என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beedi leaves"

    • கூடங்குளம் அருகே உள்ள உலகரட்சகர்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தபோது அதில் சுமார் 2 டன் அளவு பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்கள் வழியாக படகுகளில் இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலை, கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுபவதை தடுக்க நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்திலும் கிழக்கு கடற்கரை சாலையில் கூடங்குளம் பகுதியில் சோதனை சாவடி அமைத்து நெல்லை மாவட்ட போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கூடங்குளம் கடல் வழியாக படகில் தடை செய்யப்பட்ட பீடி இலையை ஒரு கும்பல் கடத்துவதற்கு முயற்சி செய்வதாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே அவரது தலைமையின் கீழ் இயங்கும் தனிப்படை கூடங்குளம் பகுதிக்கு விரைந்தது.

    கூடங்குளம் அருகே உள்ள உலகரட்சகர்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் அந்த வழியாக வந்த மினிலாரியை தடுத்து நிறுத்தினர். டிரைவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தபோது அதில் சுமார் 2 டன் அளவு பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது கூடங்குளத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலையை அனுப்பி வைக்க கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார்.

    அந்த நேரத்தில் ஒரு காரில் வேகமாக வந்த 4 பேர் கும்பல் போலீசாரை கண்டதும் காரை திருப்பிக்கொண்டு தப்ப முயன்றது. அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தபோது அந்த கும்பல் தான் பீடி இலையை இலங்கைக்கு கடத்த முயன்றது என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பீடி இலையுடன் லாரியையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலீசாரின் பிடியில் சிக்கிய 5 பேரையும் கூடங்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர்கள் கூத்தங்குழி கிராமத்தை சேர்ந்த ஜெனா(வயது 70), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சண்முகம்(25), ஏரலை சேர்ந்த சந்தோஷ்குமார்(23), தூத்துக்குடியை சேர்ந்த அந்தோணி ராஜ்(36), வள்ளியூர் அருகே உள்ள தளபதி சமுத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார்(42) என்பது தெரியவந்தது.

    அந்த கும்பல் கடல் வழியாக கடத்த முயன்ற பீடி இலையின் இலங்கை மதிப்பு ரூ.50 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • இந்திய கடலோர காவல்படையினர் நடவடிக்கை.
    • 4 படகுகளில் இருந்த 104 மூட்டை பீடி இலைகள் பறிமுதல்.

    மன்னார் வளைகுடாவில் வஜ்ரா கப்பல் மூலம் இந்திய கடலோர காவல்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது சர்வதேச கடல் எல்லைக்கு அருகே 4 படகுகளை கண்ட அவர்கள் அதனை வழிமறித்தனர். அந்த படகுகளில் இருந்த மீனவர்கள், கடலோர காவல்படையினரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர், அவர்களை விரட்டி பிடித்த கடலோர காவல்படையினர் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

    விசாரணையில் இரண்டு இந்திய படகுகள் மற்றும் இரண்டு இலங்கை படகுகள் மூலம் பீடி இலையை கடத்த முயன்றது தெரிய வந்தது. இந்த 4 படகுகளிலும் சுமார் 2.8 கிலோ எடை கொண்ட 104 மூட்டை பீடி இலைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்,பின்னர் உள்ளூர் அதிகாரிகளிடம் மீனவர்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகுகளையும் ஒப்படைத்தனர். அந்த மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

    • போலீசார் லோடு வேனை சோதனை செய்ததில் 40 மூட்டைகளில் 1,200 கிலோ பீடி இலை பண்டல் இருந்தது தெரியவந்தது.
    • கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை தூத்துக்குடி சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பாலம் அருகில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த லோடு வேனை நிறுத்த சொல்லியபோதும் லோடுவேன் நிற்காமல் தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் திரும்பி சென்றது.

    இதனைத்தொடர்ந்து அந்த லோடு வேனை பின் தொடர்ந்து சென்று போலீசார் தடுத்து நிறுத்திய போது டிரைவர் மற்றும் மற்றொருவர் காட்டுப் பகுதியில் தப்பி ஓடிவிட்டனர்.

    இதனையடுத்து போலீசார் லோடு வேனை சோதனை செய்ததில் 40 மூட்டைகளில் 1,200 கிலோ பீடி இலை பண்டல் இருந்தது தெரியவந்தது. இதனால் தப்பியோடிய 2 பேரும் பீடி இலை கடத்தலில் ஈடுபட்டுள்ளதை அறிந்த போலீசார் லோடு வேனை பறிமுதல் செய்தனர்.

    கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை தூத்துக்குடி சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடியவர்கள் யார்? எங்கிருந்து கடத்தி வந்தனர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
    • பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடற்கரை வழியாக பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு தூத்துக்குடி கடற்கரை சாலை மீன்பிடி துறைமுகத்தை அடுத்து இனிகோநகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த லோடு ஆட்டோவை போலீசார் மறித்தனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள் லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

    லோடு ஆட்டோவை போலீசார் சோதனை செய்தபோது அதில் 40 மூடைகளில் 2 டன் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேகமாக வந்த மினி வேனை சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரி தேவேந்திரன் உட்பட போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
    • பீடி இலைகளுடன் வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலை பண்டல்கள் கடத்தப்படுவதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தூத்துக்குடி மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வேகமாக வந்த மினி வேனை சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரி தேவேந்திரன் உட்பட போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 40 மூட்டைகளில் 1,200 கிலோ பீடி இலைகள் இருப்பதும், இதனை சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி ஆரேக்கியபுரத்தைச் சேர்ந்த ஆதவன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், பீடி இலைகளுடன் வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து பீடி இலைகள் மற்றும் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள், மஞ்சள் மற்றும் பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இதை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் இருந்து படகு மூலம் 2 டன் பீடி இலைகள் கடத்தி சென்ற 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து பீடி இலைகள் மற்றும் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

