search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pricing"

    • தமிழக சத்துணவு திட்டத்துக்கு, தினமும், 50 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • வெயிலின் தாக்கம் காரணமாக, 10 சதவீதம் அளவிற்கு முட்டை உற்பத்தி சரிந்துள்ளது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளன பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க தலைவர் சிங்கராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் முடிவில் தலைவர் சிங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    கடந்த, மே 1-ந் தேதி முதல், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.), என்ன விலை நிர்ணயம் செய்கிறதோ அந்த விலைக்கு முட்டை கொள்முதல் செய்ய வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலையை என்.இ.சி.சி. நிர்ணயம் செய்வது போல், எக்ஸ்போர்ட் முட்டைக்கும் விலை நிர்ணயம் செய்கிறது.

    அதேபோல், சத்துணவு திட்டத்துக்கு முட்டை கொள்முதல் செய்வதற்கும், என்.இ.சி.சி. விலை நிர்ணயம் செய்ய உள்ளது. அந்த விலைக்கு மட்டுமே முட்டையை கொள்முதல் செய்ய வேண்டும் என, கோரிக்கை வைக்க உள்ளோம்.

    தமிழக சத்துணவு திட்டத்துக்கு, தினமும், 50 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கு, தினசரி 50 முதல், 60 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது பண்ணைகளில், முதிர்வு கோழிகள் அதிக அளவில், விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    அதனால், பள்ளிகள் திறந்ததும், முட்டை நுகர்வு அதிகரித்து, அதன் மூலம் கொள்முதல் விலை உயர வாய்ப்பு உள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக, 10 சதவீதம் அளவிற்கு முட்டை உற்பத்தி சரிந்துள்ளது. இந்தோனேசியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய மாநில அரசுகள் சின்ன வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இனிமேலும் இருப்பு வைக்க முடியாத காரணத்தால்தற்பொழுது இருப்பு வைத்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய துவங்கி உள்ளார்கள்.

    வீரபாண்டி:

    திருப்பூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 10க்கு விற்கப்பட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால்விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து இருப்பு வைத்தார்கள். இனிமேலும் இருப்பு வைக்க முடியாத காரணத்தால்தற்பொழுது இருப்பு வைத்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய துவங்கி உள்ளார்கள். தற்பொழுது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 40 ரூபாய் முதல் ரூ.50 வரை வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. உரங்களின் விலை உயர்வு, கூலி உயர்வு மற்றும் உற்பத்தி குறைவு ஆகிய காரணங்களால் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 60 க்கு மேல் விற்றால் ஒரு அளவு லாபம் பெற முடியும். மத்திய மாநில அரசுகள் சின்ன வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×