search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flowers price"

    • விண்ணை முட்டும் அளவிற்கு பூக்கள் விலை உயர்வால் வாங்க வரும் மக்கள் தவிக்கின்றனர்.
    • குத்தகை முறையை மாற்ற பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரைச் சுற் றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக தேவகோட்டை நகருக்கு வந்து செல்கின்றனர்.

    சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோவில்களுக்கு பூ மாலைகள் வாங்குவதற்கு தேவ கோட்டை நகரையே கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    பூக்கடை உரிமையாளர்கள் தமிழ் மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை குத்தகை கடை என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத் திற்கு மேல் எந்த பூக்க டைக்காரர் அதிக அளவில் ஏலம் எடுக்கிறாரோ அவர் விலை நிர்ணயம் செய்து கொள்ள லாம். அன்றைய தினம் மல்லி கைப்பூ சாதாரண நாளில் 40 ரூபாய்க்கு விற்பனை செய்வதை அன்றைய தினம் ரூ.100-க்கும், சிறிய வகை மாலை சாதாரண நாளில் ரூ.50-க்கு விற்பனை செய் வதை ரூ.100 முதல் ரூ.150-க்கும் பெரிய மாலைகள் சாதாரண நாளில் ரூ.500-க்கு விற்பனை செய்வதை ரூ.1,000-க்கும் மேலும் விற்பனை செய்கின்றனர்.

    இந்த நாட்களில் ஏலம் எடுத்த ஒரு பூ கடை மட்டுமே திறந்து இருப்பதால் பொது மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. மேலும் தரம் குறைந்தும் அதிக விலை கொடுத்தும் வாங்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகி றார்கள். பூக்கடை உரிமை யாளர்கள் இந்த நூதன மோசடி யால் கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மன வேதனையுடன் அன்றைய தினம் பூ மற்றும் மாலை களை வாங்கி செல்கி ன்றனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து வழக்க மான நடை முறை போல் பூக்கடைகள் செயல்பட்டால் பொதுமக்கள் நிம்மதி அடை வார்கள் என்பது அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    • பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர்.
    • இன்று காலை முதல் வழக்கத்தை விட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவு பூக்கள் வாங்க வந்ததை காண முடிந்தது.

    கடலூர், அக்.3-

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா நாளை மற்றும் நாளை மறுநாள் வெகு விமர்சையாக கொண்டாடபடுகிறது. இந்த நிலையில் வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், கோவில்கள் போன்றவற்றில் பூஜை செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலையில் அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்படும்.

    இதையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் மும்முரமாக விற்பனையாகி வருகின்றன.

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர். இதில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கேந்தி பூ தற்போது 100 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 350 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கோழிக் கொண்ட பூ 100 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லி மற்றும் குண்டு மல்லி 800 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மூக்குத்தி ரோஜா பூ தற்போது 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இதன் காரணமாக இன்று காலை முதல் வழக்கத்தை விட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவு பூக்கள் வாங்க வந்ததை காண முடிந்தது. மேலும் 2 நாட்கள் தொடர்ந்து விழாக்கள் உள்ளதால் பூக்கள் விலை உயர்ந்த நிலையில் இருந்தாலும் விற்பனையாகிவிடும் என்ற நம்பிக்கையில் பூ வியாபாரிகள் உள்ளனர்.

    நாளை ஆயுத பூஜையும், நாளை மறுநாள் விஜயதசமியும் கொண்டாடப்படுவதையொட்டி கோவை மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
    கோவை:

    ஆயுத பூஜை நாளையும், நாளை மறுநாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கடை, வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதனை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் வரத்து அதிகரித்து இருந்தது. வாழைக்கன்று, பொரி, கடலை ஆகியவற்றின் விற்பனை இன்று அதிகமாக இருந்தது.

    இதனை வாங்கி செல்ல மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆயுத பூஜையையொட்டி கோவையில் பூக்களின் விலை அதிகரித்து உள்ளது.கோவையில் இன்று ஒரு கிலோ அரளிப்பூ ரூ. 400-க்கு விற்பனையானது. செவந்தி பூ ரூ. 200 முதல் 240-க்கும், ரோஜா ரூ. 240-க்கும், சம்பங்கி ரூ. 300-க்கும், ஒரு தாமரை ரூ. 30-க்கும் விற்பனையானது. வாழை இலை ஒரு செட் ரூ. 40-க்கும், பூசணி ஒரு கிலோ ரூ. 30-க்கும், ஒரு தேங்காய் ரூ. 30-க்கும், வெற்றிலை ஒரு கவுலி ரூ. 60-க்கும் விற்பனையானது.

    பொரி ஒரு பக்கா ரூ. 20-க்கும், பொரி கடலை ஒரு கிலோ ரூ. 100-க்கும், நிலக்கடலை ரூ. 110-க்கும், அவல் ரூ. 40-க்கும் நெல் பொரி ஒரு லிட்டர் ரூ. 10-க்கும், ஆப்பிள் ஒரு கிலோ ரூ. 110-க்கும் சாத்துக்குடி ரூ. 45-க்கும், கொய்யா ரூ. 70-க்கும், ஆரஞ்சு ரூ.60-க்கும், மாதுளை ரூ. 110-க்கும், திராட்சை ரூ. 75-க்கும் விற்பனையானது.

    வாழைப்பழம் ஒரு டஜன் ரூ. 60-க்கும், கரும்பு ஒரு கட்டு ரூ. 750-க்கும் விற்பனையானது.

    ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    திண்டுக்கல்:

    ஆயுத பூஜை நாளை கொண்டாட உள்ளதால் பூக்கள் மற்றும் பூஜை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    வரத்து அதிகரித்தபோதும் தேவை கூடுதலாக உள்ளதால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இருந்தபோதும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பூக்கள் வரத்து உள்ளது. 1 கிலோ மல்லிகை பூ ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. கனகாம்பரம் ரூ.700, முல்லை ரூ.600, ஜாதிப்பூ ரூ.300, செண்டுமல்லி ரூ.120, காக்கரட்டான் ரூ.700, செவ்வந்தி ரூ.220, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.400, துளசி ரூ.50 என்ற விலையில் விற்பனையானது.

    குறிப்பாக மல்லிகை, சம்பங்கி, துளசி தேவை அதிகரித்துள்ளது. இதற்காக திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு 10 டன் சம்பங்கி வந்து இறங்கி உள்ளது. நாளை கோவில் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதால் பூ மாலை கட்டும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ×