என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "special"
- பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து எல்லையம்மனுக்கு 50,001 வளையல்களினால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது .
பரமத்தி வேலூர்:
பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு எல்லையம்மனுக்கு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
வளையல் அலங்காரம்
அதனைத் தொடர்ந்து எல்லையம்மனுக்கு 50,001 வளையல்களினால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எல்லை யம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு எல்லையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதமும்,11 வகையான அன்னதானம், வழங்கப்பட்டது.
இதே போல் கோப்பணம்பாளையம் அங்காளம்மன், அரசாயி அம்மன், மாசாணி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் நன்செய் இடையாறு மகா மாரியம்மன், அழகு நாச்சி யம்மன், வேலூர் மகா மாரியம்மன், பேட்டை புது மாரியம்மன், பகவதி யம்மன், பாண்ட மங்கலம் மாரி யம்மன், பகவதி யம்மன், கொந்தளம் மாரி யம்மன், சேளூர் மாரி யம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பா ளையம் பகவதி அம்மன், ஆனங்கூர்
மாரியம்மன், செல்லாண்டி யம்மன் , பகவதி அம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன்.
பகவதி அம்மன் மற்றும்
பரமத்தி அங்காளம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்க ளில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு வளையல் அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் அந்தந்த பகு திகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி பூரத்தை முன்னிட்டு சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப் பட்டு வழிபாடு நடந்தது.
- சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் இன்று அதிகாலை முதலே குவிய தொடங்கினர்.
சேலம்:
ஆடி மாதத்தின் அனைத்து நாட்களுமே அம்மனை வழிபட ஏற்ற காலம் என்றாலும், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் அம்மனை வழிபடுவது மிகவும் விசேஷமான பலன்களை தரக் கூடியதாகும்.
பெண்கள் வழிபாடு
அதன்படி இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி பூரத்தை முன்னிட்டு சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப் பட்டு வழிபாடு நடந்தது.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் இன்று அதிகாலை முதலே குவிய தொடங்கினர். அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங் காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
வளையல் அலங்காரம்
அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.
அய்யந்திருமாளிகையில் உள்ள மாரியம்மன் கோவி லில் சிவன் குடும்ப அலங்கா ரமும், எல்லை பிடாரி அம்மன் கோ விலில் அம்ம னுக்கு வளையல் மற்றும் தங்க கவச அலங்காரமும், அன்னதானப்பட்டி தண்ணீர் பந்தல் காளியம்ம னுக்கு வளையல் அலங்கா ரமும் செய்யப்பட்டது. இதில் திரளான பக்கதர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். இதே போல் சேலம் மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- பரமத்தி வேலூர் தாலுகா குன்னத்தூர் ஊராட் சிக்கு உட்பட்ட எட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த குன்னத் தூர் மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.
- மகா மாரியம்மன் கோவிலில் மண்டலா பிஷேகம் தினந்தோறும் சிறப்பு பூஜைகளுடன் தொடர்ந்து நடந்து வந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட எட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த குன்னத்தூர் மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மகா மாரியம்மன் கோவிலில் மண்டலா பிஷேகம் தினந்தோறும் சிறப்பு பூஜைகளுடன் தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் மண்டலாபி ஷேக 48 நாட்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க தீர்த்த குடங்களுடன் ஊர்வல மாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அக்கினி குண்டம் அமைக்கப்பட்டது. 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சங்கு களுக்கு புனித நீர் ஊற்றி மலர்கள் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்தனர்.மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. அபிஷேகத்தை முன்னிட்டு மகா மாரி யம்மனுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத கடைசி தேய் பிறை சனிபிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமா னுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத கடைசி தேய் பிறை சனிபிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமா னுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வ ரர் மற்றும் பரிவார தெய் வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரமேஸ்வர் , பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பிலிக்கல் பாளையம், கரட்டூர் விஜயகிரி வட பழனியாண்டவர் கோயி லில் எழுந்தருளியுள்ள பர்வ தீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதி களில் உள்ள சிவன் கோயில்களில் ஆனி மாத தேய்பிறை சனிபிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் பிரதோஷ விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது
- விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் 26 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
- கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் விம்ஸ் மருத்துவமனை பங்களிப்புடன் ஜான்சன்பேட்டை கிளை வளாகத்தில் சிறப்பு மருத் துவ முகாம் நடைபெற்றது.
- இதில் சுமார் 270-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும், மற்றும் விம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினரும் பங்கேற்றனர்.
சேலம்:
கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பி னர்களுக்கு விம்ஸ் மருத்து வமனை பங்களிப்புடன் ஜான்சன்பேட்டை கிளை வளாகத்தில் சிறப்பு மருத் துவ முகாம் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று ராம கிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை அலுவல கத்தில் சிறப்பு முகாம் நடை பெற்றது. முகாமில் போக்கு வரத்து கழக பணியாளர் களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறியும் பரி சோதனை, இ.சி.ஜி. மற்றும் இ.சி.ஓ. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இதில் சுமார் 270-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும், சேலம் மண்டல பொது மேலாளர், துணை மேலா ளர்கள், கோட்ட மேலாளர், உதவி மேலாளர்கள், அனைத்துத்துறை பணியா ளர்கள், தொழிற் சங்க பிரதிநிதிகள் மற்றும் விம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினரும் பங்கேற்றனர்.
