search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உழவன் அறக்கட்டளை"

    • நடிகர் கார்த்தியின் உழவன் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
    • இதில் ஒரு விதவை தாயால் நான் உருவாக்கப்பட்டவன் என்று நடிகர் சிவகுமார் கூறினார்.

    நடிகர் கார்த்தியின் உழவன் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தில் புதிய உத்திகளை செய்பவர்களுக்கும், அதனைக் காப்பாற்ற முயற்சி எடுத்து வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த விழாவில் சிவகுமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    இதில் நடிகர் சிவகுமார் பேசியதாவது, " பெண்கள் தான் படைப்பு கடவுள். அதில் எந்த குழப்பமும் வேண்டாம். 5000 ஆண்கள் சேர்ந்தாலும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியாது. ஒரு ஆண்கள் கூட இல்லாத நிலை வந்தாலும், பெண்களிடம் இருந்து செல்களை எடுத்து குளோனிங் முறையில் உயிர்களை உருவாக்கலாம் என்று விவசாயிகள் கூறியிருக்கிறார்கள். இந்த அடிப்படையில் ஒரு விதவை தாயால் நான் உருவாக்கப்பட்டவன்.


    அந்த காலத்தில் நாங்கள் இப்போது இருப்பது போல், கிரில் அமைத்து போந்தா கோழிகளை வளர்க்கவில்லை. பாம்பு வந்து லேசாக மூச்சு விட்டாலே கோழி இறந்து விடும். அதற்காக பொடாப்பு என்று கூறுவோம். கல்லிலேயே அமைத்து 6 இன்ச் அளவிற்கு மட்டும் வழி விட்டு கோழிகள் அடைந்ததும், கல்லின் குறுக்கே பலகையை வைத்து எந்த உயிரினமும் உள்ளே போகாதபடி அடைத்து விடுவோம். விடியற்காலை 4 மணிக்கு பலகையின் முன்னே இருக்கும் கல்லை நகர்த்தி பலகையை எடுத்தால் தாய்க்கோழி, சேவல் என்று அனைத்தும் அதனதன் வேலையை செய்ய வெளியே வந்துவிடும்.

    மாடு மேய்த்தவன் என்று கூறுவதில் எனக்கு கேவலம் இல்லை. 7 வயதிலிருந்து சுமார் 8 வருடங்கள் சனி ஞாயிறு கிழமைகளில் மாடு மேய்த்து இருக்கிறேன். ஒரு காட்டிருக்கும் இன்னொரு காட்டிருக்கும் இடையில் உள்ள பகுதியில் அருகு (அருகம்புல்) நிறைய இருக்கும். அங்குதான் மாடு மேய்க்கக் கொண்டு செல்வேன். அப்போது மாட்டின் வாய்க்கு மேல் பகுதி கருப்பாக இருக்கும் இரண்டு மூக்கின் வழியே மூக்கணாங் கயிறு கட்டி இருக்கும். மூச்சு சத்தம் புஸ் புஸ் என்று கேட்கும். அதோடு அருகம்புல்லை மென்று திங்கும் சத்தமும் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அங்கு ஆசியா கத்தி என்று ஒரு வேர் இருக்கும். நிறைய பேருக்கு அது பற்றி தெரியாது. அதை மாடு தெரியாமல் தின்று விட்டால் மூன்று நாட்களுக்கு பாலில் அந்த வாசனை வரும். இப்படி எல்லாம் தான் நான் வாழ்ந்து வந்தேன்.


    இப்போது டாக்டர் சிவராமன் கூறியது போல, சிறு தானியங்கள் எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் இருந்தது. அரிசி சாதமே கிடையாது. கம்பு, சோளம், வரகு, திணை இவைகளை சமைத்து தான் சாப்பிடுவோம். அதில் பெரும்பாலும் முதல் நாள் செய்த சோழ சோறு மீதம் இருக்கும். அடிப்பகுதியில் தீஞ்சு போனதால் சிவந்து இருக்கும் அதை சீவச்சுறு என்று கூறுவோம். அது எடுத்து பாத்திரத்தில் போட்டு தயிரை அதில் ஊற்றுவோம். தயிர் விழாத அளவிற்கு கட்டியாக இருக்கும் இப்போதெல்லாம் அப்படி தயிர் இல்லை. இந்த கெட்டி தயிரை விரல் வைத்து எடுத்து ஊற்றி சாப்பிடுவோம். சனி, ஞாயிறுகளில் கொள்ளு, தட்டை பயிர், பச்சை பயிரை தாளித்து வைத்துக்கொண்டு, பொன்வண்ணன் கூறியது போல மல்லாந்து படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை வைத்து நேரத்தைக் கணக்கிட்டு சாப்பிட்டு வாழ்ந்த காலம். இவை எல்லாம் சாப்பிட்டு வளர்ந்ததால் தான் என்பது வயதிலும் நான் இங்கு நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.

