search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைப்பு
    X

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைப்பு

    • ரூ.6 லட்சத்தில் கட்டப்படுகிறது
    • மின் மோட்டார் மூலம் தேங்கியிருந்த கழிவு நீர் வெளியேற்றம்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே புது ஓட்டல் தெருவில் கழிவு நீர் வெளியேற கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகே கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால் பல வருடங்களாக மழை நீர் மற்றும் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் சிரமத்திற்கும் உள்ளாகி வந்தனர்.

    பின்னர் இது குறித்து பல வருடங்களாக இங்கு தேங்கி நிற்கும் மழை நீர் மற்றும் கழிவு நீரை அகற்ற கால்வாயில் கழிவுநீர் தடையின்றி வெளியேற சிறுபாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டது. கழிவு நீர் செல்ல அமைக்கப்பட்டிருந்த ராட்சத குழாய்களில் அடைப்பு ஏற் பட்டதை முழு வதுமாக அகற்றி கழிவு நீரை மின் மோட்டார் மூலம் வெளி யேற்றப்பட்டது.

    அதன் பின் சிறுபாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×