search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sewerage"

    • கழிவுநீர் கால்வாய் உடைந்துவிட்டது.
    • கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஒடுகிறது

    ஊட்டி,

    குன்னூர் 11-வது வார்ட்டில் பழைய ஆஸ்பத்திரி குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. அந்தப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்துவிட்டது. இதனால் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஒடுகிறது.

    இதனால் அந்த பகுதியே சாக்கடை நிரம்பி நடக்க முடியாமலும், துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமமும் அடைந்து வருகின்றனர். மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து மக்கள் கூறும்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது சில பணிகள் நடந்தன. ஆனால் அப்போது கூட மக்களுக்கு தேவையான பிரதான அடிப்படை வசதியான நடைபாதை மற்றும் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படவில்லை. இது குறித்து பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • நெல்லை எஸ்.என். ஹைரோட்டில் இருபுறமும் தூர்ந்துபோன வாறுகால்கள் புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • மாவட்ட கல்வி அலுவலகம் நுழைவு வாயில் முன்பு பாதி பணிகள் முடிவடைந்த நிலையில் கிடக்கும் வாறுகாலில் சாக்கடை தேங்கி கிடக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் பிரதான சாலையான எஸ்.என். ஹைரோட்டில் இருபுறமும் தூர்ந்துபோன வாறுகால்கள் புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    சாக்கடை கழிவுகள் தேக்கம்

    இதனையொட்டி சில இடங்களில் சாக்கடை கழிவுகள் தேங்கி கிடக்கும் நிலை உருவாகி உள்ளது. அதில் குறிப்பாக டவுன் ஆர்ச் அருகே அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவலகம் நுழைவு வாயில் முன்பு பாதி பணிகள் முடிவடைந்த நிலையில் கிடக்கும் வாறுகாலில் சாக்கடை தேங்கி கிடக்கிறது.

    இதனால் அலுவலகத்திற்கு வருபவர்கள் முகம் சுளிக்கின்றனர். இதன் முலம் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் அதனை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அவரது உத்தரவின்பேரில் மாநகர நல அலுவலர் சரோஜா, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் உடனடியாக வாறுகால் தூர்வாறும் பணி நடைபெற்றது. தூய்மை பணியாளர்கள் தேங்கி கிடந்த சாக்கடை கழிவுகளை வெளியேற்றி சுத்தம் செய்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியத்தில் 429 ஊராட்சிகள் உள்ளது. இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    தமிழகத்தில் நகரங்களை போல் கிராமங்களிலும் குடியிருப்புகள் பெருகி சாலைகளும், வீதிகளும் உருவாகி வருகிறது. முறையான உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாமல் கழிவுநீர் கால்வாய்கள் இன்றி சாலைகள் அமைக்கப் படுகிறது.

    பெரும்பாலான கிராமங்களில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ப மழை நீர், கழிவு நீர் செல்ல போதிய கால்வாய்கள் கட்டப்படவில்லை. இதனால் வீடுகள் முன்பு கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

    மழைக்காலங்களில் கொசுக்கள் உருவாகி டெங்கு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது. கால்வாய்கள் அமைக்க அதிக அளவில் நிதி ஒதுக்கீடு தேவை என்பதால் ஊராட்சி நிர்வாகங்கள் தீர்மானங்களை மட்டும் போட்டு வைத்துக் கொண்டு தடுமாறுகின்றன.

    எனவே கால்வாய் இல்லாத கிராமங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து முறையான கால்வாய்களை அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு கிராம மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்க முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    கிராம ஊராட்சிகளில் கால்வாய் பணிகள் விரைவில் நடைபெறும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    • பாதாள சாக்கடை பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பல்வேறு பணிகள் நிலுவையில் இருக்கிறது.

    கோவை,

    கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்குட்பட்ட 87 முதல் 100-வது வார்டு வரை 14 வார்டு மக்கள் பயன்பெறும் வகையில், குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதியில் ரூ.591.34 கோடியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, தி.மு.க. ஆட்சிக்கு வந்து 18 மாதங்களை கடந்து இன்னும் முடியாமல் தாமதமாகி வருகிறது.

    கொரோனா தொற்று பரவலை காரணம் கூறியதால் 2023 மார்ச் மாதத்துக்குள் முடிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இன்னும் 2 மாதங்களே இருக்கிறது.

    பம்ப்பிங் ஸ்டேசன் கட்டுவது, மேனுவல் கட்டுவது, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டில் குழாய் பதிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிலுவையில் இருக்கிறது.

