search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lover Arrested In Pocso Act"

    • சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • இது குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சித்தைய ன்கோட்டை புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மணி மகன் சின்னத்துரை (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வ தாக கூறி நெருங்கி பழகி வந்தார். இதில் சிறுமி 8 மாத கர்ப்பிணியானர்.

    அதன் பிறகு திருமண த்துக்கு மறுத்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய த்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சின்னத்துரையை கைது செய்தனர்.

    நத்தம் டவுன் மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (56). கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    இது குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்க ப்பட்டது. இன்ஸ்பெக்டர் திலகா மற்றும் போலீசார் ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை பலாத்காரம் செய்த காதலனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    கோவை:

    திருச்சி பொன்மலையை சேர்ந்தவர் சதீஷ்(வயது 25). கார் டிரைவர். இவர் திருச்சியில் இருந்து ரெயிலில் சென்ற போது, கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 17 வயதான மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறிய சதீஷ், திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.

    இதையறிந்த மாணவியின் பெற்றோர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சதீஷ் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்(போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.

    ×