என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டுக்கல்லில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
Byமாலை மலர்17 Oct 2018 8:43 AM GMT (Updated: 17 Oct 2018 8:43 AM GMT)
ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்:
ஆயுத பூஜை நாளை கொண்டாட உள்ளதால் பூக்கள் மற்றும் பூஜை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வரத்து அதிகரித்தபோதும் தேவை கூடுதலாக உள்ளதால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இருந்தபோதும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பூக்கள் வரத்து உள்ளது. 1 கிலோ மல்லிகை பூ ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. கனகாம்பரம் ரூ.700, முல்லை ரூ.600, ஜாதிப்பூ ரூ.300, செண்டுமல்லி ரூ.120, காக்கரட்டான் ரூ.700, செவ்வந்தி ரூ.220, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.400, துளசி ரூ.50 என்ற விலையில் விற்பனையானது.
குறிப்பாக மல்லிகை, சம்பங்கி, துளசி தேவை அதிகரித்துள்ளது. இதற்காக திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு 10 டன் சம்பங்கி வந்து இறங்கி உள்ளது. நாளை கோவில் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதால் பூ மாலை கட்டும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆயுத பூஜை நாளை கொண்டாட உள்ளதால் பூக்கள் மற்றும் பூஜை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வரத்து அதிகரித்தபோதும் தேவை கூடுதலாக உள்ளதால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இருந்தபோதும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பூக்கள் வரத்து உள்ளது. 1 கிலோ மல்லிகை பூ ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. கனகாம்பரம் ரூ.700, முல்லை ரூ.600, ஜாதிப்பூ ரூ.300, செண்டுமல்லி ரூ.120, காக்கரட்டான் ரூ.700, செவ்வந்தி ரூ.220, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.400, துளசி ரூ.50 என்ற விலையில் விற்பனையானது.
குறிப்பாக மல்லிகை, சம்பங்கி, துளசி தேவை அதிகரித்துள்ளது. இதற்காக திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு 10 டன் சம்பங்கி வந்து இறங்கி உள்ளது. நாளை கோவில் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதால் பூ மாலை கட்டும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X