search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharmapuri girl died"

    தருமபுரியில் பிளஸ்2 மாணவியை பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார். #DharmapuriGirlStudent #GirlMolested
    சேலம்:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் 3 நாட்களுக்கு பிறகு இறந்து போனார்.

    இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் தேடப்பட்ட சிட்லிங் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ரமேஷ் (22) என்ற வாலிபர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்தனர்.

    இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த ரமேஷ், சேலம் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார். இதையடுத்து அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கலாம் எனவும், இது தொடர்பாக விரைவில் மனு தாக்கல் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. #DharmapuriGirlStudent #GirlMolested
    ×