search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "small onion"

    • விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
    • வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.20, கத்தரிக்காய் ரூ.30, பீர்க்கங்காய் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ. 40 ,உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலங்காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.20 ,பீன்ஸ் ரூ.40 ,கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60 ,பச்சைமிளகாய் ரூ.40 ,வெண்டைக்காய் ரூ.40 ,இஞ்சி ரூ.60 ,அவரைக்காய் ரூ.60 ,நேரோ காய் ரூ. 20, கோவக்காய் ரூ.30 ,முள்ளங்கி ரூ. 40 ,சுரக்காய் ரூ. 10க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    • முளைப்பு திறன் குறைவு மற்றும் பூச்சி தாக்குதல், இயற்கை சீற்றங்கலால் மகசூல் குறைய வாய்ப்பு உள்ளது.
    • நஷ்டத்தை சந்தித்த விவசாயிகளுக்கு தற்போது ஆறுதல் அளிக்கும் வகையில் நல்ல வருமானம் கிடைத்துள்ளது.

     தாராபுரம் :

    திருப்பூா் மாவட்டத்தில் பல்லடம் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், குண்டடம், பொங்கலூா், குடிமங்கலம், மூலனூா், வெள்ளக்கோவில், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.

    இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

    இந்நிலையில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்வதற்கு புதிய தொழில்நுட்ப இயந்திரத்தை அறிமுகம் செய்து அரசு வாடகைக்கு விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

    இது குறித்து சின்னக்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:- 60 நாள் பயிரான சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ஆள்கூலி, மருந்து, உரம், விதை, அறுவை கூலி என மொத்தம் ரூ.80 ஆயிரம் வரை செலவாகும்.

    ஒரு ஏக்கருக்கு 7 டன் முதல் 10 டன் வரை மகசூல் கிடைக்கும். முளைப்பு திறன் குறைவு மற்றும் பூச்சி தாக்குதல், இயற்கை சீற்றங்கலால் மகசூல் குறைய வாய்ப்பு உள்ளது.

    ஒரு கிலோ அசல் விலை ரூ.25 ஆகிறது. விவசாயிகளிடமிருந்து ரூ.45க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தால்தான் விவசாயிகளுக்கு கட்டுபடியாகும். தற்போது சின்ன வெங்காயம் விளைச்சல் இல்லை. மழையால் சின்ன வெங்காய உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. போதிய இருப்பு வெங்காயமும் இல்லை.

    வெளி மாவட்ட, மாநில சின்ன வெங்காயம் வரத்தும் குறைவு. அதே சமயம் தேவை குறையவில்லை. அதனால் தற்போது ரூ.76 முதல் ரூ.80 வரை விலை கொடுத்து விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்கின்றனா். இதனால் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகளுக்கு தற்போது ஆறுதல் அளிக்கும் வகையில் நல்ல வருமானம் கிடைத்துள்ளது.

    விதை சின்ன வெங்காயம் நடவு செய்ய மாா்கழி மாத பட்டம் சிறப்பானது. அதனால் இப்பட்டத்தில் நடவு செய்யவே விவசாயிகள் விரும்புவாா்கள். நடப்பாண்டில் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை நிலவுகிறது. அதனால் ஏற்றுமதியை எதிா்நோக்கியே அதிக பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.

    பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் தண்ணீா் பிரச்சினை ஏதும் இல்லை. பல்லடம், பொங்கலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போதுதான் சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அறுவடை சீசன் இல்லை.மாா்ச் மாதம் தான் இப்பகுதிகளில் அறுவடை தொடங்கும். தற்சமயம் தா்மபுரி, நாமக்கல், சேலம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்துதான் சின்ன வெங்காயம் கோவை, திருப்பூா் மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    சின்ன வெங்காயம் சாகுபடியை பொறுத்தவரையில் அறுவடையின்போது அதிக ஆள்கள் தேவைப்படுவா். அவா்களுக்கு தினக்கூலி ரூ.600 முதல் ரூ.800 வரை ஆகிறது. மேலும், விவசாய வேலைக்கு ஆள்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது.

    ஐரோப்பா, அமெரிக்கா,ஜொ்மனி போன்ற நாடுகளில் சின்ன வெங்காயம் அறுவடைக்கு நவீன தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஆள்கள் தேவை அதிகம் இருக்காது. இன்றைய நிலையில் ஆள்கள் கூலி மற்றும் ஆள்கள் பற்றாக்குறையால்தான் விவசாயிகள் பலா் வேளாண்மை சாகுபடியில் ஈடுபடுவதில்லை.

