search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dindigul market"

    • ஆடி மாதத்தில் கோவில்க ளில் காய்கறிகள் வாங்குவது குறைந்து விடுகிறது. இதன் காரணமாக மார்க்கெட்டி லும் காய்கறிகளின் விலை யும் பாதியாக குறைகிறது.
    • ஆடி மாதம் தொடங்கியதை யொட்டி தக்காளி, சின்னவெங்காயத்தை தவிர மற்ற காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    திண்டுக்கல்:

    ஆடி மாதம் தொடங்கி னாலே கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அப்போது பக்தர்களுக்கு கிடா வெட்டி கறி விருந்து படைக்கப்படும். பெரு ம்பாலான கோவில்களில் அசைவ உணவுகளை பக்த ர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் கோவில்க ளில் காய்கறிகள் வாங்குவது குறைந்து விடுகிறது. இதன் காரணமாக மார்க்கெட்டி லும் காய்கறிகளின் விலை யும் பாதியாக குறைகிறது.

    திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் மொத்தம் 291 கடைகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்ட பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளை வியாபாரிகள் இங்கு விற்பனை செய்கின்ற னர்.

    இந்த நிலையில் ஆடி மாதம் தொடங்கியதை யொட்டி தக்காளி, சின்னவெங்காயத்தை தவிர மற்ற காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரூ.50 முதல் ரூ.100 வரை விற்ற காய்கறிகள் தற்போது, ரூ.20 முதல் ரூ.40 வரையே விற்பனை ஆகிறது.

    அதன்படி ரூ.70 க்கு விற்ற ஒரு கிலோ கேரட் தற்போது ரூ.40க்கும், ரூ.50 க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.25க்கும் விற்கப்பட்டது. ரூ.100க்கு விற்ற பச்சை மிளகாய் ரூ.50க்கும், ரூ.60க்கு விற்ற கொத்தமல்லி கட்டு ரூ.30க்கும் விலைபோனது. ரூ.50க்கும் விற்ற முள்ளங்கி ரூ.15க்கும், ரூ.50 க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.20க்கும், ரூ.50க்கு விற்ற பீட்ரூட் ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது. ரூ.120க்கு விற்ற பீன்ஸ் ரூ.80க்கு விலைபோனது.

    மொச்சையை பொறுத்த வரை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலேயே சீசன் இருக்கும். ஆனால் தேனி மாவட்டத்தில் தற்போது மொச்சை சாகு படி செய்யப்பட்டு வருகிறது. அங்கிருந்து திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு கிலோ மொச்சை ரூ.50 க்கு தற்போது விற்பனை ஆகிறது.

    தினமும் ஒரு டன் வரை மொச்சை மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சீசன் காலத்தில் இதன் விலை மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடி மாதம் தொடங்கியதை முன்னிட்டு மார்க்கெட்டுக்கு வாடிக்கையாளர்கள் வருகையும் குறைந்துவிட்டது. இதனால் மார்க்கெட்டில் வழக்கமான விற்பனை நடைபெறவில்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்து ள்ளனர்.

    உள்ளூர் வரத்து குறைவு காரணமாக திண்டுக்கல் மார்க்கெட்டில் மீண்டும் சின்ன வெங்காயம் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டில் வெங்காய மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் வெங்காயம் தரம் பிரிக்கப்பட்டு பல ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக உள்ளூர் வரத்து குறைந்ததால் அதிக அளவு வெளியூர்களில் இருந்தே வரவழைக்கப்படுகிறது.

    திருப்பூர், அவினாசி பாளையம், கொடுவாய், உடுமலைப்பேட்டை, தாராபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் வெங்காயம் கிலோ ரூ.45 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இவை அனைத்தும் புதிய வெங்காயமாகும்.

    இதே போல் பெரம்பலூர், நாமக்கல், வளையபட்டி, எரியோடு, கோவிலூர், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பழைய வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. சமீப காலமாக வரத்து குறைந்ததால் வெளியூரில் இருந்து அதிக அளவு வெங்காயம் வரவழைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படுவதால் அதிக அளவு தேவை ஏற்பட்டுள்ளது. மேலும் இருப்பு வைத்திருந்த விவசாயிகளும் வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பெரிய வெங்காயம் கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

    பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் சின்ன வெங்காயம் விலை உயர்வு அடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    திண்டுக்கல்:

    ஆயுத பூஜை நாளை கொண்டாட உள்ளதால் பூக்கள் மற்றும் பூஜை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    வரத்து அதிகரித்தபோதும் தேவை கூடுதலாக உள்ளதால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இருந்தபோதும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பூக்கள் வரத்து உள்ளது. 1 கிலோ மல்லிகை பூ ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. கனகாம்பரம் ரூ.700, முல்லை ரூ.600, ஜாதிப்பூ ரூ.300, செண்டுமல்லி ரூ.120, காக்கரட்டான் ரூ.700, செவ்வந்தி ரூ.220, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.400, துளசி ரூ.50 என்ற விலையில் விற்பனையானது.

    குறிப்பாக மல்லிகை, சம்பங்கி, துளசி தேவை அதிகரித்துள்ளது. இதற்காக திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு 10 டன் சம்பங்கி வந்து இறங்கி உள்ளது. நாளை கோவில் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதால் பூ மாலை கட்டும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வரத்து அதிகரிப்பின் காரணமாக திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் இயங்கும் பூ மார்க்கெட்டிற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் பூக்கள் விளைச்சல் அதிகரித்தது. தற்போது நவராத்திரி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் பூக்களின் தேவை அதிகரிக்கும் என ஏராளமான விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    ஆனால் வரத்து அதிகரித்ததால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. கிலோ ரூ.300-க்கு விற்ற மல்லிகை ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.120-க்கும், முல்லை ரூ.200, செவ்வந்தி ரூ.30, காக்கரட்டான் ரூ.150, செண்டுமல்லி ரூ.30, சம்பங்கி ரூ.40, அரளி ரூ.150, ரோஜா ரூ.40 என வாங்கப்பட்டது.

    மழையில் பூக்களை பறிக்காமல் விட்டாலும் வீணாகி விடும் என்பதால் அதனை பறித்து மார்க்கெட்டிற்கு கொண்டு வந்த விவசாயிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. திருமண வைபவங்கள் குறைவாக உள்ளதாலும் புரட்டாசி மாதம் கோவில் திருவிழா மற்றும் நவராத்திரிக்காக மட்டுமே குறைந்த அளவு பூக்கள் விற்பனையாகிறது.

    கன மழை காரணமாக பல வியாபாரிகளும் மார்க்கெட் வருவதை நிறுத்தி விட்டனர். இதனால் விற்பனை மந்தமாகவே உள்ளது. இதனால்தான் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மழைக்காலம் முடியும்வரை இதே நிலை தொடரும் என்றும் அவர்கள் கூறினர்.

    ×