search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் சின்ன வெங்காயம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு
    X

    நாகர்கோவிலில் சின்ன வெங்காயம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு

    விளைச்சல் குறைந்துள்ளதால் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் வடசேரி கனகமூலம் சந்தை, அப்டா மார்க்கெட்டுகளில் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவந்து விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு சின்ன வெங்காயத்தின் விலை மிகவும் அதிகமாக உயர்ந்து காணப்பட்டது. அப்போது ஒரு கிலோ ரூ.135-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக விலை குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் சின்ன வெங்காயத்தின் விலை கிடு கிடுவென்று உயர்ந்துள்ளது. ஒரு வாரத் திற்கு முன்பு கிலோ ரூ.35-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் இன்று ஒரு கிலோ ரூ.70-ஆக உயர்ந்துள்ளது.

    திண்டுகல் பகுதியில் இருந்து அதிகளவு குமரி மாவட்டத்திற்கு சின்ன வெங்காயம் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அங்கு சின்னவெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளதால் விலையும் ஏறுமுகமாக உள்ளது. அதே சமயம் ஆந்திரா சின்ன வெங்காயம் 3 கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது.

    இதேபோல காய்கறிகள் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. பீன்ஸ் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. ரூ.40-க்கு ஒரு கிலோ பீன்ஸ் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று கிலோ ரூ.82-ஆக உள்ளது. இதே போல மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.28, கேரட் ரூ.42, வெள்ளரி ரூ.28, தடியங்காய் ரூ.15, கத்தரிக்காய் ரூ.36, புடலங்காய் ரூ.25, பீட்ரூட் ரூ.20, கோழி அவரை ரூ.50, இஞ்சி ரூ.95, முருங்கக்காய் ரூ.40-க்கு விற்பனையானது.
    Next Story
    ×