    புதிய தொழில்நுட்ப இயந்திரத்தை அரசு அறிமுகம் செய்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிராமப்புற விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு விட்டால் வேளாண்மை சாகுபடி அதிகரிக்கும் என்றாா்.

    • இதனால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    அரியலூர்

    அரியலூர் ஆலத்தூர் தாலுகா, கூத்தனூரில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காய செடிகள் திருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    • காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
    • பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கும், தக்காளி கிலோ ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

    காங்கயம்:

    காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரச் சந்தை வளாகம் உள்ளது. வாரந்தோறும் திங்கட்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.இந்நிலையில் திங்கட்கிழமை கூடிய சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது.பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கும், தக்காளி கிலோ ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

    • சின்ன வெங்காய நாற்றுகள் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை.
    • பயிர்செய்து அறுவடையின்போது நல்ல மகசூல் கிடைப்பதால் இப்பகுதி நாற்றுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

     குண்டடம், நவ.23-

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்ன வெங்காய நாற்றுகள் மூலம் அதிகப்படியான லாபத்தை ஈட்டிவருகின்றனர்.

    இது குறித்து மேடுக்கடையை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-தற்போது இப்பகுதி விவசாயிகள், சின்ன வெங்காய நாற்றுகக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் அதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிய நாற்று ரகங்கள் பயிர்செய்ய ஒரு ஏக்கருக்கு விதைகள் 35 கிலோ மூலம் 400 பாத்திகள் விதை விடுகின்றனர். இதற்கான செலவுகள் ஏக்கருக்கு விதை, கூலி, களை எடுத்தால், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு 3 லட்சம் வரை செலவாகிறது

    இந்த பயிர்கள் 40 முதல் 45 நாகளில் பிடுங்கி நடவு செய்யலாம். இந்த நிலையில் தற்சமயம் சின்ன வெங்காய விலை உயர்ந்துள்ளதாலும் சில நாட்களாவே பரவலாக மழை பொழிந்துள்ளதால் தேனீ, கம்பம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பொங்கலூர், பூளவாடி, உடுமலை, உள்பட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் சின்ன வெங்காய நாற்றுகளை வாங்கிச்செல்கின்றனர்.

    இங்கு நல்ல தரமான நாற்றுகளை விற்பனைக்கு பயிர்செய்வதால் வாங்கிச்செல்லும் விவசாயிகளுக்கும் பயிர்செய்து அறுவடையின்போது நல்ல மகசூல் கிடைப்பதால் இப்பகுதி நாற்றுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    கடந்தவருடம் ஒரு பாத்தி சின்ன வெங்காய நாற்றுகள் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையானதால் நல்ல லாபம் ஈட்டினர். இதனால் இந்தவருடமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காய நாற்றுகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சின்ன வெங்காயம் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
    • காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    காங்கயம்:

    காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரச் சந்தை வளாகம் உள்ளது. வாரம் தோறும் திங்கள்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த வாரம் கூடிய சந்தையில் முதல் தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கும், இரண்டாம் தர சின்ன வெங்காயம் ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.60-க்கும், முதல் தரமான தக்காளி கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது.சின்ன வெங்காயம் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

    • மத்திய மாநில அரசுகள் சின்ன வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இனிமேலும் இருப்பு வைக்க முடியாத காரணத்தால்தற்பொழுது இருப்பு வைத்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய துவங்கி உள்ளார்கள்.

    வீரபாண்டி:

    திருப்பூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 10க்கு விற்கப்பட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால்விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து இருப்பு வைத்தார்கள். இனிமேலும் இருப்பு வைக்க முடியாத காரணத்தால்தற்பொழுது இருப்பு வைத்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய துவங்கி உள்ளார்கள். தற்பொழுது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 40 ரூபாய் முதல் ரூ.50 வரை வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. உரங்களின் விலை உயர்வு, கூலி உயர்வு மற்றும் உற்பத்தி குறைவு ஆகிய காரணங்களால் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 60 க்கு மேல் விற்றால் ஒரு அளவு லாபம் பெற முடியும். மத்திய மாநில அரசுகள் சின்ன வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மழை பெய்ததால் கிணறு, போர்வெல்களில் நீர்மட்டம் உயர்ந்தது.
    • வெங்காயத்தின் விலை கடுமையாக சரிவடைந்து கிலோ ரூ.10க்கும் கீழே கொள்முதல் செய்யப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டு தோறும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இங்கு உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயம் உள்ளூர் வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்காக மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோவை, பொள்ளாச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தவிர ஏற்றுமதி தரமுள்ள வெங்காயம் இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்ததால் கிணறு, போர்வெல்களில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் சின்ன வெங்காயத்தின் சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரித்தது.

