search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
    X

    சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது

    • போக்சா சட்டத்தில் நடவடிக்கை
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கப்பட்டார்

    புதுப்பாளையம்:

    விழுப்புரம் மாவட்டம், கண்டமானடி கிராமம் கன்னிமாநகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 27). இவர் செங்கம் அடுத்த காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் சமூக வலைத்தளம் மூலம் பழகி வந்தார்.

    மோகன்ராஜ், சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி புதுபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புதுப்பாளையம் போலீசார் இந்த வழக்கை, செங்கம் அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றம் செய்தனர். அதன் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோ ன்மணி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனர். கைது செய்ய ப்பட்டவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×