search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விலை உயர்வால் பூக்கள் வாங்க வரும் மக்கள் தவிப்பு
    X

    விலை உயர்வால் பூக்கள் வாங்க வரும் மக்கள் தவிப்பு

    • விண்ணை முட்டும் அளவிற்கு பூக்கள் விலை உயர்வால் வாங்க வரும் மக்கள் தவிக்கின்றனர்.
    • குத்தகை முறையை மாற்ற பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரைச் சுற் றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக தேவகோட்டை நகருக்கு வந்து செல்கின்றனர்.

    சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோவில்களுக்கு பூ மாலைகள் வாங்குவதற்கு தேவ கோட்டை நகரையே கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    பூக்கடை உரிமையாளர்கள் தமிழ் மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை குத்தகை கடை என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத் திற்கு மேல் எந்த பூக்க டைக்காரர் அதிக அளவில் ஏலம் எடுக்கிறாரோ அவர் விலை நிர்ணயம் செய்து கொள்ள லாம். அன்றைய தினம் மல்லி கைப்பூ சாதாரண நாளில் 40 ரூபாய்க்கு விற்பனை செய்வதை அன்றைய தினம் ரூ.100-க்கும், சிறிய வகை மாலை சாதாரண நாளில் ரூ.50-க்கு விற்பனை செய் வதை ரூ.100 முதல் ரூ.150-க்கும் பெரிய மாலைகள் சாதாரண நாளில் ரூ.500-க்கு விற்பனை செய்வதை ரூ.1,000-க்கும் மேலும் விற்பனை செய்கின்றனர்.

    இந்த நாட்களில் ஏலம் எடுத்த ஒரு பூ கடை மட்டுமே திறந்து இருப்பதால் பொது மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. மேலும் தரம் குறைந்தும் அதிக விலை கொடுத்தும் வாங்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகி றார்கள். பூக்கடை உரிமை யாளர்கள் இந்த நூதன மோசடி யால் கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மன வேதனையுடன் அன்றைய தினம் பூ மற்றும் மாலை களை வாங்கி செல்கி ன்றனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து வழக்க மான நடை முறை போல் பூக்கடைகள் செயல்பட்டால் பொதுமக்கள் நிம்மதி அடை வார்கள் என்பது அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×