search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lanka"

    • அடுத்த மாதம், மற்றொரு சீன ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ளது.
    • வருகிற ஜனவரி மாதம் முதல் ஓராண்டுக்கு இம்முடிவு அமலில் இருக்கும்.

    கொழும்பு:

    இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது இலங்கைக்கு வருகின்றன. அவை இலங்கை துறைமுகங்களில் நின்றுகொண்டு, ஆய்வுப்பணியில் ஈடுபடுகின்றன. அடுத்த மாதம், மற்றொரு சீன ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ளது. அதற்காக இலங்கை அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், எந்த வெளிநாட்டு உளவு கப்பலையும் இலங்கை கடல் எல்லைக்குள் வர அனுமதிப்பது இல்லை என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. வருகிற ஜனவரி மாதம் முதல் ஓராண்டுக்கு இம்முடிவு அமலில் இருக்கும்.

    கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையில் தங்கள் உளவு கப்பல்களை நிறுத்திய அனைத்து வெளிநாடுகளுக்கும் இம்முடிவை தெரிவித்து விட்டதாக இலங்கை வெளியுறவு மந்திரி அலி சாப்ரி தெரிவித்தார்.

    • யாழ்பாண மாவட்டத்தில் டெல்ப்ட் தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய இடங்களில் புதிதாக 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
    • மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகின்றன.

    கொழும்பு:

    இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள யாழ்பாண மாவட்டத்தில் டெல்ப்ட் தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய இடங்களில் புதிதாக 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் புதிய மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

    நேற்று முன்தினம் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரிசபை செய்தி தொடர்பாளரும், ஊடகத்துறை மந்திரியுமான பந்துல குணவர்தனே தெரிவித்தார்.

    • பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தற்போது மீண்டு வருகிறது.
    • பெண்கள் தலைமையிலான சிறு, குறு, நிலையான நிதியை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தற்போது மீண்டு வருகிறது. அந்நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கியது. இதில் முதல் தவணை வழங்கப்பட்ட நிலையில் 2-வது தவணைக்காக இலங்கை காத்திருக்கிறது.

    இந்த நிலையில் இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவ அந்நாட்டுக்கு ரூ.1668 கோடி கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்தது.

    நாட்டின் வங்கி துறையில் ஸ்திரத்தன்மை, மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், பெண்கள் தலைமையிலான சிறு, குறு, நிலையான நிதியை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    • மீனவர்களை தாக்கி விரட்டி அடித்து விட்டு சென்று விட்டனர்.
    • மீனவர்கள் வேதாரண்யம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    வேதாரண்யம்:

    கடந்த பல நாட்களாக புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர். இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

    பின்னர் மின்வளத்துறை சார்பில் விடுக்கப்பட்ட தடை நீக்கியதால் அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ள பள்ளத்தைச் சேர்ந்தவர் பக்கிரி சாமி (வயது 40). இவருக்கு சொந்தமான பைபர் படகில் படகு உரிமையாளர் பக்கிரிசாமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (33) சக்திவேல் ( 46) ஆகிய 3 பேரும் கோடியக்கரையில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர்.

    நேற்று மதியம் 3 பேரும் கோடியக்கரையில் இருந்து மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கும் தென்கிழக்கு 10 கடல் மைல தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையில் நள்ளிரவில் வந்து15 கிலோ வலையை வெட்டி உள்ளனர். பின்பு மீனவர்களை தாக்கி விரட்டி அடித்து விட்டு சென்று விட்டனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்று காலை 11 மணிக்கு கோடியக்கரைக்கு வந்து சேர்தனர்.

    இது குறித்து மீனவர்கள் வேதாரண்யம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேகமாக வந்த மினி வேனை சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரி தேவேந்திரன் உட்பட போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
    • பீடி இலைகளுடன் வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலை பண்டல்கள் கடத்தப்படுவதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தூத்துக்குடி மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வேகமாக வந்த மினி வேனை சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரி தேவேந்திரன் உட்பட போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 40 மூட்டைகளில் 1,200 கிலோ பீடி இலைகள் இருப்பதும், இதனை சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி ஆரேக்கியபுரத்தைச் சேர்ந்த ஆதவன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், பீடி இலைகளுடன் வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உலகளவில் இன்று மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது.
    • இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக புது சர்ச்சை.