    இதனால் ஒப்பந்தம் எடுத்துள்ள எல் அண்டு டி நிறுவன உயர் அதிகாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்தனர். அதன்பின் ஜூன் வரையிலான செயல்திட்ட அறிக்கையை அந்த நிறுவனம் சமர்ப்பித்து இருக்கிறது.

    இதை தொடர்ந்து மாச்சம்பாளையத்தில் பம்ப்பிங் ஸ்டேஷன் கட்டும் பணியை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.

    நிர்வாக பொறியாளர் தமிழ்செல்வன், உதவி நிர்வாக பொறியாளர்கள் மதியழகன், கீதா தேவி உள்ளிட்டோர் திட்ட செயலாக்கம் குறித்து விளக்கினர்.இதுகுறித்து மாநராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:-

    செட்டிபாளையத்தில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டு விட்டது. குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஒரே ஒரு நாள் அவகாசம் கோரியுள்ளனர். அதன்பின் நெடுஞ்சாலைத்துறையினர் மூலமாக ரோடு போடப்படும்.

    போத்தனூரில் 2.5 கி.மீ தூரத்திற்கு குழாய் பதிக்க வேண்டும். 1.5 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிந்துள்ளது. வீட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டதும் ரோடு போடப்படும். ஜூன் வரையிலான ஆக்ஷன் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் குறிச்சி, குனியமுத்தூர் பாதாள சாக்கடை பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    • சோழவந்தான் அருகே பேவர் பிளாக், கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள சக்கரப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட மேலப்பெருமாள்பட்டி கிராமத்தின் தேவர் நகரில் சாக்கடை வசதி இல்லாததால் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வீட்டைச் சுற்றி கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இங்கு கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதே போல் மணல்பட்டி கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    தாழ்வான பகுதியான இங்கு சாதாரண மழைக்கு தண்ணீர் குளம் போல் தேங்கி மக்கள் வெளியேற முடியாத அவல நிலை உள்ளதாக விவசாயி அழகுசாமி (40) தெரிவித்தார். இதேபோல் வீரலட்சுமி (23) கூறுகையில், எங்கள் பகுதிக்கு சாக்கடை வசதி இல்லாததால் வீட்டுக்கு முன்பு கழிவு நீர் தேங்கி பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து, பேவர் பிளாக் சாலை அமைத்து தர வேண்டும் என்றார்.

    • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • சந்திப்பு நாடார் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.

    பாளை தியாகராஜநகர் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    12-வது வார்டு கவுன்சிலரும், பணி நியமன குழு உறுப்பின ருமான கோகுலவாணி சுரேஷ் கொடுத்த மனுவில் திலக் நகரில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 12- வது வார்டுக்கு உட்பட்ட சந்திப்பு நாடார் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது. எனவே உடனடியாக அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    • ரூ.6 லட்சத்தில் கட்டப்படுகிறது
    • மின் மோட்டார் மூலம் தேங்கியிருந்த கழிவு நீர் வெளியேற்றம்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே புது ஓட்டல் தெருவில் கழிவு நீர் வெளியேற கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகே கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால் பல வருடங்களாக மழை நீர் மற்றும் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் சிரமத்திற்கும் உள்ளாகி வந்தனர்.

    பின்னர் இது குறித்து பல வருடங்களாக இங்கு தேங்கி நிற்கும் மழை நீர் மற்றும் கழிவு நீரை அகற்ற கால்வாயில் கழிவுநீர் தடையின்றி வெளியேற சிறுபாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டது. கழிவு நீர் செல்ல அமைக்கப்பட்டிருந்த ராட்சத குழாய்களில் அடைப்பு ஏற் பட்டதை முழு வதுமாக அகற்றி கழிவு நீரை மின் மோட்டார் மூலம் வெளி யேற்றப்பட்டது.

    அதன் பின் சிறுபாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    • கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களிலே இடிந்தது
    • நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தகவல்

    ஆம்பூர்:

    ஆம்பூரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. 14-வது வார்டு வளையல் கார தெரு மேட்டு தெரு பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்கள் கட்டும் பணி சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் இப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள் தடுப்புச் சுவர்கள் நேற்று மாலை சரிந்து விழுந்தது கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களிலேயே கால்வாய் சேதம் அடைந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். நகராட்சி பணியாளர்கள் அங்கு சென்று சேதமடைந்த கால்வாய் தடுப்பு சுவரை அப்புறப்படுத்தி தரமற்ற முறையில் கழிவு நீர் கால்வாய்க் கட்டியதால் தான் அது சேதம் அடைந்தது என கூறி பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
    • கழிவு நீர் கால்வாய் சரி செய்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கீழக்கரை

    தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 17-ந் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதி கீழக்கரை நகராட்சியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., சேர்மன் செஹானாஸ் ஆபிதா மற்றும் தி.மு.க. கவுன்சிலர்களிடம் நகராட்சி கூட்ட அரங்கில் ஆலோசனை நடத்தினார்.

    இதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மக்களுக்கான திட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.

    இதன் பின்னர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம், ராமேசு வரம், கீழக்கரை நகராட்சி உள்ளிட்ட ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் ஏற்கனவே மனு கொடுத்துள்ளேன். அதில் தெரிவித்த சில திட்டங்களை தொடர்பாக மதிப்பீடு தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தி னோம்.

    அதன்படி சேதுக்கரையில் இருந்து கீழக்கரைக்கு கொண்டு வரப்படும் குடிநீர் குழாய்கள் சேதமாகி உள்ளதால் அவற்றை செப்பனிட புதிய திட்டம் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிய ஆரம்ப நிலையம் கட்டுமானப்பணி, கழிவு நீர் கால்வாய் சரி செய்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கீழக்கரை நகரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா வரும் வாரத்தில் திறந்து வைக்கப்படும். தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளபடி கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டம் நிறை வேற்றுவது தொடர்பாக பொறியாளர்கள் மூலம் திட்ட மதிப்பீடு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் நிச்சயமாக விரைவில் தொடங்கப்படும். அதற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், நகர் செயலாளர் பஷீர் அகமது, துணை செயலாளர் ஜெய்னுதீன், நகர் மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், கவுன்சிலர்கள் முகம்மது காஜா சுஐபு, சர்ப்ராஸ் நவாஸ், முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாதாள சாக்கடை அடைத்து நிரம்பி கழிவு நீர் முழுவதும் சாலையில் வழிந்து ஓடுகிறது.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாதாள சாக்கடையை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கடலூர்:

    கடலூர் கடற்கரை சாலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. மேலும் இந்த சாலை வழியாக தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்திலும், பாதசாரிகள் சென்று வருகின்றனர்.மேலும் ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் இவ்வழியாக தினந்தோறும் சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடற்கரை சாலையில் வேன் ஸ்டாண்ட் அருகே பாதாள சாக்கடை அடைத்து நிரம்பி கழிவு நீர் முழுவதும் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் செல்லும் போது எதிர்பாராமல் கழிவு நீர் பொதுமக்கள் மீது தெளித்து அருவருப்பை ஏற்படுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது மட்டும் இன்றி வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம் கடுமையாக வீசி வருவதால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். மேலும் கழிவுநீர் வழிந்து வருவதால் இவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாதாள சாக்கடையை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது.
    • ஆள்நுழை குழி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அங்கு துர்நாற்றமும் வீசுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கரந்தை, வடக்கு வாசல், பள்ளிஅக்ரகாரம், மாரிக்குளம் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இங்கிருந்து கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆள்நுழை குழிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆள்நுழை குழிகள் மீது கான்கிரீட் மூடியும் போடப்பட்டுள்ளது.

    ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. சில இடங்களில் அந்த குழிகள் மீது போடப்பட்டுள்ள மூடி உடைந்து விடுவதால் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    இந்த நிலையில் தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் ஆள்நுழை குழி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அங்கு துர்நாற்றமும் வீசுகிறது. இந்த சாலையில் எப்போதும் ஆள்நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். போக்குவரத்தும் அதிகளவில் இருக்கும்.

    கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். வாகனங்களும் கடும் சிரமத்திற்கு இடையே சென்று வருகின்றன. தொடர்ந்து இது போல் சாலைகளில் கழிவு நீர் ஓடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக போர்கால அடிப்படையில் இதனை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முதுகுளத்தூர் பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • முதுகுளத்தூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடந்தது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் தலைவர் ஷாஜஹான் தலைமையில் செயல் அலுவலர் மாலதி முன்னிலையில் நடந்தது. ராஜேஷ் வரவேற்றார். மொத்தம் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 7, 10, 12 ஆகிய வார்டுகளில் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என கவுன்சிலர்கள் மோகன்தாஸ், சேகர், யுவப்பிரியா ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். 11-வது வார்டு தேவர் நகரில் குளியல் தொட்டி கட்டித்தரக்கோரியும். கே.பி.எம். தியேட்டர் பகுதியில் குழாய் உடைந்துள்ளதால் புதிய பைப்லைன் அமைக்க வேண்டும் என்று கவுன்சிலர் சேகர் கோரிக்கை விடுத்தார். குமார் நன்றி கூறினார்.

    ×