search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசை வார்த்தை"

    • பலஇடங்களில் அவரை தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.
    • தாமோதரன் என்பவர் ஆசை வார்த்தை கூறி ஜெயப்பிரதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நத்தம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் ஜெயப்பிரதா (வயது 19). இவர் மடப்பட்டு நேதாஜி காவலர் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். கடந்த 20-ந் தேதி காலை 8 மணிக்கு பயிற்சி மையத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பலஇடங்களில் அவரை தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இவரது தந்தை ஜெயராமன் புகார் கொடுத்தார்.

    அதில், அதே ஊரை சேர்ந்த சுந்தர் (எ) தாமோதரன் என்பவர் ஆசை வார்த்தை கூறி ஜெயப்பிரதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன காவலர் பயிற்சி பள்ளி மாணவியை தேடி வருகிறார்.

    • புவனகிரி அருகே நர்சிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.
    • பழனிவேல் மகன் வீரமுத்துவை பார்ப்பதற்காக, எறும்பூரை சேர்ந்த ராயர் மகன் அருண் அடிக்கடி வந்து செல்வார்.

    கடலூர்:

    புவனகிரி அடுத்த பெரியநெல்லிகொல்லை அடுத்த துறிஞ்சிகொல்லை  கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகள் சிந்து (வயது 19). இவர் வடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இவர் வசிக்கும் வீதியில் உள்ள பழனிவேல் மகன் வீரமுத்துவை பார்ப்பதற்காக, எறும்பூரை சேர்ந்த ராயர் மகன் அருண் அடிக்கடி வந்து செல்வார். இவருடன் சிந்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இதில் இருவரும் அடிக்கடி போனில் பேசியுள்ளனர். சிந்துவை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய அருண், சிந்துவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.

    இதனையடுத்து, அருணுக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனை யறிந்த சிந்து மனஉலைச்சலில் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொ லைக்கு முயன்றார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிந்து, நடந்த விஷயங்களை தனது பெற்றோரிடம் கூறினார். சிந்துவின் பெற்றோர், அருண் வீட்டிற்கு சென்று, தனது மகளை திருமணம் செய்துகொள்ள கேட்டுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அருண் மற்றும் குடும்பத்தார், சிந்து மற்றும் அவரது பெற்றோரை அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது தொடர்பாக சிந்து மற்றும் அவரது பெற்றோர் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி, சிந்துவை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய அருண் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    • மணிவண்ணன் திரு.பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
    • இது குறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியான தோமாஸ் அருள் திடலில் வசிப்பவர் மணிவண்ணன் (வயது 36). இவர் காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அதுபோன்ற சமயத்தில், தனது உறவினர் வீட்டு அருகில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். நாளடைவில் அந்த சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    இது குறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் சிறுமியின் பெற்றோர் திரு.பட்டினம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • இது பற்றி பண்ருட்டி போலீ சில் இவரது பெற்றோர்கள் புகார் கொடுத்தனர்.
    • 75 பேர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை எடப்பாளையம் தெருவை சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவர் கடந்த 21 -ந் தேதி வீட்டில் இருந்த வர் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது பற்றி பண்ருட்டி போலீ சில் இவரது பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காணாமல் போன இளம்பெண்ணை தேடி வந்தனர். அந்த இளம் பெண் பனங்காட்டுத் தெருவை சேர்ந்த வாலிபர் விஜயபாஸ்கர் (25)காதல் வலையில் சிக்கிஅவரது ஆசை வார்த்தைகளால் மயங்கி 21-ந் தேதி இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்த வர் விஜய் பாஸ்கருடன் விழுப்புரம் சென்று திரு மணம் செய்து கொண்டு நேற்று பண்ருட்டி போலீஸ் நிலையம் வந்து ஆஜரானார்கள். அவர்களை பண்ருட்டி இன்ஸ்பெக்டர் க ண்ணன், பண்ருட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரித்தனர். அவர்களிடம் பெண்ணின் உறவினர் மற்றும் பெற்றோர்களுடன் பேசிப் பார்த்தனர்.

