search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உளவு கப்பல்"

    • சிறப்பு ஆராய்ச்சி கப்பல் என்ற பெயரில் அந்த கப்பலை உருவாக்க பாகிஸ்தானுக்கு சீனா அதிகளவில் உதவியுள்ளது.
    • சீனா தனது உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்தியது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கடற்படையில் முதல் உளவு கப்பல் சேர்க்கப்படுகிறது. இதற்காக பாகிஸ்தானுக்கு சீனா உதவிகளை வழங்கியுள்ளது.

    பி.என்.எஸ். ரிஸ்வான் என்ற 87 மீ நீளமுள்ள இந்த கப்பல், ஏவுகணைகள் ஏவுவதை கண்காணிப்பது, உளவுத் துறையின் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ளும் திறனை கொண்டதாகும்.

    சிறப்பு ஆராய்ச்சி கப்பல் என்ற பெயரில் அந்த கப்பலை உருவாக்க பாகிஸ்தானுக்கு சீனா அதிகளவில் உதவியுள்ளது.


    நவீன வசதிகள் கொண்ட இதுபோன்ற, கப்பல்களை அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷியா, பிரான்ஸ் ஆகிய ஒரு சில நாடுகள் மட்டுமே வைத்துள்ளன. தற்போது பாகிஸ்தானுக்கு அந்த கப்பலை சீனா வழங்கி உள்ளது.

    ஏற்கனவே சீனா தனது உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்தியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சமீபத்தில் மாலத்தீவுக்கு சீனாவின் உளவுக்கப்பல் வந்து சென்றுள்ளது. மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல் சுற்றி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு கப்பலை வழங்கி சீனா உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அடுத்த மாதம், மற்றொரு சீன ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ளது.
    • வருகிற ஜனவரி மாதம் முதல் ஓராண்டுக்கு இம்முடிவு அமலில் இருக்கும்.

    கொழும்பு:

    இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது இலங்கைக்கு வருகின்றன. அவை இலங்கை துறைமுகங்களில் நின்றுகொண்டு, ஆய்வுப்பணியில் ஈடுபடுகின்றன. அடுத்த மாதம், மற்றொரு சீன ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ளது. அதற்காக இலங்கை அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், எந்த வெளிநாட்டு உளவு கப்பலையும் இலங்கை கடல் எல்லைக்குள் வர அனுமதிப்பது இல்லை என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. வருகிற ஜனவரி மாதம் முதல் ஓராண்டுக்கு இம்முடிவு அமலில் இருக்கும்.

    கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையில் தங்கள் உளவு கப்பல்களை நிறுத்திய அனைத்து வெளிநாடுகளுக்கும் இம்முடிவை தெரிவித்து விட்டதாக இலங்கை வெளியுறவு மந்திரி அலி சாப்ரி தெரிவித்தார்.

    • கப்பல்கள் அனைத்துமே உயர் தொழில் நுட்பம் கொண்ட உளவு கப்பல்கள் ஆகும்.
    • கப்பல் கடல் ஆய்வுப் பணியில் ஈடுபட்டது.

    புதுடெல்லி:

    இலங்கை கடல் பகுதியில் ஆய்வு பணி என்ற அடிப்படையில் சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தியாவும் இதற்கு அடிக்கடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீன உளவு கப்பல்கள் இலங்கையின் அம்பன் தோட்டா, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அடிக்கடி வந்து செல்கின்றன. இந்த கப்பல்கள் அனைத்துமே உயர் தொழில் நுட்பம் கொண்ட உளவு கப்பல்கள் ஆகும். இந்த கப்பல்கள் இலங்கை கடல் பரப்பில் இருக்கும் பொருளாதார வளம் பற்றி ஆய்வு செய்வ தற்காகவே வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த கப்பல்கள் இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவே இலங்கை கடல் பகுதிக்கு அடிக்கடி வருவதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது.

    சீனாவின் உளவு கப்பலான 'ஷி யான்-6' கடந்த அக்டோபர் மாதம் இலங்கைக்கு வந்தது. அந்த கப்பல் இலங்கை கடல் பகுதிக்கு வெளியே இந்திய பெருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த கப்பல் கடல் ஆய்வுப் பணியில் ஈடுபட்டது. ஆனால் அந்த கப்பலும் இந்தியாவை உளவு பார்க்க வந்ததாகவே இந்தியா சார்பில் இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி 'ஷி யான்-6' கப்பல் தனது ஆய்வுப்பணியை முடித்து விட்டு கடந்த 2-ந்தேதி சிங்கப்பூர் சென்றடைந்தது. இந்த கப்பல் ஆய்வு பணிக்காக இலங்கையை சென்றடையும் முன்பு சென்னையில் இருந்து 500 கடல் மைல் தொலைவில் காணப்பட்டது.

