search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salem court"

    தருமபுரியில் பிளஸ்2 மாணவியை பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார். #DharmapuriGirlStudent #GirlMolested
    சேலம்:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் 3 நாட்களுக்கு பிறகு இறந்து போனார்.

    இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் தேடப்பட்ட சிட்லிங் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ரமேஷ் (22) என்ற வாலிபர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்தனர்.

    இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த ரமேஷ், சேலம் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார். இதையடுத்து அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கலாம் எனவும், இது தொடர்பாக விரைவில் மனு தாக்கல் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. #DharmapuriGirlStudent #GirlMolested
    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மீது சேலம் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. #MKStalin #DMK
    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி தி.மு.க. சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக சேலம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    மு.க. ஸ்டாலின் மீது 499, 500 (தமிழக அரசு மீது ஆதாரம் இல்லாமல் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியது) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அரசு வக்கீல் தனசேகரன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்னும் ஒரு வாரத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.

    இதுகுறித்து அரசு வக்கீல் தனசேகரன் கூறியதாவது:-

    சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சரை பேடி என்றும், அமைச்சர்கள் ஊழல் செய்திருப்பதாகவும் தனித்தனியாக ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டி உள்ளார். இது தமிழக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் மு.க. ஸ்டாலின் மீது அரசு அனுமதி பெற்று இந்த வழக்கை தொடர்ந்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேலம் கோர்ட்டில் மு.க. ஸ்டாலின் மீது வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #MKStalin #DMK
    நாமக்கல்லில் முன்விரோதம் காரணமாக எலக்ட்ரீசியனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஆஷாத் (வயது 19). எலக்ட்ரீசியன். இவரது நண்பர் தீபக் (19). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு கொண்டிசெட்டிப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த அன்புநகரை சேர்ந்த ஜீவானந்தம் (23), கணபதிநகர் வினோத் (20) ஆகிய இருவரும் தீபக்கை கத்தியால் குத்த முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்தை ஆஷாத்தை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் ஆஷாத்துக்கு தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.

    அவர் சத்தம் போடவே அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து ஆஷாத்தை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தீபக் என்பவருக்கும், ஜீவானந்தம், வினோத் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருப்பதும், அதன் காரணமாகவே இச்சம்பவம் நடந்து இருப்பதும் தெரியவந்து உள்ளது.

    இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்த ஜீவானந்தம், வினோத் ஆகிய இருவரும் நேற்று சேலம் 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    சேலத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சேலம் கோர்ட்டில் சீமான் ஆஜர் ஆனார். #seeman

    சேலம்:

    நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு சேலம் மணக்காட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

    இந்த வழக்கு சேலம் ஒருங்கிணைந்த 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சீமான் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகல்களை பெற்றுக் கொண்டார்.

    பின்னர் சீமான் வெளியே வந்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான், பொதுக்கூட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக ஆட்சியாளர்கள் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. என்னை கோர்ட்டு, ஜெயில் என்று அலைக்கழித்தால் மக்கள் போராட வரமாட்டார்கள் என நினைக்கிறார்கள். மக்களுக்கு பிடிக்கவில்லை எனில் 8 வழிச்சாலைக்கு நாங்களே பூட்டுபோட்டு விடுகிறோம் என்று அமைச்சர் உதயகுமார் பேசுகிறார். முதல்-அமைச்சர் பேசும்போது இன்னும் 10 ஆண்டுகளில் வாகனங்கள் அதிகமாகிவிடும். 8 வழிச்சாலை போட்டால் விபத்துக்கள் குறைந்து விடும் என்கிறார். அமைச்சரும், முதல்-அமைச்சரும் பேச்சிலே முரண்பாடுகள் உள்ளது. ஆகவே மக்களுக்கு பிடிக்காத 8 வழிச்சாலையை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். seeman

    ×