என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
காந்திகிராம பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை
- மத்திய அரசின் மூலம் 4 வழிச்சாலையில் நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் வலியுறுத்தினர்.
- பல்கலைக்கழகத்தில் பயிலும் முதலாம் ஆணடு மாணவிகளுக்கு விடுதி வசதி இல்லை என நிர்வாகம் அறிவித்துள்ளது.
சின்னாளபட்டி:
காந்திகிராமிய பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து வந்த சிறுநாயக்கன் பட்டியை சேர்ந்த மாணவன் வீரகார்த்திக் (20) என்பவர் பல்கலைக்கழக நுழைவாயில் அருகே விபத்தில் பலியானார். இதனைதொடர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிவாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாக அதிகாரிகள், அம்பாத்துறை, சின்னாளபட்டி போலீசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் மூலம் 4 வழிச்சாலையில் நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் வலியுறுத்தினர். மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகள் தெரிவிக்கையில், பல்கலைக்கழகத்தில் பயிலும் முதலாம் ஆணடு மாணவிகளுக்கு விடுதி வசதி இல்லை என நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் பல மாணவிகள் ஒன்று சேர்ந்து அம்பாத்துறை, சின்னாளபட்டி பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வருகிறோம். இரவு நேரங்களில் மாணவிகள் தனியாக வீட்டுக்கு வரும் போது மோட்டார் சைக்கிளில் செல்லும் வாலிபர்களால் பாலியல் தொல்லை நடக்கிறது. இதனை வெளியில் சொல்லவும் பயமாக இருப்பதால் மாணவிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வ்ருகிறது.
எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட போலீசார் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது உடனடியாக போலீசாரை அழைத்தால் நாங்கள் சம்பவ இடத்திற்கு வருவோம் என்றனர். ஆலோசனை கூட்டத்திலேயே மாணவிகள் இதுபோன்ற குற்றசாட்டை அதிகாரிகள் முன்னிலையில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.






