search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறிச்சி, குனியமுத்தூர்பாதாள சாக்கடை பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும்
    X

    குறிச்சி, குனியமுத்தூர்பாதாள சாக்கடை பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும்

    • பாதாள சாக்கடை பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பல்வேறு பணிகள் நிலுவையில் இருக்கிறது.

    கோவை,

    கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்குட்பட்ட 87 முதல் 100-வது வார்டு வரை 14 வார்டு மக்கள் பயன்பெறும் வகையில், குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதியில் ரூ.591.34 கோடியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, தி.மு.க. ஆட்சிக்கு வந்து 18 மாதங்களை கடந்து இன்னும் முடியாமல் தாமதமாகி வருகிறது.

    கொரோனா தொற்று பரவலை காரணம் கூறியதால் 2023 மார்ச் மாதத்துக்குள் முடிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இன்னும் 2 மாதங்களே இருக்கிறது.

    பம்ப்பிங் ஸ்டேசன் கட்டுவது, மேனுவல் கட்டுவது, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டில் குழாய் பதிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிலுவையில் இருக்கிறது.

    இதனால் ஒப்பந்தம் எடுத்துள்ள எல் அண்டு டி நிறுவன உயர் அதிகாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்தனர். அதன்பின் ஜூன் வரையிலான செயல்திட்ட அறிக்கையை அந்த நிறுவனம் சமர்ப்பித்து இருக்கிறது.

    இதை தொடர்ந்து மாச்சம்பாளையத்தில் பம்ப்பிங் ஸ்டேஷன் கட்டும் பணியை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.

    நிர்வாக பொறியாளர் தமிழ்செல்வன், உதவி நிர்வாக பொறியாளர்கள் மதியழகன், கீதா தேவி உள்ளிட்டோர் திட்ட செயலாக்கம் குறித்து விளக்கினர்.இதுகுறித்து மாநராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:-

    செட்டிபாளையத்தில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டு விட்டது. குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஒரே ஒரு நாள் அவகாசம் கோரியுள்ளனர். அதன்பின் நெடுஞ்சாலைத்துறையினர் மூலமாக ரோடு போடப்படும்.

    போத்தனூரில் 2.5 கி.மீ தூரத்திற்கு குழாய் பதிக்க வேண்டும். 1.5 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிந்துள்ளது. வீட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டதும் ரோடு போடப்படும். ஜூன் வரையிலான ஆக்ஷன் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் குறிச்சி, குனியமுத்தூர் பாதாள சாக்கடை பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×