என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sexual harassment"
- மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் செல்போனில் தகவல்
- 3 பேர் மீது போலீசில் தாய் புகார்
நெமிலி:
நெமிலியை அடுத்த திருமால்பூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சம்பவத் தன்று மாலையில் வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு சென்று பேனா வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார்.
அப்போது அதேப் பகுதியை சேர்ந்த 3 பேர் மாணவியை காரில் கடத்தி சென்றதாகவும், இரவு முழுவதும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அடுத்தநாள் மதியம் பள்ளூரில் இறக்கிவிட்டு வீட்டிற்கு செல்லுமாறு கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதையடுத்து வீட்டுக்கு சென்ற மாணவி நடந்த சம்பவத்தை தாய் மற்றும் மாமாவிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச் சியடைந்த மாணவியின் தாய் இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் செல்போனில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் நேற்று நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தார், அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணிவண்ணன் திரு.பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
- இது குறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
புதுச்சேரி:
காரைக்கால் நகர் பகுதியான தோமாஸ் அருள் திடலில் வசிப்பவர் மணிவண்ணன் (வயது 36). இவர் காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அதுபோன்ற சமயத்தில், தனது உறவினர் வீட்டு அருகில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். நாளடைவில் அந்த சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் சிறுமியின் பெற்றோர் திரு.பட்டினம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- போக்சா சட்டத்தில் நடவடிக்கை
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கப்பட்டார்
புதுப்பாளையம்:
விழுப்புரம் மாவட்டம், கண்டமானடி கிராமம் கன்னிமாநகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 27). இவர் செங்கம் அடுத்த காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் சமூக வலைத்தளம் மூலம் பழகி வந்தார்.
மோகன்ராஜ், சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி புதுபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புதுப்பாளையம் போலீசார் இந்த வழக்கை, செங்கம் அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றம் செய்தனர். அதன் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோ ன்மணி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனர். கைது செய்ய ப்பட்டவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை தேடி வருகின்றனர்.
- பாதிக்கப்பட் சிறுமியின் தாயார் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று அவரது தாயார் அருகில் உள்ள பலசரக்கு கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருமாறு சிறுமியிடம் கூறி உள்ளார். ஆனால் சிறுமி செல்ல மறுத்து அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் சிறுமியிடம் விசாரித்தபோது அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்திருக்கும் ரவி என்பவர் சிறுமியிடம் அத்துமீறி நடந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதன் காரணமாக சிறுமி கடைக்கு செல்ல மறுத்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட் சிறுமியின் தாயார் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
- 5 வயது சிறுமி பால்வாடிக்கு சென்று வீடு திரும்பினார்.
- நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி பால்வாடிக்கு சென்று வீடு திரும்பினார். அங்கு நின்று கொண்டிருந்த 2 சிறுவர்கள், 5 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். வீட்டிற்கு அழுது கொண்டே வந்த சிறுமி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட 10-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு பயிலும் 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
- அரியலூரில் நர்ஸ், சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்
- வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடம் அருகே உள்ள சவுர்வெளி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் குமரேசன் (வயது 29). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 18 வயதுடைய நர்சிங் கல்லூரி மாணவியை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதை வெளியே கூறினால், அவரது தாய், தந்தையை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் டாக்டர்களிடம் காண்பித்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நடந்த சம்பவம் பற்றி மாணவி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலமாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து குமரேசனை போக்ேசா சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி(60). விவசாயக் கூலி தொழிலாளி. இவர், ஒரு சிறுமியை பலாத்காரம் செய்ததில், அந்த சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து சிறுமியிடம், அவரது பெற்றோர்கள் கேட்டபோது, அவரை காந்தி பலாத்காரம் செய்ததாகவும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி காந்தி மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தார்.
- மத்திய அரசின் மூலம் 4 வழிச்சாலையில் நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் வலியுறுத்தினர்.
- பல்கலைக்கழகத்தில் பயிலும் முதலாம் ஆணடு மாணவிகளுக்கு விடுதி வசதி இல்லை என நிர்வாகம் அறிவித்துள்ளது.