    அதன் பிறகு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று இங்கு வந்தேன். எனது அம்மா ஏழு வருடங்கள் வெறும் ராகி கூழை சாப்பிட்டு காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை வயலில் வேலை செய்தது நான் முன்னேற வேண்டும் என்பதற்காக தானே?! எதற்காக தான் பட்டணம் வந்து படித்தேன். அந்த ஒத்தை பொம்பளை 32 வருடங்களாக விதவையாக இருந்து என்னை வளர்த்ததால்தான் நான் இங்கு நிற்கிறேன். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், வீரபாண்டிய கட்டபொம்மனாகவே இருந்தாலும், தாய் இல்லை என்றால் யாரும் இல்லை தாய் தான் கடவுள். அவள் போட்ட பிச்சையால் தான் நான் இங்கு இருக்கிறேன்.

    அதன் பின் என் தாய் போலவே என்னுடைய வாழ்க்கை இன்னொரு பொம்பளை இருக்கிறார். நான் தாடி வைத்துக் கொண்டு ஓவியம் வரைந்து கொண்டு கல்யாணம் செய்து கொள்ளாமல் பரதேசியாகவே வாழலாம் என்று இருந்தேன். ஆனால், எனக்கு ஒரு வாழ்க்கை கொடுத்து என் வாழ்க்கையை மாற்றி எனக்கு இரு மகன்களை கொடுத்தார். அவர்களால் அகரம் அறக்கட்டளை மற்றும் உழவன் அறக்கட்டளை என்று ஆனது. சாமியாக போனவனை இரண்டு மகன்களை கொடுத்து உருவாக்கி இருக்கிறார். அன்று என் தாய் வணங்க வேண்டியவள்; இன்று என் மனைவி வணங்க வேண்டியவள்!" என்று கூறினார்.

    • நடிகர் கார்த்தியின் உழவன் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
    • இதில் இயக்குனர் பாண்டிராஜ் அரசு நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும். அந்த திட்டத்தை ஆக்கப்பூர்வமாக விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    நடிகர் கார்த்தியின் உழவன் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தில் புதிய உத்திகளை செய்பவர்களுக்கும், அதனைக் காப்பாற்ற முயற்சி எடுத்து வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த விழாவில் சிவகுமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    இதில் இயக்குனர் பாண்டிராஜ் கூறியதாவது, "விவசாயம் செய்பவர்கள் பலர் நஷ்டம் அடைகிறார்கள். ஆனால், விவசாயத்தை மாற்று வழியில் செய்பவர்கள், லாபத்தை சம்பாதிக்கிறார்கள். நான் இந்த வருடம் 114 மூட்டை நெல் அறுவடை செய்தேன். சினிமா எடுத்து பல கோடிகள் சம்பாதித்து கிடைத்த மகிழ்ச்சியை விட, விவசாயம் மூலம் வரும் நெல்லில் சாப்பிடும் போது அதிகமான மகிழ்ச்சி கிடைக்கிறது.


    உழவன் அறக்கட்டளை விருதுகள்

    விவசாயத்தில் நஷ்டம் வந்தாலும் தொடர்ந்து விவசாயிகள் அதையே தான் செய்கிறார்கள். இந்த வருடமாவது லாபம் பார்த்து விடுவோம் என்று மனம் தளராமல் இருப்பதுதான் விவசாயத்தின் சக்தி. கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு முன்பு விவசாயிகளின் வலிகளை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஏனென்றால், எனது பெற்றோர் பத்து வருடமாக விவசாயம் செய்யவில்லை. இப்போது நான் விவசாயம் செய்ய முடிவெடுத்ததற்கான கதையை கூறினால் நேரம் போதாது. ஒரு படமே எடுக்கலாம்.

    என் நண்பன் ஒரு நாள் நீ தேசிய விருது முதல் பல விருதுகளையும் வாங்கி விட்டாய். பெரிய நாயகர்களைக் கொண்ட படம் இயக்கி விட்டாய். இதனால் உனது பெற்றோர்களின் ஆத்மா சாந்தியடையுமா என்று கேட்டான். அவர்கள் சந்தோஷமாக தானே இருக்கிறார்கள் என்று கூறினேன். அவர்கள் விவசாயம் செய்த நிலம் வீணாக கிடக்கிறது. அதை பார்க்கும்போது அவர்களால் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் என்று கேட்ட ஒரு கேள்விதான் என்னை சென்டிமெண்டாக விவசாயத்தை செய்ய வேண்டும் என்ற முடிவை தீர்க்கமாக எடுக்க வைத்தது.


