search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivakumar"

    • சிவகுமார் அறக்கட்டளை பல மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறது.
    • இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப்பிற்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

    பழம்பெரும் நடிகரான சிவகுமார் 1979-ல் தனது 100- வது படத்தின் போது சிவகுமார் கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்தார். இதை நடிகர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். பின்னர் 1980 முதல் ஆண்டுதோறும் இந்த அறக்கட்டளை மூலம் பல மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார். இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு பெற்றோரை இழந்த 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப்பிற்கு கல்வி உதவி தொகையை சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா வழங்கினார்.


    இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசியதாவது, "இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் கல்வியின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிகிறது. அனைவரும் படிக்கிறார்கள். அப்பா, அம்மா ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதித்தால் கூட அதை சேர்த்து வைத்து குழந்தையை படிக்க வைத்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு கல்வி அவசியமாக இருக்கிறது.


    ஒருவர் படித்து விட்டால் அவருடைய தலைமுறையே நன்றாக இருக்கும். கல்வியை கொடுத்தால் அதை விட பெரிய செல்வம் எதுவும் இல்லை. அதை கொடுத்தால் ஒரு தலைமுறையே மேலே வந்துவிடும் என்றால் அதற்கு இந்த தலைமுறை தான் உதாரணம். சிவகுமார் அறக்கட்டளையை 25 வருடங்கள் நடத்தி முடித்து விட்டு அகரம் அறக்கட்டளையிடம் கொடுத்தார்கள். தொடர்ந்து 44 வருடங்கள் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களால் எது வேண்டுமானாலும் சந்திக்க முடியும், சாதிக்க முடியும். உங்கள் கவனத்தை சிதறவிடாதீர்கள்" என்று கூறினார்.

    • மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசு கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி உள்ளது.
    • இந்த கல்லூரியின் 65-வது ஆண்டு விழாவை கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பினர் நடத்தினர்.

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசு கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 65-வது ஆண்டு விழாவை கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பினர் நடத்தினர்.இதில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் சென்னைக்கு வந்து நடிகர் ஆவதற்கு முன்பாக ஒரு ஓவியனாக இருந்தேன். சென்னையில் இருந்து 60 கி.மீ தூரம் சைக்கிளில் மாமல்லபுரம் வந்து தெரு ஓரம் தங்கியிருந்து இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை வரைந்துள்ளேன். இதற்கு எனது ஆர்வமும் விடாமுயற்சியுமே காரணம் ஆகும். எனவே மாணவர்கள் முயற்சியை எப்போதும் கைவிடக்கூடாது. இது ஒரு தெய்வீக கலைச்சார்பு பயிற்சியாகும். சாதாரண நபர்களுக்கு இது தோன்றாது. உங்களுக்கு கடவுள் வாய்ப்பளித்துள்ளார், வளருங்கள்.

    நான் ஒரு நடிகன், நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தை என்கிற மகிழ்ச்சி எனக்கு நிறைவை தரவில்லை. நான் ஓவியனாக வாழ்ந்து அலைந்து திரிந்த அந்த நாட்களே எனக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் தந்தது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அனைத்து பிரிவு மாணவ, மாணவிகள் இடையே நடத்தப்பட்ட மரச்சிற்பம் செதுக்குதல், கழிமண்,கற்சிலைகள் வடித்தல், உலோக உருவம் செய்வது, பெயிண்டிங் உள்ளிட்ட பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிவக்குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    • தமிழர்களின் வரலாற்று பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தை சிவக்குமார், சூர்யா-ஜோதிகா பார்வையிட்டனர்.
    • அப்போது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடனிருந்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரீகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

    கீழடி அருங்காட்சிய கத்தை ஏராளமான திரை பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடனிருந்தார்.

    அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை தொல்லியல் துறை அதிகாரிகள் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு விளக்கி கூறினர். அதனை அவர்கள் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • நடிகர் கார்த்தியின் உழவன் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
    • இதில் ஒரு விதவை தாயால் நான் உருவாக்கப்பட்டவன் என்று நடிகர் சிவகுமார் கூறினார்.

    நடிகர் கார்த்தியின் உழவன் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தில் புதிய உத்திகளை செய்பவர்களுக்கும், அதனைக் காப்பாற்ற முயற்சி எடுத்து வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த விழாவில் சிவகுமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    இதில் நடிகர் சிவகுமார் பேசியதாவது, " பெண்கள் தான் படைப்பு கடவுள். அதில் எந்த குழப்பமும் வேண்டாம். 5000 ஆண்கள் சேர்ந்தாலும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியாது. ஒரு ஆண்கள் கூட இல்லாத நிலை வந்தாலும், பெண்களிடம் இருந்து செல்களை எடுத்து குளோனிங் முறையில் உயிர்களை உருவாக்கலாம் என்று விவசாயிகள் கூறியிருக்கிறார்கள். இந்த அடிப்படையில் ஒரு விதவை தாயால் நான் உருவாக்கப்பட்டவன்.


    அந்த காலத்தில் நாங்கள் இப்போது இருப்பது போல், கிரில் அமைத்து போந்தா கோழிகளை வளர்க்கவில்லை. பாம்பு வந்து லேசாக மூச்சு விட்டாலே கோழி இறந்து விடும். அதற்காக பொடாப்பு என்று கூறுவோம். கல்லிலேயே அமைத்து 6 இன்ச் அளவிற்கு மட்டும் வழி விட்டு கோழிகள் அடைந்ததும், கல்லின் குறுக்கே பலகையை வைத்து எந்த உயிரினமும் உள்ளே போகாதபடி அடைத்து விடுவோம். விடியற்காலை 4 மணிக்கு பலகையின் முன்னே இருக்கும் கல்லை நகர்த்தி பலகையை எடுத்தால் தாய்க்கோழி, சேவல் என்று அனைத்தும் அதனதன் வேலையை செய்ய வெளியே வந்துவிடும்.

    மாடு மேய்த்தவன் என்று கூறுவதில் எனக்கு கேவலம் இல்லை. 7 வயதிலிருந்து சுமார் 8 வருடங்கள் சனி ஞாயிறு கிழமைகளில் மாடு மேய்த்து இருக்கிறேன். ஒரு காட்டிருக்கும் இன்னொரு காட்டிருக்கும் இடையில் உள்ள பகுதியில் அருகு (அருகம்புல்) நிறைய இருக்கும். அங்குதான் மாடு மேய்க்கக் கொண்டு செல்வேன். அப்போது மாட்டின் வாய்க்கு மேல் பகுதி கருப்பாக இருக்கும் இரண்டு மூக்கின் வழியே மூக்கணாங் கயிறு கட்டி இருக்கும். மூச்சு சத்தம் புஸ் புஸ் என்று கேட்கும். அதோடு அருகம்புல்லை மென்று திங்கும் சத்தமும் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அங்கு ஆசியா கத்தி என்று ஒரு வேர் இருக்கும். நிறைய பேருக்கு அது பற்றி தெரியாது. அதை மாடு தெரியாமல் தின்று விட்டால் மூன்று நாட்களுக்கு பாலில் அந்த வாசனை வரும். இப்படி எல்லாம் தான் நான் வாழ்ந்து வந்தேன்.


    இப்போது டாக்டர் சிவராமன் கூறியது போல, சிறு தானியங்கள் எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் இருந்தது. அரிசி சாதமே கிடையாது. கம்பு, சோளம், வரகு, திணை இவைகளை சமைத்து தான் சாப்பிடுவோம். அதில் பெரும்பாலும் முதல் நாள் செய்த சோழ சோறு மீதம் இருக்கும். அடிப்பகுதியில் தீஞ்சு போனதால் சிவந்து இருக்கும் அதை சீவச்சுறு என்று கூறுவோம். அது எடுத்து பாத்திரத்தில் போட்டு தயிரை அதில் ஊற்றுவோம். தயிர் விழாத அளவிற்கு கட்டியாக இருக்கும் இப்போதெல்லாம் அப்படி தயிர் இல்லை. இந்த கெட்டி தயிரை விரல் வைத்து எடுத்து ஊற்றி சாப்பிடுவோம். சனி, ஞாயிறுகளில் கொள்ளு, தட்டை பயிர், பச்சை பயிரை தாளித்து வைத்துக்கொண்டு, பொன்வண்ணன் கூறியது போல மல்லாந்து படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை வைத்து நேரத்தைக் கணக்கிட்டு சாப்பிட்டு வாழ்ந்த காலம். இவை எல்லாம் சாப்பிட்டு வளர்ந்ததால் தான் என்பது வயதிலும் நான் இங்கு நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.

