என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட வாலிபர் திலகர்.
    X
    கைது செய்யப்பட்ட வாலிபர் திலகர்.

    சேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது

    சேத்தியாத்தோப்பு அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 7-ம் வகுப்பு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    சம்பவத்தன்று இரவு மாணவி அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த திலகர் மற்றும் ஜெய்சங்கர் அந்த மாணவியை தாக்கி, அங்குள்ள மறைவான பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவளை பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது அவள் அந்த பகுதியில் உள்ள கோவில் அருகே மயங்கிய நிலையில் கிடந்தாள்.

    அந்த சிறுமியை பெற்றோர் மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர். அவளிடம் பெற்றோர் விசாரித்தனர். அதற்கு பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.

    சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தாள். பின்னர் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மயக்கம் தெளிந்த பின்னர் அந்த மாணவியிடம், அவளது பெற்றோர் எதற்காக வி‌ஷம் குடித்தாய்? என்று விசாரித்தனர். அப்போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கூறி கதறி அழுதாள்.

    இதையடுத்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் திலகர், ஜெய்சங்கர் ஆகிய 2 வாலிபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலகரை கைது செய்தனர். ஜெய்சங்கரை வலைவீசி தேடிவருகின்றனர்.
    Next Story
    ×