இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் ரூ. 50 லட்சமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோர பகுதி வழியாக இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, டீசல் மற்றும் பல்வேறு பொருட்களை அவ்வப் போது கடத்தி செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனை போலீசார் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து தடுத்து நிறுத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பெருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி கடற்கரை வழியாக பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதய ராஜ் குமார், இசக்கி முத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தாளமுத்து நகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் நள்ளிரவில் வந்த லோடு வேனை சோதனை செய்வதற்காக போலீசார் நிறுத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் வேனில் இருந்தவர்கள் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் போலீசார் சோதனை செய்த போது அதில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 22 மூடை பீடி இலைகள் 10 மூடை கட்டிங் பீடி இலைகள், 8 மூட்டை பீடி பண்டல்கள் இருந்தது.

அதனை கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்தும், கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் ரூ. 50 லட்சமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com