    அதன் பிறகு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று இங்கு வந்தேன். எனது அம்மா ஏழு வருடங்கள் வெறும் ராகி கூழை சாப்பிட்டு காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை வயலில் வேலை செய்தது நான் முன்னேற வேண்டும் என்பதற்காக தானே?! எதற்காக தான் பட்டணம் வந்து படித்தேன். அந்த ஒத்தை பொம்பளை 32 வருடங்களாக விதவையாக இருந்து என்னை வளர்த்ததால்தான் நான் இங்கு நிற்கிறேன். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், வீரபாண்டிய கட்டபொம்மனாகவே இருந்தாலும், தாய் இல்லை என்றால் யாரும் இல்லை தாய் தான் கடவுள். அவள் போட்ட பிச்சையால் தான் நான் இங்கு இருக்கிறேன்.

    அதன் பின் என் தாய் போலவே என்னுடைய வாழ்க்கை இன்னொரு பொம்பளை இருக்கிறார். நான் தாடி வைத்துக் கொண்டு ஓவியம் வரைந்து கொண்டு கல்யாணம் செய்து கொள்ளாமல் பரதேசியாகவே வாழலாம் என்று இருந்தேன். ஆனால், எனக்கு ஒரு வாழ்க்கை கொடுத்து என் வாழ்க்கையை மாற்றி எனக்கு இரு மகன்களை கொடுத்தார். அவர்களால் அகரம் அறக்கட்டளை மற்றும் உழவன் அறக்கட்டளை என்று ஆனது. சாமியாக போனவனை இரண்டு மகன்களை கொடுத்து உருவாக்கி இருக்கிறார். அன்று என் தாய் வணங்க வேண்டியவள்; இன்று என் மனைவி வணங்க வேண்டியவள்!" என்று கூறினார்.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ராதிகா.
    • இவர் நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ராதிகா சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் 'கொலை', 'லவ் டுடே', 'சந்திரமுகி -2' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.


    சிவகுமார் குடும்பத்துடன் ராதிகா

    இந்நிலையில், ராதிகா சரத்குமார் தீபாவளி பண்டிகையை நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இவர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி மற்றும் அவரது மனைவி ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நேற்று மாலை தீபாவளியை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ராதிகா பகிர்ந்துள்ளார்.




    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா.
    • இவரின் 2டி நிறுவனம் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் 2டி என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'ஜெய் பீம்' போன்ற படைப்புகள் சமூகத்தில் நேர் நிலையான அதிர்வுகளை ஏற்படுத்தியது. படைப்புகளுடன் மட்டும் நில்லாமல் சமூக நல பணிகளுக்காகவும், மக்கள் நல திட்டங்களுக்காகவும் சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் நன்கொடையாக அளித்து வருகிறது.


    2டி நிறுவனம் சார்பில் வாகனம் வழங்கிய சிவகுமார்

    அந்த வகையில் கானாத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்று வேண்டும் என அந்த ஊராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று, தூய்மை பணிகளுக்கான நவீன வாகனத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் நன்கொடையாக அளித்துள்ளது.


    2டி நிறுவனம் நன்கொடை வாகனம்

    இந்த வாகனத்தை நடிகர் சூர்யா சார்பாக அவரது தந்தை நடிகர் சிவக்குமார், கானத்தூர் ரெட்டி குப்பம் ஊராட்சி மன்ற தலைவரான திருமதி. வள்ளி எட்டியப்பனிடம் வழங்கினார். நடிகர் சூர்யா, திரையுலக நலன், மாணவ மாணவிகளின் கல்விச் செலவு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காகவும் இயன்ற அளவில் உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார். இவரது சமூக சேவையை திரையுலகினரும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி அவருடைய பிறந்தநாளான இன்று அவருடைய தந்தை சிவகுமாருடன் சாமி தரிசனம் செய்தார்.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் அரசியல் கட்சியினர், திரை நட்சத்திரங்கள் என ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இருந்து பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.