    ஷி யான்-6

    ஷி யான்-6

    இந்த நிலையில் இந்திய கடல் பகுதிக்கு அடுத்த மாதம் மேலும் ஒரு சீன உளவுக்கப்பல் வருகிறது. இந்த கப்பல் 5 மாதம் தங்கி இருந்து ஆய்வு செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த உளவு கப்பலை இலங்கை மற்றும் மாலத்தீவு துறைமுகங்களில் நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக அந்த 2 நாடுகளிடமும் சீனா அனுமதி கேட்டுள்ளது.

    இந்த கப்பல் வருகிற ஜனவரி மாதம் 5-ந்தேதி முதல் மே மாதம் வரை 5 மாதங்கள் இந்திய பெருங் கடலின் தெற்கு பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதையறிந்த மத்திய அரசு, இலங்கை, மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுடனும் ஏற்கெனவே பேசி சீனாவின் உளவு திட்டத்தை எடுத்துக்கூறி சீன உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில் ஆய்வு செய்வதை அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இதற்கிடையே சீனாவின் உளவு கப்பலான 'ஷியாங் யாங் ஹாங் 03' தென் சீன கடல் பகுதியில் உள்ள ஷியாமென் கடற்கரையில் நிறுத்தப்பட்டு உள்ளது. 2 நாடுகளிடமும் அனுமதி பெற்ற பிறகு அந்த கப்பல் மலாக்கா வழியாக மாலத் தீவு மற்றும் இலங்கைக்கு பயணிக்கும்.

    இந்த உளவு கப்பல் 4813 டன் எடை கொண்டது. இந்த கப்பலில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வு கருவிகள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் இடம்பெற்று உள்ளன.

    இலங்கையை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாலும், மாலத்தீவு அரசு தற்போது சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாலும் உளவு கப்பலை அனுப்பி இந்தியாவை உளவு பார்க்க இந்த இரு நாடுகளையும் பயன்படுத்துகிறது. சீனாவின் தந்திரத்தை அறிந்ததால் இந்தியா சீன கப்பல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேயுடன், பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் எடுத்துக் கூறியுள்ளார். ஆனாலும் கடந்த முறை சீன கப்பலுக்கு ரணில் விக்கிரமசிங்கே அனுமதி அளித்தார்.

    சீனா ஏற்கனவே கம்போடியா, மியான்மர், இலங்கை, பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துறைமுகங்களை எதிர்கால கடற்படை நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு கையகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த துறைமுகங்களில் முதலீடும் செய்துள்ளது. இந்திய பெருங்கடல் முழுவதிலும் சீனா தனது தடத்தை விரிவுபடுத்த முயல்வதால் அதை தடுக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

    • ‘ஷியான் யாங் ஹாங் - 03’ என்ற பெயர் கொண்ட இந்த கப்பல் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது.
    • அதிநவீன உளவு கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சீன கப்பல் வருகைக்கு இந்தியா மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கை கடல் பகுதியில் ஆய்வு பணி என்ற அடிப்படையில் சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தியாவும் இதற்கு அடிக்கடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீன உளவு கப்பல்கள் இலங்கையின் அம்பன் தோட்டா, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அடிக்கடி வந்து செல்கின்றன. இந்த கப்பல்கள் அனைத்துமே உயர் தொழில் நுட்பம் கொண்ட உளவு கப்பல்கள் ஆகும். இந்த கப்பல்கள் இலங்கை கடல் பரப்பில் இருக்கும் பொருளாதார வளம் பற்றி ஆய்வு செய்வதற்காகவே வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த கப்பல்கள் இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவே இலங்கை கடல் பகுதிக்கு அடிக்கடி வருவதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது.