    உலகளவில் தமிழர்கள் மற்றும் தமிழர் அமைப்புகள் சார்பில் இன்று (நவம்பர் 27) மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழீழ தலைவர் பிரபாகரனின் மகள் நான், எனது பெயர் துவாரகா எனக் கூறி வெளியாகி இருக்கும் வீடியோவால் இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த வீடியோவில் பேசிய அவர், "எத்தனையோ துரோகங்கள், வீழ்ச்சிகளுக்கு பின் உங்களை நான் சந்திக்கிறேன். தமிழீழ மக்களுக்காக பணி செய்ய காலம் வாய்ப்பளிக்கும் என்று நம்புகிறேன். உலகில் தனித்து நின்று தேச விடுதலைக்காக நாம் போராடினோம். தமிழீழ தாயகத்தை சிங்கள அரசு முழுவதுமாக மாற்றியமைத்துள்ளது."

    "ஆயுத போராட்டத்தை விட அரசியல் போராட்டமே சிறந்தது என எந்த நாடும் இதுவரை உதவவில்லை. ஆயுத போராட்டத்தை விட அரசியல் போராட்டமே சிறந்தது என கூறிய எந்த நாடும் இதுவரை உதவவில்லை. மாவீரர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள். ஆயுத போராட்டம் முடிந்தாலும், அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் உள்ளது."

    "தமிழீழத்திற்கு போராடி வறுமையில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டியது நம் கடமை. இத்தனை ஆண்டுகளாக நமக்கு துணை நிற்கும் அரசியல் தலைவர்கள், தாய் தமிழக உறவுகளுக்கு நன்றி. சிங்கள மக்களுக்கு நாம் என்றுமே எதிரி அல்ல, எதிராக செயல்பட்டதும் இல்லை. தேசிய தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டது போல் பாதைகள் மாறினாலும், நமது லட்சியம் மாறாது," என்று பேசியுள்ளார்.

    உண்மையில் வீடியோவில் தோன்றி பேசியது பிரபாகரனின் மகள் துவாரகா தானா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்ப உதவியால் உருவாக்கப்பட்ட வீடியோவா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    • இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார்.
    • அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.

    கொழும்பு:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

    இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. கிரிக்கெட் அமைப்பு அரசாங்கத்தின் தலையீடு இன்றி தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.

    இதனால் அடுத்தாண்டு இலங்கையில் நடைபெற இருந்த ஆடவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. அந்த வாய்ப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த தொடரில் உள்ள அணிகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஏ பிரிவில் இந்தியா, வங்காளதேசம், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. பி பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து. சி பிரிவில் ஆஸ்திரேலியா இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா. டி பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளது. 

    • இலங்கை அணியின் மேத்யூஸ் மட்டும் 12 ரன்களை எடுத்தார்.
    • இந்திய வீரர் முகமது சமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. பேட்டிங்கில் இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெறும் 4 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

    இவருடன் களமிறங்கிய சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 92 ரன்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி 88 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 82 ரன்களை எடுத்த போது அவுட் ஆனார்.

     

     கே.எல். ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். போட்டி முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்தது. இலங்கை சார்பில் தில்ஷான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளையும், துஷமந்தா சமீரா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சி காத்திருந்தது. இந்திய வீரர் பும்ரா வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார். இதே போன்று சிராஜ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய இந்திய வீரர்களால் இலங்கை அணி 3 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இலங்கை அணி வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர். அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் மட்டும் பொறுமையாக ஆடினார். இவரும் 12 ரன்களில் அவுட் ஆனார். இதன் மூலம் இந்திய அணி 19.4 ஓவர்களில் வெறும் 55 ரன்களை விட்டுக் கொடுத்து இலங்கை அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியது.

