபெறும் என்று தெரிகிறது. என்றாலும் இன்றே பிரேத பரிசோதனை நடத்தி மாணவியின் உடலை ஒப்படைத்து பதட்டத்தை தணிக்க வேண்டும் என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் உடன்பாடு ஏற்படுமா என்பது தெரியவில்லை.

    மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்ட சிட்லிங் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஏற்காட்டில் பதுங்கி இருந்த அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விடிய, விடிய விசாரணை நடத்தினார்கள். இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

    மேலும் தலைமறைவாக உள்ள ரமேஷ் (22) என்ற வாலிபர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.

    தருமபுரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் சிட்லிங் கிராமத்தில் இன்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் மாணவி வழக்கை கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் விசாரித்து வந்தார். இன்று அதிரடியாக அவர் மாற்றப்பட்டார். விசாரணை அதிகாரியாக அரூர் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி நியமிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் மீது கிராம மக்கள் புகார் தெரிவித்து இருந்தனர். அவரை சஸ்பெண்டு செய்யவேண்டும் என்றும் விசாரணை அதிகாரியாக அவர் தொடரக்கூடாது என்றும் கிராம மக்கள் கூறி இருந்தனர்.

    மேலும் குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களை தப்பவிட்டு அவர்களிடம் பணம் வாங்கியதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இதைத்தொடர்ந்து அவர் இன்று மாற்றப்பட்டார். கோட்டப்பட்டி போலீசார் ஏற்கனவே மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கை கற்பழிப்பு என்று பதிவு செய்யாமல் பாலியல் பலாத்கார முயற்சி என்று பதிவு செய்து உள்ளனர். மேலும் சம்பவம் நடந்த அன்று புகார் கொடுத்ததை ஏற்காமல் மறுநாள் தாமதமாக வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதனால் தான் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது கிராம மக்கள் கோபமாக இருந்தனர். இதனால் கிராம மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு இன்று விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு உள்ளார்.

    அடுத்தகட்டமாக போலீசாரின் அத்துமீறல் குறித்து அரூர் ஆர்.டி.ஓ. புண்ணியகோடி விசாரணை நடத்தி வருகிறார். அவர் விசாரணை நடத்தியபிறகு போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  #DharmapuriGirlStudent #GirlMolested
    திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை பலாத்காரம் செய்த காதலனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    கோவை:

    திருச்சி பொன்மலையை சேர்ந்தவர் சதீஷ்(வயது 25). கார் டிரைவர். இவர் திருச்சியில் இருந்து ரெயிலில் சென்ற போது, கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 17 வயதான மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறிய சதீஷ், திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.

    இதையறிந்த மாணவியின் பெற்றோர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சதீஷ் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்(போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.

    17 வயது மாணவனை தனது பாலியல் தேவைக்கு பயன்படுத்திய 26 வயது பெண்ணை ஜாமினில் விடுதலை செய்ய சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தன்னிடம் படித்துவந்த 17 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாக ஷ்ருஸ்ட்டி அசோக் காம்பிளே(26) என்ற பெண்ணை கைது செய்த போலீசார் சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு (POCSO) சிறையில் அடைத்துள்ளனர்.

    சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஒருவரை ஊடுருவி பாலியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்துபவர் என்று ஆண்பாலில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெண்ணுக்கு பொருந்தாது. எனவே என்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஷ்ருஸ்ட்டி அசோக் காம்பிளே மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு சிறப்பு நீதிபதி பராலியா முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. அவருக்கு ஜாமின் அளிக்க மறுத்த நீதிபதி சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

    ‘போக்ஸோ’ சிறப்பு சட்டத்தில் அவன் என்றோ அவள் என்றோ குறிப்பிடப்படவில்லை. பாலியல் ரீதியாக அத்துமீறும் ‘நபர்’ என்று மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நபர் என்னும் சொல் ஆண்களை மட்டுமே குறிக்கும் சொல் அல்ல. இந்த சட்டம் பாலியல் ரீதியாக அத்துமீறும் அனைத்து பாலினத்தவர்களுக்கும் பொதுவானது. இந்த சட்டமானது குற்றம்செய்யும் ஆண், பெண் இருபாலர்களுக்குமே பொருந்தும்.

    இந்த வழக்கை பொருத்தவரை பாதிக்கப்பட்ட மாணவனின் ஆசிரியையாக - அதிகாரம் செலுத்தக்கூடிய இடத்தில் இருந்த குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர், தனது தகுதியை பயன்படுத்தி, துஷ்பிரயோகமாக அந்த சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். எனவே அவரை ஜாமினில் விடுதலை செய்ய முடியாது.

    இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டுள்ளார். #Courtrejectsbailplea #womanarrestedunderPOCSO
    திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள மலைவாழ் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார்.

    இவரிடம், அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 4 சிறுவர்கள் கடந்த 9-ந்தேதி நைசாக பேசினர்.

    பிறகு மாணவியை ஜமுனாமரத்தூர் முருகன் கோவில் பின்புறத்தில் உள்ள மலை அடிவாரத்திற்கு அந்த 4 சிறுவர்களும் அழைத்துச் சென்றனர்.

    அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால், சிறுமியை மிரட்டி சிறுவர்கள் 4 பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இதையடுத்து, யாரிடமும் தங்களை பற்றி கூறக்கூடாது என மாணவியை சிறுவர்கள் மிரட்டினர். வன்கொடுமைக்கு ஆளான மாணவி, பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். இதுப்பற்றி சைல்டு ஹெல்ப்லைனில் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, போளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து 4 சிறுவர்களையும் கைது செய்தனர்.

    கைதானவர்களில் ஒரு சிறுவன், அத்திப்பட்டு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். #Tamilnews
    ×