    இயக்குனர் பாண்டிராஜ்

    எங்களது நிலத்தை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது. நிறைய சிக்கல்களை சந்தித்தேன். வேலி, கிணற்றில் தண்ணீர் இல்லை, என பல தடைகளை தாண்டவே பணமும், உழைப்பும் செலவானது. சுற்றி இருந்தவர்களும், எனக்கு விவசாயத்தில் அதிர்ஷ்டம் இல்லை என கூற ஆரம்பித்தார்கள். ஆனால் விடாது அதில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்த பிறகு, நிலத்திற்கு நீர் வந்தது. இதை எல்லாம் பார்க்கும் போது, இத்தனை ஆண்டுகளாக விவசாயிகள் எதையும் எதிர்பாராமல் இதற்காக தான் உழைத்து இருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், அவர்கள் அதை தாண்டி பயிரை விளையவைத்து நமக்கு கொடுக்க பாடுபடுகிறார்கள். அப்படிபட்டவர்களை கௌரவிக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சி.

    நானும் கார்த்தி சாரும் இணைந்து கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் எடுத்த மகிழ்ச்சியை விட, அவர் இந்த உழவன் அமைப்பு ஆரம்பித்ததில் தான் எனக்கு மகிழ்ச்சி அதிகம். அதோடு அரசு நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும். அந்த திட்டத்தை ஆக்கப்பூர்வமாக விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். ஒரு நாள் கூலி 250 ரூபாய் பெற்றுக் கொண்டு இரண்டு மணி நேரம் கூட வேலை செய்யாமல் அடுத்தவரின் கதைகளை பேசுவதற்கான இடமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆகையால் மத்திய அரசு நூறு ரூபாயும் மாநில அரசு 100 ரூபாயும் விவசாயி 50 ரூபாயும் கொடுத்தால் விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதேபோல தூர் வாரும் வேலைகளையும் மேலோட்டமாகவே செய்கிறார்கள். சில நாட்களிலேயே மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. தமிழ்நாடு அரசு இதற்கு உரிய முறையை முன்னெடுத்து செய்தால் நாடும், விவசாயமும் வளர்ச்சி பாதையில் செல்லும்" என்று கூறினார்.

    • நடிகர் கார்த்தியின் உழவன் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
    • இந்த விழாவில் நடிகர் கார்த்தி அரசு விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    நடிகர் கார்த்தியின் உழவன் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தில் புதிய உத்திகளை செய்பவர்களுக்கும், அதனைக் காப்பாற்ற முயற்சி எடுத்து வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த விழாவில் சிவகுமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    இவ்விழாவில் நடிகர் கார்த்தி கூறியதாவது, உழவன் அறக்கட்ட ளை தொடங்கும்போது சமுதாயத்தில் விவசாயத்தை நோக்கி என்னென்ன விஷயங்கள் குறைவாக இருக்கிறது என்று பார்க்கும்போது, விவசாயிகளின் மீதுள்ள மரியாதையும், அறிவும் குறைவாக இருக்கிறது என்று தோன்றியது. அவர்களை அங்கீகரிக்கத்தான் உழவர் விருதுகளைத் தொடங்கினோம். விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகளைப் பற்றியும் நம்முடைய புரிதல் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். நம்முடைய குழந்தைகளுக்குச் சாப்பாட்டை வீண் செய்யாதீர்கள் என்று கூறுவோம். ஆனால், சாப்பாடு எங்கிருந்து வருகிறது என்று சொல்லித் தருகிறோமா? விவசாயத்தை விடமாட்டேன், போராடியே தீருவேன் என்று ஒரு தலை முறையே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த தலை முறைக்கு அடுத்த தலைமுறை தயாராக இருக்கிறதா? என்று கேட்டால், பயமாகத்தான் இருக்கிறது. அதை நாம் தான் தயார் செய்தாக வேண்டும்.

    விவசாயிகள் அவர்களின் விளைப்பொருட்களை அவர்களே கொண்டு சென்று தான் சந்தையில் விற்க வேண்டும். அதுவும் 2 மணி நேரத்திற்குள் விற்க வேண்டும். அதன்பிறகு, அவர்கள் வீட்டைப் பார்க்க வேண்டும், காட்டைப் பார்க்க வேண்டும், பிற வேலைகளைப் பார்க்க வேண்டும். அவருக்குப் பையன் இருந்தால் மட்டுமே வேலைகளைப் பகிர்ந்து கொள்ள முடியும். இல்லையென்றால், எல்லாவற்றையும் செய்வதற்கு ஆட்கள் கிடையாது. உழவர் சந்தையிலோ, அங்காடிகளிலோ பொருட்களைக் கொண்டு சேர்க்கப் போக்குவரத்து தேவைப்படுகிறது. அதை அரசாங்கங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதை மாபெரும் கோரிக்கையாக வைக்கி றேன். இவ்வாறு நடிகர் கார்த்தி கூறினார்.

    ×