    கடத்தலில் ஈடுபட்டதாக தூத்துக்குடி இனிகோ நகர், சிலுவைபட்டி மற்றும் லூர்தம்மாள்புரம் பகுதியை சேர்ந்த அஸ்வின் (வயது19), அபிஷ்டன் (19), மரிய அந்தோணி (20), டிஜோ(24), காட்வே (19) ஆகிய 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டம் கூத்தன்குழி கடற்கரை வழியாக படகு மூலம் பீடி இலைகளை கடத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, மாத்திரைகள், பீடி இலைகள், தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது.

    மேலம் இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சட்ட விரோதமாக கடத்தல்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த இருப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரியை போலீசார் மறித்தனர். உடனே அதில் இருந்த டிரைவர் உள்பட சிலர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். தொடர்ந்து போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. அதனையும், கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரியையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்த முயன்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வாலிநோக்கம் கடலோர காவல்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? என்பது குறித்து தப்பியோடிய நபர்களையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • வேனில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 1,250 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.
    • ஆலந்தலை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக அவர்கள் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் படகு மூலம் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், செல்வகுமார், தலைமை காவலர்கள் ராமர், இருதயராஜ், காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திருச்செந்தூர் உட்கோட்டம் திருச்செந்தூர் போலீஸ் நிலைய எல்லை அருகே கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் ஆலந்தலை ஊருக்கு வடக்கே கணேசபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சென்ற வேனை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது வேனில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 1,250 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.

    அதனை ஆலந்தலை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக அவர்கள் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து பீடி மூட்டைகளை கைப்பற்றிய போலீசார் வேனை பறிமுதல் செய்தனர். மேலும் வேனில் இருந்த ஆலந்தலை ராஜா (வயது29), வேனை ஓட்டி வந்த டிரைவர் தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கப்புரத்தை சேர்ந்த பாலமுருகன் (35) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோதனையிட முயன்றதும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடினர்.
    • ரூ. 40 லட்சம் மதிப்பில் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டணம் கடற்கரைக்கு செல்லும் பாதை வழியாக இலங்கைக்கு வாகனம் மூலம் பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக மாவட்ட `கியூ' பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர்கள் ராமர், இருதய ராஜகுமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது லோடு வேனில் 30 கிலோ எடை கொண்ட 84 மூட்டைகள் பீடி இலைகள் இருந்ததும், அதனை இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

    போலீசார் வாகனத்தை சோதனையிட முயன்றதும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். இதை யடுத்து பீடி இலைகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த 'கியூ' பிரிவு போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, வெள்ள மடத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 63) என்பவரை மட்டும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலையின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இதேபோல் நேற்று அதிகாலை தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதற்கு முன்பு வேம்பார் கடற்கரையில் ரூ 50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.இதன்படி ஒரே வாரத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள பீடி இலை கடத்தல்களை `கியூ' பிரிவு போலீசார் தடுத்து கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    • வடபகுதியில் அதிகாலை சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்தனர்.
    • கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசார் வருவதை தெரிந்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரை பகுதி வழியாக பீடி இலை மூட்டைகள் இலங்கைக்கு படகு மூலம் கடத்த இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ் குமார் மற்றும் காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் கடற்கரைப் பகுதியில் நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திரேஸ்புரம் கடற்கரை வடபகுதியில் அதிகாலை சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது அதில் 30 கிலோ எடை கொண்ட 42 பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் மினி லாரி மூலம் பீடி இலை மூட்டைகளை கொண்டு வந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்றது தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசார் வருவதை தெரிந்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதனைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் ரூ. 50 லட்சமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோர பகுதி வழியாக இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, டீசல் மற்றும் பல்வேறு பொருட்களை அவ்வப் போது கடத்தி செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதனை போலீசார் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து தடுத்து நிறுத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பெருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி கடற்கரை வழியாக பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதய ராஜ் குமார், இசக்கி முத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் தாளமுத்து நகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் நள்ளிரவில் வந்த லோடு வேனை சோதனை செய்வதற்காக போலீசார் நிறுத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் வேனில் இருந்தவர்கள் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

    பின்னர் போலீசார் சோதனை செய்த போது அதில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 22 மூடை பீடி இலைகள் 10 மூடை கட்டிங் பீடி இலைகள், 8 மூட்டை பீடி பண்டல்கள் இருந்தது.

    அதனை கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்தும், கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் ரூ. 50 லட்சமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • வாகனத்தை கைப்பற்றி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
    • தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, டீசல் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் படகு மூலம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதும், அதனை போலீசார் தடுத்து நிறுத்தி கைப்பற்றும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு தூத்துக்குடி கடற்கரை வழியாக பீடி இலைகள் படகுமூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜ் குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது இன்று அதிகாலை தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் போலீசார் வருவதை பார்த்ததும் மினி லாரியில் வந்த நபர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினர்.

    அந்த வாகனத்தை கைப்பற்றி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 40 மூட்டைகளில் 1200 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரியை கைப்பற்றி கடத்தலில் ஈடுபட்டவர்கள், தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.

    ×