    கார்த்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஊழியர்கள்
    கார்த்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஊழியர்கள்

    அதன் வரிசையில் கார்த்தியின் பிறந்தநாளான இன்று பழனி மலைக்கோவிலில் அவருடைய தந்தை சிவக்குமாருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். வின்ச் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று விஸ்வரூப தரிசனத்திற்கு பின் வழிபாடு நடத்தினார். அவர்களை கண்ட பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அதனை தொடர்ந்து மின்இழுவை ரெயில் மூலம் அடிவாரம் வந்த அவர்கள் கார்மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
    செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமாரின் வீடியோ வைரலாகி வருகிறது. #Sivakumar
    சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது. அந்த வீடியோவில் ரசிகர் சிவகுமார் முன்பாக செல்போனை நீட்டியபடி செல்பி எடுக்க முயற்சிப்பதும், அதனை சிவக்குமார் தட்டிவிடும்படியாகவும் அந்த வீடியோ முடிகிறது.

    முன்னதாக மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகர் சிவகுமார், செல்பி எடுத்த இளைஞர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. இதற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. 



    இதையடுத்து அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்திருந்த சிவக்குமார், அந்த இளைஞருக்கு புதிய செல்போன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Sivakumar

    ரசிகரின் செல்போனை சிவக்குமார் தட்டிவிடும் வீடியோ:

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச தயாராக இருப்பதாக கர்நாடக நீர் பாசன மந்திரி சிவக்குமார் கூறினார். #MekedatuDam #KarnatakaMinister
    பெங்களூர்:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் மேலும் ஒரு பிரமாண்ட அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடகா அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ரூ.5912 கோடியில் மேகதாது அணையை கட்டி முடிப்பதற்கு வரைவுத் திட்டம் ஒன்றை கர்நாடகா அரசு தயாரித்துள்ளது.

    மேகதாது என்ற இடம் ஒகேனக்கல்லுக்கு முன்பாக சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அது அடர்ந்த காட்டுப் பகுதியாகும். அங்கு இயற்கையாக இரு பக்கங்களிலும் அமைந்துள்ள பிரமாண்ட மலைகளுக்கு மத்தியில் காவிரி ஆறு பொங்கி வருகிறது.

    அந்த இரு பக்க மலையும் சுமார் 1000 அடி உயரம் கொண்டது. ஒற்றைக்கல் என்று அழைக்கப்படும் அந்த மலைகளுக்கு இடையேதான் புதிய அணையை கட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டு விட்டால், தமிழ்நாட்டுக்குள் காவிரி தண்ணீர் சுத்தமாக வராது.

    இத்தகைய அபாயத்தை உணர்ந்து தமிழக மக்கள் மேகதாது திட்டத்துக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டும் வரைவுத் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 22-ந்தேதி திடீரென ஒப்புதல் வழங்கியது. மின்சாரம் தயாரிக்கவே இந்த அணையை கட்டுவதாக கூறி கர்நாடகா அரசு ஒப்புதலை பெற்றுள்ளது.

    இது தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் வரும் 4-ந்தேதி திருச்சியில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.

    இந்த நிலையில் மேகதாது பகுதியில் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு நேற்று வழக்கு தொடர்ந்துள்ளது. மனு மீதான விசாரணை முடியும் வரை மேகதாது அணை தொடர்பான எந்த அடுத்தக்கட்ட பணிகளையும் கர்நாடகா அரசு மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கூறி உள்ளது.

    தமிழக அரசின் நடவடிக்கையால் கர்நாடகா அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழக அரசை சமரசம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசின் உதவியை நாடவும் கர்நாடக அரசு திட்டமிட்டு இருக்கிறது.

    இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகா-தமிழ்நாடு சுமூக தீர்வு ஏற்பட மத்திய அரசு உதவ வேண்டும். இரு மாநில அரசுகளும் இது தொடர்பாக பேச மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசுடன் பேச கர்நாடகா தயாராக இருக்கிறது.