    போட்டி முடிவில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நடப்பு உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்திய அணி சார்பில் சுப்மன் கில் 92 ரன்களை குவித்தார்.
    • இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. பேட்டிங்கில் இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெறும் 4 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

    இவருடன் களமிறங்கிய சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 92 ரன்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி 88 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 82 ரன்களை எடுத்த போது அவுட் ஆனார். கே.எல். ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

    போட்டி முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்தது. இலங்கை சார்பில் தில்ஷான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளையும், துஷமந்தா சமீரா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • இலங்கை அணியின் பதும் நிசங்கா 46 ரன்களை குவித்தார்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஹமத் ஷா 62 ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 30-வது போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. பூனேவில் நடைபெறும் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய நிசங்கா மற்றும் கருணரத்னே முறையே 46 மற்றும் 15 ரன்களை எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கேப்டன் குசல் மெண்டிஸ் 39 ரன்களையும், சதீர சமரவிக்ரம 36 ரன்களையும் எடுத்தனர். சரித் அசலங்கா 14 ரன்களையும், மேத்யூஸ் 23 ரன்களிலும், சமீரா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய தீக்ஷனா பொறுப்பாக ஆடி 29 ரன்களை எடுத்தார். போட்டி முடிவில் இலங்கை அணி 241 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பாரூக்கி 4 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரகுமான 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரஷித் கான், அப்துல்லா உமர்சாய் மற்றும் நவீன் உல் ஹக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரராக களமிறங்கிய ரஹ்மதுல்லா குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய இப்ராஹிம் சத்ரான் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹமத் ஷா 62 ரன்களையும், கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிடி 58 ரன்களையும் எடுத்தார்.

    இவருடன் விளையாடிய அஸ்மதுல்லா உமர்சாய் அரைசதம் அடித்தார். போட்டி முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 45.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 242 ரன்களை அடித்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • இலங்கை அணியின் பதும் நிசங்கா 46 ரன்களை குவித்தார்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் பசல்ஹக் பாரூக்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 30-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. பூனேவில் நடைபெறும் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய நிசங்கா மற்றும் கருணரத்னே முறையே 46 மற்றும் 15 ரன்களை எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கேப்டன் குசல் மெண்டிஸ் 39 ரன்களையும், சதீர சமரவிக்ரம 36 ரன்களையும் எடுத்தனர். சரித் அசலங்கா 14 ரன்களையும், மேத்யூஸ் 23 ரன்களிலும், சமீரா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய தீக்ஷனா பொறுப்பாக ஆடி 29 ரன்களை எடுத்தார். போட்டி முடிவில் இலங்கை அணி 241 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பாரூக்கி 4 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரகுமான்  2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரஷித் கான், அப்துல்லா ஒமர்சாய் மற்றும் நவீன் உல் ஹக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • அனுமதிக்கும் திட்டத்தை இலங்கை அரசு துவங்கி இருக்கிறது.
    • இலங்கை நாட்டிற்கு விசா எடுக்காமல் பயணம் செய்ய முடியும்.

    ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு விசா எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். சில நாடுகளில் விசா எடுப்பதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையாகவும், சில நாடுகளில் இந்த வழிமுறைகள் மிகவும் கடுமையாகவும் இருக்கின்றன.

    அந்த வகையில், இந்தியாவில் இருந்து இலங்கை செல்வதற்கு இந்தியர்கள் இனி விசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இலங்கை அரசு அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பின் மூலம் இந்தியர்கள் விசா எடுக்காமலேயே இலங்கைக்கு சென்றுவர முடியும். விசா இன்றி வெளிநாட்டவரை அனுமதிக்கும் திட்டத்தை இலங்கை அரசு சோதனை முறையில் துவங்கி இருக்கிறது.

    அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை இந்தியர்கள் மட்டுமின்றி சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா என ஆறு நாடுகளை சேர்ந்த குடிமக்கள் இலங்கை நாட்டிற்கு விசா எடுக்காமல் பயணம் செய்ய முடியும். இலங்கை அமைச்சரவையில் ஒப்புதலை பெற்ற பிறகே, இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாக தெரிகிறது.

    இலங்கை அரசின் இந்த அறிவிப்பு காரணமாக அடுத்த ஐந்து மாத காலத்திற்கு இந்தியா உள்பட உலகின் ஏழு நாடுகளை சேர்ந்த குடிமக்கள், இலங்கைக்கு விசா எடுக்காமலேயே பயணம் செய்ய முடியும். அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு பிறகும், இந்த நடைமுறை அமலில் இருக்குமா என்ற கேள்விக்கு தற்போது வரை இந்த பதிலும் இல்லை.

    ×