search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dwaraka"

    • ஏசிசி சிமென்ட் நிறுவன வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
    • பெண்கள் உண்ணாவிரதம், மவுன விரதம் இருந்து இதில் பங்கேற்பார்கள்

    குஜராத் மாநிலத்தில் உள்ளது துவாரகா நகரம். இங்கு இந்துக்கள் வணங்கும் புனித தெய்வமான பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கான துவாரகதீஷ் கோயில் உள்ளது.

    இங்கு ஆஹிர் இனத்தை சேர்ந்த 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலாச்சார முறைப்படி ஆடையணிந்து "மஹா ராஸ்" (Maha Raas) திருவிழாவில் பங்கேற்றனர்.

    பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மருமகளின் நினைவாக கொண்டாடப்படும் இந்த விழாவை பாரதிய அஹிரானி மஹாராஸ் சங்கதன் (Akhil Bharatiya Ahirani Maharas Sanghathan) எனும் அமைப்பினருடன் அகில் பாரதிய யாதவ் சமாஜ் (Akhil Bharatiya Yadav ) மற்றும் அஹிரானி மஹிலா மண்டல் (Ahirani Mahila Mandal) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தினர்.

    பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெறுவதால், நந்த் தாம் (Nand dham) எனும் இந்தியாவின் முன்னணி சிமென்ட் நிறுவனமான ஏசிசி சிமென்ட் (ACC Cement) நிறுவன வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி விட்டன.

    37000 பெண்களில் பெரும்பாலோனோர் குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் சுமார் 1.5 லட்சம் அஹிர் யாதவ் (Ahir Yadav) இன மக்கள் பார்வையாளர்களாக வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த "ராஸ்" நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் பக்தியுடன் உண்ணாவிரதமும் மவுன விரதமும் இருந்து இதில் கலந்து கொள்வார்கள்.

    மஹா ராஸ் நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் இந்துக்களின் புனித நூலான "ஸ்ரீ பகவத் கீதை" பரிசளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் குஜராத் மாநில ஜம்நகர் சட்டசபை உறுப்பினர் பூனம்பென் பங்கு பெற்றார்.

    • நாங்கள் தப்பி வந்திருக்கும் சூழலில் பிரபாகரனின் குடும்பமும் தப்பி வந்திருக்க வாய்ப்புள்ளது தானே?
    • துவாரகா தப்பி வந்திருந்தால் அவரது பெரியம்மா விடமாவது தொடர்பு கொண்டு பேசி இருப்பார் தானே.

    சென்னை:

    விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பேசுவது போல கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியானது. இது தொடர்பாகவும், இறுதிக் கட்ட போரின் போது என்ன நடந்தது? என்பது பற்றியும் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஊடக இணைப்பாளர் சங்கீதன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    எங்கள் தேசத்தின் மகள் துவாரகா. அவரது பெயரை பயன்படுத்தி பொய்யான தகவல் பரப்பப்பட்டுள்ளது. இறுதி நேரத்தில் பொட்டு அம்மனை பார்த்து அண்ணன் (பிரபாகரன்) சொல்கிறார். நானோ பொட்டோ குடும்பத்தை வெளியேற்றும் முடிவுக்கு போக முடியாது என்று கூறினார். அதுவே அவரது இறுதி முடிவாகவும் இருந்தது.

    அப்போது எங்களை போன்றவர்கள் எல்லாம் அங்கு இருந்தோம். நாங்கள் தப்பி வந்திருக்கும் சூழலில் பிரபாகரனின் குடும்பமும் தப்பி வந்திருக்க வாய்ப்புள்ளது தானே? என்கிற கேள்வியும் இந்த நேரத்தில் எழலாம்.

    ராணுவ பிடிக்கு வெளியில் இருந்த முக்கிய தளபதிகள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த பலரும் மக்களோடு மக்களாக வெளியேறியுள்ளனர். ஆனால் மக்களோடு மக்களாக அண்ணியோ, துவாரகாவோ வர இயலாது.

    இலங்கையில் நடைபெற்ற சண்டையின் போதே வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டால் யார்-யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? என்கிற விவரங்கள் முன் கூட்டியே எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதற்காக சிறப்பு போன்களும் கொடுக்கப்பட்டிருந்தன.

    வெளிநாடுகளுக்கு சென்று சேர்ந்த பின்னரே பலர் அந்த போனை கைவிட்டு உள்ளனர். இன்றைக்கும் சில தொடர்புகளுக்காக சில போன்கள் காத்திருக்கின்றன. போன் நம்பர்களும் அப்படியே உள்ளன. துவாரகா வெளியில் வந்திருந்தால் நிச்சயமாக அது போன்ற தொடர்பு மூலமாக சென்றிருப்பார். ஆனால் அப்படி நடக்கவில்லை.