சின்னாளபட்டி:
காந்திகிராமிய பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து வந்த சிறுநாயக்கன் பட்டியை சேர்ந்த மாணவன் வீரகார்த்திக் (20) என்பவர் பல்கலைக்கழக நுழைவாயில் அருகே விபத்தில் பலியானார். இதனைதொடர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிவாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாக அதிகாரிகள், அம்பாத்துறை, சின்னாளபட்டி போலீசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் மூலம் 4 வழிச்சாலையில் நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் வலியுறுத்தினர். மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகள் தெரிவிக்கையில், பல்கலைக்கழகத்தில் பயிலும் முதலாம் ஆணடு மாணவிகளுக்கு விடுதி வசதி இல்லை என நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் பல மாணவிகள் ஒன்று சேர்ந்து அம்பாத்துறை, சின்னாளபட்டி பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வருகிறோம். இரவு நேரங்களில் மாணவிகள் தனியாக வீட்டுக்கு வரும் போது மோட்டார் சைக்கிளில் செல்லும் வாலிபர்களால் பாலியல் தொல்லை நடக்கிறது. இதனை வெளியில் சொல்லவும் பயமாக இருப்பதால் மாணவிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வ்ருகிறது.
எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட போலீசார் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது உடனடியாக போலீசாரை அழைத்தால் நாங்கள் சம்பவ இடத்திற்கு வருவோம் என்றனர். ஆலோசனை கூட்டத்திலேயே மாணவிகள் இதுபோன்ற குற்றசாட்டை அதிகாரிகள் முன்னிலையில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
- வீட்டுக்குள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வடமாநில வாலிபர் ஒருவர் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவியை பாலியல் சில்மிஷம் செய்தார்.
- இதை பார்த்த கணவர் அந்த வாலிபரை பிடிக்க முயன்றபோது அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தும்பிப்பாடி பகுதியில் உள்ள விவசாயி ஒருவருடைய வீட்டுக்குள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வடமாநில வாலிபர் ஒருவர் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவியை பாலியல் சில்மிஷம் செய்தார்.
இதை பார்த்த கணவர் அந்த வாலிபரை பிடிக்க முயன்றபோது அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் அந்த பெண்ணின் கணவருக்கு 2 பல்கள் உடைந்தன.
வீடு புகுந்து பாலியல் தொந்தரவு
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் 3 வாலிபர்கள் ஒரே நேரத்தில் வந்து அடுத்தடுத்து வீடுகளுக்குள் புகுந்து பெண்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தனர். இதனால் பெண்கள் சத்தம் போடவே 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
ஒரு வாலிபர் மட்டும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை தாக்கி விட்டு ஓடினார். அந்த வாலிபரை பொதுமக்கள் துரத்திச் சென்றபோது தனியார் கம்பெனிக்குள் நுழைந்தார்.
ஒருவர் சிக்கினார்
பொதுமக்கள் ஒன்று சேர்ந்து உள்ளே புகுந்து வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இந்திரா மற்றும் போலீசார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், வடமாநில வாலிபர்கள் கடந்த ஒரு வாரமாக தும்பிப்பாடி ஊராட்சியில் உள்ள சட்டூர், கொண்டையனூர், கொன்ரெட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டுக்குள் புகுந்து பெண்களிடம் பாலியல் அத்துமீறல்கள் செய்துள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதற்கு போலீசார், விசாரணை நடத்தி சட்டபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானப்படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
வாலிபர் ஜெயிலில் அடைப்பு
வடமாநில வாலிபர் தாக்கியதில் காயம் அடைந்த ஆறுமுகத்தை மீட்டு பொதுமக்கள் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிடிப்பட்ட வடமாநில வாலிபரை ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- இரும்பு கம்பெனி அதிபர் மகன் கைது
- காதலிப்பதாக கூறி வரம்பு மீறியதால் போலீசார் நடவடிக்கை
கோவை
கோவை சரவணம்பட்டி அடுத்த காளப்பட்டியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண்.
