search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை ஆயுத பூஜை  கடலூரில் பூக்களின்   விலை கிடு கிடு உயர்வு
    X

    ஆயுதபூஜையையொட்டி திருப்பாதிரிபுலியூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை இன்று உயர்ந்தது.

    நாளை ஆயுத பூஜை கடலூரில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு

    • பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர்.
    • இன்று காலை முதல் வழக்கத்தை விட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவு பூக்கள் வாங்க வந்ததை காண முடிந்தது.

    கடலூர், அக்.3-

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா நாளை மற்றும் நாளை மறுநாள் வெகு விமர்சையாக கொண்டாடபடுகிறது. இந்த நிலையில் வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், கோவில்கள் போன்றவற்றில் பூஜை செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலையில் அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்படும்.

    இதையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் மும்முரமாக விற்பனையாகி வருகின்றன.

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர். இதில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கேந்தி பூ தற்போது 100 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 350 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கோழிக் கொண்ட பூ 100 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லி மற்றும் குண்டு மல்லி 800 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மூக்குத்தி ரோஜா பூ தற்போது 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இதன் காரணமாக இன்று காலை முதல் வழக்கத்தை விட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவு பூக்கள் வாங்க வந்ததை காண முடிந்தது. மேலும் 2 நாட்கள் தொடர்ந்து விழாக்கள் உள்ளதால் பூக்கள் விலை உயர்ந்த நிலையில் இருந்தாலும் விற்பனையாகிவிடும் என்ற நம்பிக்கையில் பூ வியாபாரிகள் உள்ளனர்.

    Next Story
    ×