    மேகதாது அணை பற்றிய விரிவான திட்ட அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் தயாராகி விடும். அந்த அறிக்கையை தமிழகத்திடம் கொடுக்க விரும்புகிறோம். அதன் அடிப்படையில் இந்த திட்டத்தை பற்றி தமிழக அரசிடம் பேச உள்ளோம். இதற்காக தமிழக அரசிடம் பேச நேரம் ஒதுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    மத்திய அரசு நீர்வளத் துறை மந்திரியும் இத்தகைய ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து உதவ வேண்டும்.



    மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசும், தமிழக அரசும் மோதிக்கொள்ள தேவையில்லை என்று நான் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த திட்டம் பற்றிய விரிவான அறிக்கை வந்ததும் தமிழக அரசு அதை பார்வையிடலாம்.

    இந்த திட்டத்தால் கர்நாடக அரசுக்கு பெரிய அளவில் எந்த லாபமும் இல்லை. தமிழக அரசுக்குதான் உண்மையில் லாபமாக இருக்கும்.

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக பருவ மழை பெய்யும்போது ஏராளமான டி.எம்.சி. தண்ணீர் கடலில்தான் வீணாக சென்று கலக்கிறது. அத்தகைய தண்ணீரை இந்த அணையில் சேமித்து வைத்து பயன்படுத்த முடியும்.

    இவ்வாறு கர்நாடக நீர் பாசன மந்திரி சிவக்குமார் கூறினார். #MekedatuDam #KarnatakaMinister


    கஜா புயல் பாதிப்பால் டெல்டா மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சிவகுமார், சூர்யா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone
    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சூறையாடிய கஜா புயலின் தாக்கம் இன்னமும் நீங்கவில்லை. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கஜா புயலின் கோர தாண்டவத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. வீடு, தொழில்களை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி, பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்பட பல ஊர்கள் கடுமையான சேதத்தை சந்தித்திருப்பதால், மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    கஜா புயலால் வீடுகள், பயிர்கள், மரங்கள், கால்நடைகள், மின்சார கம்பங்கள் என அனைத்து தரப்பிலும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 150 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு கிராமங்களில் மக்கள் உணவு, குடிநீரின்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    இவ்வாறாக கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பலரும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக உதவி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தொண்டு நிறுவனத்தின் மூலம் ரூ.50 லட்சம் நிதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCycloneRelief #GajaCyclone  #LetsAllJoinHands #prayfordelta #Suriya #Sivakumar

    செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டி விட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக உளமாற நான் வருத்தம் தெரிவித்து கொள்வதாக நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார். #Sivakumar
    மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற நடிகர் சிவகுமார், செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. இதற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. எனவே அந்த சம்பவத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில், நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில், வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    அதில் சிவக்குமார் கூறியிருப்பதாவது,

    `ஆர்வம் மிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வார்கள். ஒரு பிரபல கலைஞன் அதை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவக்குமார், செல்போனை தட்டிவிட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக உளமாற நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்'. என்று பேசினார். #Sivakumar

    சிவகுமார் பேசிய வீடியோவை பார்க்க: 

    மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகர் சிவக்குமாருடன் செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை தட்டிவிட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். #Sivakumar
    மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற நடிகர் சிவகுமார், செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. இதற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. எனவே அந்த சம்பவத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில், நடிகர் சிவகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த வி‌ஷயம். பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள், பாதுகாப்பிற்கு வரும் ஆட்களைக்கூட ஓரம் தள்ளிவிட்டு 20, 25 பேர் செல்பி எடுத்து நடக்கக்கூட முடியாமல் செய்வது நியாயமா? தங்களை புகைப்படம் எடுக்கிறேன் என்று கேட்கமாட்டீர்களா? வி.ஐ.பி. என்றால், தான் சொல்லும்படிதான் இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?



    ஆயிரக்கணக்கான மக்களுடன் புகைப்படம் எடுத்துள்ளேன். நான் புத்தன் என்று என்னைச் சொல்லவில்லை. உங்களைப் போல் நானும் ஒரு மனிதன் தான். எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு பின்பற்றுங்கள் என்று கூறவில்லை. அடுத்தவர்களை எந்த அளவுக்கு துன்புறுத்துகிறோம் என்று நினைத்துப் பாருங்கள்.

    இவ்வாறு நடிகர் சிவகுமார் கூறியுள்ளார். #Sivakumar

    ×