என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் தடுப்புச்சுவர்.
ஆம்பூரில் கழிவுநீர் கால்வாய் இடிந்து சேதம்
- கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களிலே இடிந்தது
- நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தகவல்
ஆம்பூர்:
ஆம்பூரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. 14-வது வார்டு வளையல் கார தெரு மேட்டு தெரு பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்கள் கட்டும் பணி சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள் தடுப்புச் சுவர்கள் நேற்று மாலை சரிந்து விழுந்தது கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களிலேயே கால்வாய் சேதம் அடைந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். நகராட்சி பணியாளர்கள் அங்கு சென்று சேதமடைந்த கால்வாய் தடுப்பு சுவரை அப்புறப்படுத்தி தரமற்ற முறையில் கழிவு நீர் கால்வாய்க் கட்டியதால் தான் அது சேதம் அடைந்தது என கூறி பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.