    நான் திருமணம் செய்து கொண்டேன். விஜய பாஸ்கருடன் தான் செல்வேன் என்று எழுதிக் கொடுத்து விட்டு சென்றார்கள். உறவினர் மற்றும் பெற்றோர்கள் பெண்ணை வாலிபருடன் செல்ல விடா மல்விடாமல் தடுத்த போது போலீசார் விலக்கி விட்டு 2பேர்களை யும் அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் வேண்டும் என்று என் மகளை அனுப்பி வைத்து விட்டார்கள். நாங்கள் இன்னும் ஒரு மணி நேரம் எங்கள் மகளுடன் பேசி இருந்தால் எங்கள் மகள் எங்களுடன் வந்திருப்பார் என்று என்று கூறி பண்ருட்டி4 முனை சந்திப்பில் பெண்ணின் பெற்றோர்கள் தலைமை யில் 75 பேர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.தகவல் அறிந்ததும் பண்ருட்டி டி.எஸ்.பி.சபியுல்லா பேச்சு வார்த்தை நடத்தினார்.நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பின் சாலை மறியலில் ஈடு பட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • போக்சோவில் வழக்கு பதிவு
    • போலீசார் தலைமறைவானவரை தேடி வருகின்றனர்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த மேல் நெமிலி சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 22). இவர் பெங்களூருவில் புதிய கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார்.

    ஆசை வார்த்தை

    அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டிலிருந்து வந்தார். வாலிபரும், சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சரண்ராஜ் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பெற்றோர் அவரை வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது டாக்டர்கள் பரிசோதனை செய்த போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

    போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சரண்ராஜை தேடி வருகின்றனர்.

    • பிரதிஷா கடந்த 2-ந் தேதி மாலை 6மணிக்கு வெளியில் சென்றவர் வீடு திரும்ப வில்லை.
    • சீராளன் ஆசை வார்த்தை கூறி பிரதிஷாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி ெரயில்வே காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பிரதிஷா (19), இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.இவர் கடந்த 2-ந் தேதி மாலை 6மணிக்கு வெளியில் சென்றவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இவரது தாயார் லதா பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில் ெரயில்வே காலனியை சேர்ந்த சீராளன் ஆசை வார்த்தை கூறி பிரதிஷாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை வலை வீசி தேடி வருகிறார்.


    • காட்டுமன்னார்கோயில் தாத்தா வட்டம் பகுதியை சேர்ந்த செங்கதிர் (வயது 32) என்பவரும் அதே வீட்டிற்கு சென்று தங்கினார்.
    • இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சடைந்து பாட்டியிடம் தெரிவித்தனர்.

    கடலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேல்மூங்கிலடி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கினார். அப்போது இந்தப் பெண்ணின் மாமா முறையான சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோயில் தாத்தா வட்டம் பகுதியை சேர்ந்த செங்கதிர் (வயது 32) என்பவரும் அதே வீட்டிற்கு சென்று தங்கினார். இந்நிலையில் வீட்டில் பாட்டி இல்லாத நேரத்தில் தனியாக அந்தப் பெண் இருந்ததே நோட்டமிட்ட செங்கதிர் அந்த பெண்ணிடம் சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சடைந்து பாட்டியிடம் தெரிவித்தனர். இது குறித்து பாட்டி சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து செங்கதிரை கைது செய்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • புகாரின் போரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியையும், கடத்தலில் ஈடுபட்ட ஆகாஷ் செல்வனையும் தேடி வருகின்றனர்.

    குழித்துறை, அக்.27-

    தக்கலை பனவிளை புல்லாணி விளையை சேர்ந்த வர் ஆகாஷ் செல்வன் (வயது 21). பெயிண்டர். இவர் வழக்கு ஒன்றில் கைதாகி கடந்த ஜூலை மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

    வழக்கு

    இந்நிலையில் இவர் குலசேகரத்தை அடுத்த நாககோடு அருகே குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் போரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியையும், கடத்தலில் ஈடுபட்ட ஆகாஷ் செல்வனையும் தேடி வருகின்றனர்.

    • ஜெயச்சந்திரன் அந்த பெண்ணிடம் சென்று உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பின்னல்வாடி பகுதியை சேர்ந்தவர் ெஜயச்சந்திரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது மைனர் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது.இந்நிலையில் ஜெயச்சந்திரன் அந்த பெண்ணிடம் சென்று உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி வீட்டிலிருந்து அந்த பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண்ணின் தாய் உளுந்தூ ர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகார் என்பதில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி வழக்கு பதிவு செய்து ஜெயச்சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர். 

    ×