    சீன கப்பல்கள் இலங்கை கடல் பகுதியில் நின்றபடியே தமிழக கடல் பகுதிகள் மற்றும் தமிழகத்துக்குள் இருக்கும் இந்திய படைகள் ஆகியவற்றை பற்றி முழுமையான தகவல்களை கண்காணித்து அறிந்து கொள்ளும் பணிகளில் ஈடுபடுவதாகவும், தென் மாநிலங்களை உளவு பார்ப்பதாகவும் இந்தியா தரப்பில் கூறப்படுகிறது. சீன உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலேயே அவை இலங்கைக்கு வர இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

    சீனாவின் உளவு கப்பலை இலங்கை கடல் பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று இந்தியா தரப்பில் இலங்கை அரசிடம் பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனாலும் இலங்கை அரசால் சீன கப்பலை தடுக்க முடியவில்லை. காரணம், இலங்கை அரசு சீனாவிடம் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் பொருளாதார உதவியை பெற்றுள்ளது.

    இந்நிலையில் சீனாவின் உளவு கப்பலான 'ஷின் யான் - 6' கடந்த மாதம் இலங்கைக்கு வந்தது. அந்த கப்பல் இலங்கை கடல் பகுதிக்கு வெளியே இந்திய பெருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடல் ஆய்வுப்பணியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த கப்பலும் இந்தியாவை உளவு பார்க்க வந்ததாகவே இந்தியா சார்பில் இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த கப்பல் கொழும்பு செல்வதற்காக காத்திருக்கிறது. ஆனால் அந்த கப்பல் சீனாவுக்கு எப்போது திரும்பும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில் சீனாவில் இருந்து மேலும் ஒரு உளவு கப்பல் இலங்கைக்கு வருகிறது. 'ஷியான் யாங் ஹாங் - 03' என்ற பெயர் கொண்ட இந்த கப்பல் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது. இது பல்நோக்கு கப்பல் ஆகும். இந்த கப்பலை இலங்கைக்கு அனுப்ப அந்த நாட்டிடம் சீனா அனுமதி கேட்டுள்ளது.

    இந்த கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சகத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இலங்கை கடற்பரப்பின் பொருளாதார வளத்தை ஆராய்ந்து இலங்கைக்கு உதவுவதற்காகவே இந்த கப்பல் அனுப்பி வைக்கப்படுவதாக மீண்டும் காரணம் சொல்லப்படுகிறது.

    'ஷியான் யாங் ஹாங் - 03' அதிநவீன கப்பல் வருகிற ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகிறது. ஜனவரி 5-ந்தேதி முதல் பிப்ரவரி 20-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த கப்பல் இலங்கை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு பல்வேறு ஆய்வுகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாக சீனா தரப்பில் கூறப்படுகிறது. இந்த கப்பல் 99.06 மீட்டர் நீளம் கொண்ட பல்நோக்கு கப்பல் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அதிநவீன உளவு கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சீன கப்பல் வருகைக்கு இந்தியா மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கப்பல் இலங்கை வருவதற்கு இலங்கை அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று இலங்கைக்கு இந்தியா சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் இலங்கை அரசு என்ன முடிவு எடுக்கும் என்று இந்தியா எதிர்பார்த்து காத்திருக்கிறது.

    • கப்பல் மொத்தம் 1115 டன் எடை, 129 மீட்டர் நீளம் மற்றும் 17 மீட்டர் அகலம் கொண்டது.
    • இந்தியப் பெருங்கடல் பகுதியை சுற்றி வளைக்கும் நோக்கத்துடன் செயல்படும் சீனா அதற்கு தளமாக இலங்கையை பயன்படுத்தி வருகிறது.

    புதுடெல்லி:

    சீனாவின் உளவு கப்பலான ஷி யான்-6 வருகிற 23-ந்தேதி இலங்கைக்கு வர உள்ளது. இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகங்களில் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    3,999 டன் எடை கொண்ட இந்த கப்பல் குவாங்சோவில் உருவானது. தற்போது தென் சீனக் கடலுக்குள் தெற்கு திசையில் பயணிக்கும் இந்த உளவுக் கப்பல் மலாக்கா கடல் பகுதி வழியாக இலங்கையை அடைகிறது. இலங்கை பொருளாதார மண்டலம் மற்றும் தெற்கு இந்தியப் பெருங்கடலின் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்த கப்பல் வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கப்பலில் 20 அதி நவீன அறிவியல் ஆய்வு கருவிகள் உள்ளன. 13 ஆய்வு குழுவினர் இதில் இடம்பெற்று உள்ளார்கள். இந்த கப்பல் 17 நாட்கள் முகாமிட்டு இலங்கை கடற் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் இலங்கை கடற்படை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த கப்பல் மொத்தம் 1115 டன் எடை, 129 மீட்டர் நீளம் மற்றும் 17 மீட்டர் அகலம் கொண்டது.