    இதன் காரணமாக உற்பத்தியும் பலமடங்கு அதிகரித்தது. இதனால் கடந்த சுமார் ஒரு வருட காலமாக சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக சரிவடைந்து கிலோ ரூ.10-க்கும் கீழே கொள்முதல் செய்யப்பட்டது. முதல் தரமான வெங்காயம் கிலோ ரூ.8-க்கும் 2 மற்றும் 3-ம் தர வெங்காயம் கிலோ ரூ.6, ரூ.4 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது.

    இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவு செய்து விளைவித்த வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு கேட்பாறின்றி கிடந்து அழுகிப் போனது. இதனால் பல இடங்களில் அறுவடையே செய்யாமல் காட்டுடன் ஊழுது விட்டனர். எப்போது விலை உயரும் எனத் தெரியாமல் தவித்த விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சந்தித்தனர். ஏராளமான விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றிய வெங்காயம் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தந்தது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி முதல் தர சின்ன வெங்காயம் ரூ.65 வரையிலும் 2 மற்றும் 3-ம் தர வெங்காயம் முறையே ரூ.40,45-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இதுபற்றி வெங்காய வியாபாரிகள் கூறுகையில்"மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்து வருவதால் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது. அடுத்த சில வாரங்களில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய வகையில் விலையேற்றம் இருக்கும் என்றனர்.  

    • ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் என இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது
    • தொடர் மழை காரணமாக சின்ன வெங்காய உற்பத்தி பாதித்தது.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு ஆண்டுக்கு இரு சீசன்களில், சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் என இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது.கடந்த 2020 மற்றும் கடந்தாண்டு துவக்கத்தில் தொடர் மழை காரணமாக சின்ன வெங்காய உற்பத்தி பாதித்தது.தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாமல் விலை கிலோ 100 ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பாதிப்பை தவிர்க்க தமிழக அரசு சார்பில், சின்னவெங்காயம் சாகுபடிக்கு ஊக்கமளிக்கப்பட்டது.

    இதனால் சாகுபடி பரப்பு அதிகரித்த நிலையில் கடந்த சீசனில் அறுவடையின் போது விலை வீழ்ச்சி ஏற்பட்டு, பல ஆயிரம் டன் சின்னவெங்காயம் விளைநிலங்களில் இருப்பு வைக்கப்பட்டது.பல மாதங்கள் இருப்பு வைத்தும் விலையில் மாற்றம் இல்லாததால் கிடைத்த விலைக்கு விற்பனை செய்து விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.தற்போது உடுமலை பகுதியில் குறைந்த பரப்பளவில், சாகுபடி செய்யப்பட்ட சின்னவெங்காயம் அறுவடை பணி துவங்கியுள்ளது.

    வியாபாரிகள் தரத்தின் அடிப்படையில், விளைநிலங்களில், கிலோவுக்கு 15 முதல் 25 ரூபாய் வரை விலை கொடுத்து கொள்முதல் செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- சின்னவெங்காயம் அறுவடையின் போது, விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. கடந்த சீசனில் இருப்பு வைத்தவர்களும், நிலையான விலை கிடைக்காமல், நஷ்டமடைந்தனர். சாகுபடியை கைவிட்டால், அடுத்த சீசனில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்து, நுகர்வோர் பாதிப்பு உருவாகும். இப்பிரச்சினைக்கு தீர்வாக சின்னவெங்காயத்துக்கு நிலையான விலை கிடைக்க செய்ய வேண்டும்.சாகுபடி பரப்பு, உற்பத்தி அடிப்படையில், அறுவடை சீசனில், சின்னவெங்காயத்துக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.இதனால் நிலையான விலை நிலவரம் நிலவி விவசாயிகள், நுகர்வோர் என இருதரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றனர்.

    • ஏற்றுமதி வாய்ப்புகள் இல்லாததால், வியாபாரிகளும், கொள்முதலை தவிர்த்து வருகின்றனர்.
    • தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாமல் விலை அதிகரித்து, நுகர்வோர் பாதிக்கப்படுவர்.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு, பல ஆயிரம் ஏக்கரில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சீசனுக்குப்பிறகு சாகுபடி பரப்பு அதிகரித்து, தேவையை விட கூடுதலாக சின்னவெங்காயம் உற்பத்தியானது. இதனால் விலை சரிந்து தற்போது வரை சீராகவில்லை.

    தற்போது தரத்தின் அடிப்படையில் கிலோ, 8 ரூபாய் முதல் அதிகபட்சமாக 12 ரூபாய் வரை, சின்னவெங்காயம் விலை நிலவரம் உள்ளது. விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் இல்லாததால், வியாபாரிகளும், கொள்முதலை தவிர்த்து வருகின்றனர்.