இவர் சரவணம்பட்டியில் உள்ள மெட்டல் கம்பெனி யில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் இள ம்பெண், சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் சரவணம்பட்டியில் உள்ள மெட்டல் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். அங்கு நான் வேலை பார்க்கும் கம்பெனியின் உரிமை யாளரின் மகனான ரோகித் (26) என்பவரும் தந்தைக்கு உதவியாக நிறுவனத்திற்கு வந்து செல்கிறார்.
அவர் என்னிடம் வந்து என்னை காதலிப்பதாக கூறினார். முதலில் நான் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் அவர் தொடர்ந்து என்னை பின் தொடர்ந்து வருவது, அலுவலகத்தில் நான் தனியாக இருக்கும் நேர ங்களில் வந்து என்னிடம் காதலிப்பதாக கூறுவதை தொடர்ந்து வந்தார்.
நான் அவரது காதலை ஏற்க மறுத்து விட்டேன். இருந்தாலும் அவர் தொடர்ந்து என்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தி வந்தார். நான் மறுத்தால் எனக்கு மிரட்டலும் விடுக்கிறார்.
சம்பவத்தன்று நான் அலுவலகத்தில் தனியாக இருந்தேன். அப்போது ரோகித் அலுவலகத்திற்கு வந்தார். அவர் மீண்டும் என்னிடம் உன்னை நான் காதலிக்கிறேன். நீயும் காதலிக்க வேண்டும் என்றார்.
நான் அதற்கு மறுப்பு தெரிவித்து அங்கிருந்து நகர முற்பட்டேன். ஆனால் அவர், என்னை தரதரவென அருகே உள்ள கார் பார்க்கிங் பகுதிக்கு இழுத்து சென்றார். நான் சத்தம் போட்டு, அதனை கண்டு கொள்ளாமல் இழுத்து சென்றார்.
அங்கு வைத்து, அவர் என்னை தகாத உறவுக்கு அழைத்தார். நான் வர மறுப்பு தெரிவித்ததால் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்தார்.
தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரோகித் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகித்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜ ர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி:
புதுக்கோட்டை என்.ஜி.ஓ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேனகா (வயது 26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழக்கறிஞரான இவர், நாளை மறுநாள் நடைபெற உள்ள மாவட்ட நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு கோவையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் கல்வி பயின்று வந்தார்.
நேற்று இரவு கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். ஏ.சி. கோச்சில் டிக்கெட் எடுத்திருந்தார்.
இந்த ரெயில் நேற்று இரவு 7.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.18 மணிக்கு திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அதை தொடர்ந்து பயணிகள் அங்கு இறங்கினர்.
அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மேனகாவுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திருச்சி ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
உடனே கோட்டை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பாலியல் தொல்லை கொடுத்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் கருப்பண்ணன் கோவில் காடு பகுதியில் சேர்ந்த சந்திர பிரசாத் (வயது 33) என்பதும், இவர் திருச்சி சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் சொந்த ஊர் திருப்பூர் ஆகும். மனைவி குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் பணி நிமித்தமாக திருச்சிக்கு வந்துள்ளார்.
பின்னர் மேகனா கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியர் சந்திர பிரசாத்தை திருச்சி ரெயில்வே போலீசார் நள்ளிரவு கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
கைதான சந்திர பிரசாத் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு கல்லூரிக்கு பேராசிரியராக பணியமர்த்தப்பட்டவர்.
பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசார் விசாரணை
- இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி, குன்னத்தூர் பகு தியை சேர்ந்த மாணவர் ஒரு வர் வாணியம்பாடி தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த மே மாதம், மாணவர் ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத் துள்ளார்.
இது குறித்து ஜோலார் பேட்டை போலீஸ் நிலையத் தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மங் கையர்கரசி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகளிர் போலீசார் விசாரணை
- பெற்றோர்கள் எழுந்த போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து ஓடினார்.
கடலூர்:
கடலூரை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி சம்பவத்தன்று தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் வீட்டுக்குள் இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அதிர்ச்சி அடைந்த பள்ளி சிறுமி அலறினார். அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர்கள் எழுந்த போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து ஓடினார். இதுகுறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் சேர்ந்த விக்னேஷ் (வயது 32) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்