முகாமை சேலம் மண்டல அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பொன் முடி தொடங்கி வைத்தார். நாளை(வெள்ளிக்கிழமை) நாமக்கல் கிளை வளாகத்தில் முகாம் நடைபெற உள்ளது. இந்தசிறப்பு மருத்துவ முகா மினை பயன்படுத்தி பணி யாளர்கள் தங்கள் உடல் நலனை காத்திடுமாறு நிர் வாக இயக்குநர் பொன்முடி கேட்டுக்கொண்டுள்ளார்.
- பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயிஅம்மனுக்கு ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அதைத்தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயிஅம்மனுக்கு ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன் திருக்கோவில், ராஜா கோவில், திருவேலீஸ்வரர் கோவில், பரமத்தி வேலூர் செல்லாண்டியம்மன், மகாமாரியம்மன், பேட்டை மாரியம்மன், பகவதியம்மன், கொந்தளம் மாரியம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதியம்மன், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டி அம்மன் மற்றும் பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களிலும் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- ஷீரடி சாய்பாபா கோவிலில், அனைத்து சமூக மக்கள் சகோதரத்துவ நட்புறவு மேம்பாட்டிற்காக சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
- இந்த சிறப்பு பூஜை வழிபாட்டில், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
வாழப்பாடி:
வாழப்பாடியில் மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், அனைத்து சமூக மக்கள் சகோதரத்துவ நட்புறவு மேம்பாட்டிற்காக சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
வாழப்பாடி ஊர் கவுண்டர் மூர்த்தி, கரக்காரர் ஞானசூரியன், பேரூராட்சி துணைத் தலைவர் எம்.ஜி.ஆர். பழனிசாமி, சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகி ஜவஹர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜை வழிபாட்டில், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
மலர்மாலை அலங்காரத்தில் ஷீரடி சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து பக்தர் களுக்கும், அ.வாழப்பாடி கரக்காரர் குடும்பத்தினரால் அன்னதானம் வழங்கப்
பட்டது. சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி மாதேஸ்வரி ஜவஹர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட, மேல்நாடு, கீழ்நாடு ஊராட்சி சூலாங்குறிச்சி, கலக்காம்பாடி, தாழ்வள்ளம் கிராமங்களில், காசநோயாளிகளை கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
- முகாமை காசநோய் பிரிவு சேலம் மாவட்ட துணை இயக்குனர் கணபதி தொடங்கி வைத்தார்.
வாழப்பாடி
சேலம் மாவட்டம், கல்வராயன்மலை சூலாங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட, மேல்நாடு, கீழ்நாடு ஊராட்சி சூலாங்குறிச்சி, கலக்காம்பாடி, தாழ்வள்ளம் கிராமங்களில், காசநோயாளிகளை கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமை காசநோய் பிரிவு சேலம் மாவட்ட துணை இயக்குனர் கணபதி தொடங்கி வைத்தார்.
காசநோய் பிரிவு மருத்துவ குழுவினர், காசநோயின் அறிகுறிகள், பரவும் விதம், தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், காசநோயாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்து மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முகாமில், மருத்து அலுவலர்கள் ராஜா, காசநோய் சுகாதார மேற்பார்வையாளர் சின்னதுரை, சுகாதார செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், நடமாடும் எக்ஸ்-ரே பரிசோதனை எந்திரத்தில் 298 நபர்களுக்கு எக்ஸ்-ரே எடுத்தும் 50 நபர்களுக்கு சளி மாதிரிகள் எடுத்தும் பரிசோதனை செய்தனர்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கே எக்ஸ்-ரே எந்திரத்தை கொண்டு வந்து, பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தது மிகவும் உபயோகமாக அமைந்ததாக பயனாளிகள் தெரிவித்தனர்.
- பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கிருத்திகையை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கிருத்திகையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் கிருத்திகையை முன்னிட்டு கபிலர்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பிராந்தகத்தில் 34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில்,
பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்ட வர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ர மணியர், ராஜா சுவாமி திருக்கோவிலில் உள்ள ராஜா சுவாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், சுள்ளிப்பா ளையம் அருகே அருணகிரி நாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வான சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெ ருமானுக்கு சிறப்பு அபிஷே கமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
- பாண்ட மங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் வைகாசி மாத ஏகாதசியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்ட மங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் வைகாசி மாத ஏகாதசியை முன்னிட்டு, சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன வெங்கட்ரமணசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரசன்னசிறப்பு அபிஷேகம்வெங்கட்ரமணசாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- குடும்ப அட்டையில் உள்ள குறைகளை திருத்தம் செய்யும் பொருட்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
- முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 18 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் குடும்ப அட்டை திருத்த சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், செல் போன் எண் பதிவு, செல்போன் எண் மாற்றம் மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை திருத்தம் செய்யும் பொருட்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பரமத்திவேலூர் வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா தலைமை வகித்தார். சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 18 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.
முகாமில் தனி வருவாய் ஆய்வாளர் பூபாலன் மற்றும் முதல் நிலை வருவாய் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்