    துவாரகா தப்பி வந்திருந்தால் அவரது பெரியம்மா விடமாவது தொடர்பு கொண்டு பேசி இருப்பார் தானே. மூத்த பெண் போராளிகளிடமாவது தொடர்பு கொண்டு ஹாய் ஆண்டி.. நாங்கள் இங்கு இருக்கிறோம் என்று பேசி இருப்பார் தானே. இலங்கை ராணுவத்திடம் பிடிபட்ட போராளி ஒருவர் எதையும் பேசி விடக்கூடாது என்பதற்காக தனது நாக்கையே கடித்து துண்டாக்கினார். இதுதான் போராளிகளின் வரலாறு. துவாரகா வெளியில் வந்திருந்தால் அவர் தொடர்பு கொண்டு பேசுவதற்கு வெளி நாட்டு கட்டமைப்பும் உறுதியாக இருந்தது. அவர்களிடமாவது துவாரகா பேசி இருப்பார்.

    தேசிய தலைவர் மீண்டும் வந்து விடக் கூடாது என்று எங்களைப் போன்றவர்கள் நினைப்பதாக தவறான பிம்பம் வடிவமைக்கப்படுகிறது. இதுமிகுந்த வேதனையை அளிக்கிறது. தேசிய தலைவர் வந்துவிட்டால் அடுத்தகணமே அவரது பின்னால் அணிவகுத்து நிற்போம்.

    2008-ம் ஆண்டுக்கு பிறகு தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை வரவில்லை. இனி தமிழர்கள் வாழும் காலம் வரை அதுதான் மாவீரர் நாள் உரையாகும்.

    இனி எங்கள் இனத்துக்கான தேசிய தலைவர் என்று யாரும் இல்லை. அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இனி வருபவர்கள் இணைப்பாளராக இருக்கலாம்.

    ஒருவேளை துவாரகா இருந்திருந்தால் இயக்கத்தில் உள்ள மூத்த போராளிகளை தொடர்பு கொண்டு பேசி இருப்பார். எனவே அவரை பற்றி வெளியாகும் தகவல்கள் போலியானவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகளவில் இன்று மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது.
    • இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக புது சர்ச்சை.

    உலகளவில் தமிழர்கள் மற்றும் தமிழர் அமைப்புகள் சார்பில் இன்று (நவம்பர் 27) மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழீழ தலைவர் பிரபாகரனின் மகள் நான், எனது பெயர் துவாரகா எனக் கூறி வெளியாகி இருக்கும் வீடியோவால் இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த வீடியோவில் பேசிய அவர், "எத்தனையோ துரோகங்கள், வீழ்ச்சிகளுக்கு பின் உங்களை நான் சந்திக்கிறேன். தமிழீழ மக்களுக்காக பணி செய்ய காலம் வாய்ப்பளிக்கும் என்று நம்புகிறேன். உலகில் தனித்து நின்று தேச விடுதலைக்காக நாம் போராடினோம். தமிழீழ தாயகத்தை சிங்கள அரசு முழுவதுமாக மாற்றியமைத்துள்ளது."

    "ஆயுத போராட்டத்தை விட அரசியல் போராட்டமே சிறந்தது என எந்த நாடும் இதுவரை உதவவில்லை. ஆயுத போராட்டத்தை விட அரசியல் போராட்டமே சிறந்தது என கூறிய எந்த நாடும் இதுவரை உதவவில்லை. மாவீரர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள். ஆயுத போராட்டம் முடிந்தாலும், அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் உள்ளது."

    "தமிழீழத்திற்கு போராடி வறுமையில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டியது நம் கடமை. இத்தனை ஆண்டுகளாக நமக்கு துணை நிற்கும் அரசியல் தலைவர்கள், தாய் தமிழக உறவுகளுக்கு நன்றி. சிங்கள மக்களுக்கு நாம் என்றுமே எதிரி அல்ல, எதிராக செயல்பட்டதும் இல்லை. தேசிய தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டது போல் பாதைகள் மாறினாலும், நமது லட்சியம் மாறாது," என்று பேசியுள்ளார்.

    உண்மையில் வீடியோவில் தோன்றி பேசியது பிரபாகரனின் மகள் துவாரகா தானா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்ப உதவியால் உருவாக்கப்பட்ட வீடியோவா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    ×