    கடந்த மாதம் இருப்பு வைத்தவர்களும் விலையேற்றம் இல்லாததால் கிடைக்கும் விலைக்கு இதனை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், போதிய விலை இல்லாததால் இதை அறுவடை செய்ய பெரியகோட்டை சுற்றுப்பகுதி விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    விலை வீழ்ச்சியால், அறுவடை செலவுக்குக்கூட, கட்டுபடியாகாத சூழ்நிலை உள்ளது. அதிக பணம் செலவழித்து பட்டறை அமைத்தவர்களுக்கும் நஷ்டமே ஏற்பட்டுள்ளது. எனவே சின்னவெங்காயத்தை அறுவடை செய்யவே தயக்கம் காட்டி வருகிறோம்.ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து அரசு ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மாதங்களாக வலியுறுத்தியும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இந்த பாதிப்பால் அடுத்த சீசனில்இதை நடவு செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். அப்போது தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாமல் விலை அதிகரித்து, நுகர்வோர் பாதிக்கப்படுவர்.எனவே ஒவ்வொரு சீசனிலும், சாகுபடி பரப்பை தோட்டக்கலைத்துறை வாயிலாக கணக்கிட்ட, ஏற்றுமதி மற்றும் பிற மாநிலங்களில் விற்பனைக்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.இதனால் அனைத்து சீசன்களிலும் உற்பத்தி மற்றும் விலை நிலையாக இருக்கும். விவசாயி, நுகர்வோர் என இரு தரப்பினரும் பாதிப்பது தவிர்க்கப்படும் என்றனர்.

    உள்ளூர் வரத்து குறைவு காரணமாக திண்டுக்கல் மார்க்கெட்டில் மீண்டும் சின்ன வெங்காயம் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டில் வெங்காய மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் வெங்காயம் தரம் பிரிக்கப்பட்டு பல ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக உள்ளூர் வரத்து குறைந்ததால் அதிக அளவு வெளியூர்களில் இருந்தே வரவழைக்கப்படுகிறது.

    திருப்பூர், அவினாசி பாளையம், கொடுவாய், உடுமலைப்பேட்டை, தாராபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் வெங்காயம் கிலோ ரூ.45 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இவை அனைத்தும் புதிய வெங்காயமாகும்.

    இதே போல் பெரம்பலூர், நாமக்கல், வளையபட்டி, எரியோடு, கோவிலூர், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பழைய வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. சமீப காலமாக வரத்து குறைந்ததால் வெளியூரில் இருந்து அதிக அளவு வெங்காயம் வரவழைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படுவதால் அதிக அளவு தேவை ஏற்பட்டுள்ளது. மேலும் இருப்பு வைத்திருந்த விவசாயிகளும் வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பெரிய வெங்காயம் கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

    பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் சின்ன வெங்காயம் விலை உயர்வு அடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    விளைச்சல் குறைந்துள்ளதால் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் வடசேரி கனகமூலம் சந்தை, அப்டா மார்க்கெட்டுகளில் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவந்து விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு சின்ன வெங்காயத்தின் விலை மிகவும் அதிகமாக உயர்ந்து காணப்பட்டது. அப்போது ஒரு கிலோ ரூ.135-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக விலை குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் சின்ன வெங்காயத்தின் விலை கிடு கிடுவென்று உயர்ந்துள்ளது. ஒரு வாரத் திற்கு முன்பு கிலோ ரூ.35-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் இன்று ஒரு கிலோ ரூ.70-ஆக உயர்ந்துள்ளது.

    திண்டுகல் பகுதியில் இருந்து அதிகளவு குமரி மாவட்டத்திற்கு சின்ன வெங்காயம் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அங்கு சின்னவெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளதால் விலையும் ஏறுமுகமாக உள்ளது. அதே சமயம் ஆந்திரா சின்ன வெங்காயம் 3 கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது.

    இதேபோல காய்கறிகள் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. பீன்ஸ் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. ரூ.40-க்கு ஒரு கிலோ பீன்ஸ் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று கிலோ ரூ.82-ஆக உள்ளது. இதே போல மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.28, கேரட் ரூ.42, வெள்ளரி ரூ.28, தடியங்காய் ரூ.15, கத்தரிக்காய் ரூ.36, புடலங்காய் ரூ.25, பீட்ரூட் ரூ.20, கோழி அவரை ரூ.50, இஞ்சி ரூ.95, முருங்கக்காய் ரூ.40-க்கு விற்பனையானது.
    ×