    இந்தியப் பெருங்கடல் பகுதியை சுற்றி வளைக்கும் நோக்கத்துடன் செயல்படும் சீனா அதற்கு தளமாக இலங்கையை பயன்படுத்தி வருகிறது. இலங்கைக்கு பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் உதவுவது போல துறைமுகங்கள் மற்றும் கடற்படை தளங்களை நோக்கி கவனம் செலுத்தி வருகிறது.

    சீனாவின் உளவு மற்றும் போர்க் கப்பல்களின் மூலம் 750 கி.மீ. தூரம் வரையிலான இடங்களைக் கண்காணிக்க முடியும். அதன்படி, இலங்கைக்கு மிக அண்மையில் உள்ள இந்தியாவின் ஸ்ரீஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை இந்தக் கப்பல் மூலம் உளவு பார்க்க வாய்ப்பு உள்ளது. இதனால், சீன கப்பல்களின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. எதிர்ப்பை மீறி இலங்கை சீன கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளது.

    அதிநவீன ஆய்வக கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு வசதிகளை கொண்ட இந்த கப்பலின் செயல்பாடுகள் இலங்கை கடற்பரப்பில் முன்னெடுக்கும் பட்சத்தில் அது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும். எனவே இந்திய பெருங்கடலுக்குள் ஷி யான் - 6 கப்பலை அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய அரசு இலங்கையை வற்புறுத்தி உள்ளது.

    சீனாவின் ராணுவக் கப்பல்களுக்கு இலங்கை இடம் கொடுப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணிப்பதில் பெயர் பெற்ற சீனக் கப்பலான யுவான் வாங்-5 அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

    மற்றொரு உளவு கப்பல் ஏற்கனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந் தேதி இலங்கைக்கு வருகை தந்ததோடு 10 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் முகாமிட்டிருந்தது.

    சீனாவின் போர்க்கப்பலான ஹை யாங் 24 சில வாரங்களுக்கு முன்னர் 138 மாலுமிகளுடன் கொழும்பு துறைமுகத்தில் தங்கியிருந்தது. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்த காலத்தில், சீனாவின் பெய்ஜிங் கடனாகக் கொடுத்த தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்காக, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவிடம் ஒப்படைத்திருந்தார்.

    இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது. அது போல இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்தியா 3.5 பில்லியன் டாலர் கடனை வழங்கி உள்ளதுடன் எரிபொருள், மருந்துகள், அரிசி, பால் பவுடர் மற்றும் உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவி உள்ளது.

    எனினும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சு றுத்தலை ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்து சீன உளவு கப்பல்களுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதனால் இலங்கை - இந்தியாவுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • மத்திய அரசுக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • இலங்கையில் நிறுத்தப்படுகின்ற சீன உளவு கப்பல்களால் தமிழகத்தை சேர்ந்த தென் மாவட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    இந்தியா தனது 75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடிய நேரத்தில் இந்திய எல்கைக்கு அருகில் காரகோரம் மலைப்பகுதியில் உள்ள சமதள பகுதி யில் சீன ராணுவம் போர் ஒத்திகை செய்யும் காட்சிகள் அங்குள்ள தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

    சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைகோள் ஆய்வு பணி என்று பதிவு செய்யப்பட்டுள்ள உளவுக்கப்பல் இலங் கையில் உள்ள அம்பாந் தோட்டைதுறை முகத்தில் வந்து நங்கூரமிடப்பட்டது. இலங்கைக்கு மிக அருகில் உள்ள குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள், இயற்கை வளங்கள், அணைகள், அரியவகை மணல்களை பிரித்தெடுக்கும் மணவா ளக்குறிச்சி மணல் ஆலை உள்ளது.

    இதைப்போன்று நெல்லை மாவட்டத்தில் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டிணத்தில் அமைய இருக்கும் ராக்கெட் தளம் போன்றவை அமைந்துள்ளன.

    இலங்கையில் நிறுத்தப்படுகின்ற சீன உளவு கப்பல்களால் தமிழகத்தை சேர்ந்த தென் மாவட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு எதிர்காலங் களில் முறையாக திட்டமிட்டு, அண்டை நாடான இலங்கையில் இதுபோன்ற உளவுக் கப்பல்கள் வருவதை தடுப்பதற்கு முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த கோரிக்கை தொடர்பாக பிரதமர் மோடிக்கும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கும் தளவாய்சுந்தரம் மனு அனுப்பியுள்ளார்.

    ×