search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sewage"

    • கீழ்கட்டளை ஏரியை சுற்றிலும் பெரிய குடியிருப்புகள் வந்து உள்ளன.
    • ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சி, 2-வது மண்டலத்துக்குட்பட்ட பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் கீழ்கட்டளை ஏரிஉள்ளது. இது கிழக்குகடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி பெரும்பாலான ஐ.டி நிறுவன ஊழியர்கள் சென்று வருகின்றனர். புறநகர் பகதிகளிள் அசூர வளர்ச்சியின் காரணமாக இந்த சாலையும் கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டு உள்ளது. கீழ்கட்டளை ஏரியை சுற்றிலும் பெரிய குடியிருப்புகள் வந்து உள்ளன. இதானல் ஏரி இடமும் ஆக்கிரமிப்பில் சிக்கி வருகிறது. மேலும் ஏரிக்கு வரும் கழிவுநீரும் அதிகரித்து உள்ளது. கழிவு நீர் பிரச்சனை குறித்து எந்த ஒரு திட்டமிடலும் இல்லாததால் ஆறுபோல் கழிவு நீர் ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    இதன் காரணமாக ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக 18, 19,20, ஆகிய வார்டுகளில் நிலத்தடி நீர் பாதிக்கபட்ட தோடு குடிநீரிலும் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதேபோல் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் அங்குள்ள மீன்களும் அதிக அளவில் இறந்து வருகின்றன. கீழ்கட்டளை ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கிடையே கீழ்கட்டளை ஏரியில் கழிவு நீர் கலப்பது பற்றி அறிந்ததும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் பா.ஜ.க.வினர் கீழ்கட்டளை ஏரியை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் கூறும்போது, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி பெருமாள், ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி, ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் சூரியநாராயணன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஒரு மாதத்திற்குள் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஏரிகளை பார்வையிட்டு அறிக்கை தயார் செய்ய உள்ளனர். அதனை செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க. வெளியிடும். பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகர மேம்பாட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தாம்பரம் மாநகராட்சியை எப்படி மேம்படுத்துவது என்ற பணியை செய்ய வேண்டும். ஏரி மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, தரமான வசதிகளை பெற்றுத் தருவதற்கு தொடர்ந்து போராடுவோம். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.

    • உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
    • நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    கண்டமங்கலம் அருகே உள்ள நவமாள்மருதூரில் கடலூர் செல்லங் குப்பத்தை சேர்ந்த சுப்பையா என்பவரின் மனைவி சியாமளா (வயது 44). கழிவு நீர் கலந்த நீரை குடித்து விழுப்புரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கடந்த 28-ந் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட வில்லை என உறவினர்கள் கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகில்   2 முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை 9.45 மணி அளவில் சியாமளா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார். இதனை எடுத்து சியாமளாவின் உறவினர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் சியாமளா இறந்து விட்டார் என்றும் அதற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    கழிவு நீர் கலந்த நீரை குடித்து பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கடைகளில் ஓட்டல் மற்றும் டீ கடைகள் வைத்து இருந்தவர்கள் கடையை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர்.
    • தற்போது கடந்த 2 நாட்களாக பெய்த மழையிலும் கடைக்குள் சாக்கடை நீர் புகுந்து கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால் கடையில் துர்நாற்றம் வீசுகிறது.

    சேலம்:

    சேலம் லாரி மார்க்கெட் அருகே உள்ள மெயின் ரோட்டில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.

    சேலம் மாநகரில் கனமழை பெய்யும் போது அரிசிபாளையம் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த பகுதியில் அதிகளவில் தேங்குகிறது.

    இதனால் அங்குள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் அந்த கடைகளில் ஓட்டல் மற்றும் டீ கடைகள் வைத்து இருந்தவர்கள் கடையை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர். இதனால் கடை உரிமையாளர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் பங்கஜ் என்பவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக சாக்கடை கால்வாய்களை தூர்வாராததால் அரிசிபாளையம் பகுதியிலிருந்து வரும் கழிவு நீர் எங்களது கடைக்குள் புகுந்து விடுகிறது.

    இதனால் கடையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வீணாகி சேதமாகிறது. தற்போது கடந்த 2 நாட்களாக பெய்த மழையிலும் கடைக்குள் சாக்கடை நீர் புகுந்து கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால் கடையில் துர்நாற்றம் வீசுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதே நிலை தொடர்ந்தால் விரைவில் மாநகராட்சி அலுவல கம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு இந்த பகுதியில் தண்ணீர் தேங்கா தவாறு சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • எந்த பிராண்ட் ஏ.சி. வாங்கினாலும் அவை ஒரு வருடம் கூட முழுமையாக நீடிப்பதில்லை.
    • கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகமாகி வருவதால் வீடுகளில் ஏ.சி.யை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கழிவுநீர் தேங்கி நிற்கும் நீர்நிலைகள் அல்லது கழிவுநீர் உந்து நிலையம் அருகில் உள்ள வீடுகளில் இருக்கும் ஏ.சி. எந்திரங்கள் கழிவுநீரில் இருந்து வெளியேறும் நீராவி மற்றும் வாயுக்களால் பாதிக்கப்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    இவை வீட்டில் இருக்கும் மின் சாதனங்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏ.சி. எந்திரங்களில் உள்ள செம்பு கம்பிகளை அதிகமாக பாதிக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

    இதன் காரணமாக ஏ.சி. எந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு அதை சரி செய்ய ஒரு தொகையை செலவு செய்யும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து அண்ணாநகரில் வசிக்கும் சந்தியா என்பவர் கூறும் போது, நாங்கள் சமீபத்தில் ஸ்பிலிட் ஏ.சி.யை வாங்கினோம். 15 நாட்களுக்குப் பிறகு அதில் பழுது ஏற்பட்டது. ஏ.சி. மெக்கானிக்கை வர வழைத்து பழுது பார்க்கையில் அவர் செப்புச் சுருள் மெலிந்ததால் வாயு கசிவு ஏற்பட்டதை கண்டறிந்தார். அதனை சரிசெய்த பின்னர் மீண்டும் மீண்டும் இதே மாதிரி பழுது ஏற்பட்டது. அப்போதும் செப்பு கம்பியை மாற்றினோம். இதற்குக் காரணம் என்ன என்று கேட்டபோது நாங்கள் வசிக்கும் இடம் அருகில் கழிவுநீர் அதிகம் நிறைந்த ஓட்டேரி நீரோடை மற்றும் மாசுபட்ட நீரிலிருந்து வரும் நச்சுபுகைகள் ஏசி எந்திரத்தில் உள்ள செப்பு பாதிப்பதாக என்ஜினியர்கள் தெரிவித்தனர். அருகில் குடியிருப்பவர்கள் பலருக்கும் இதே நிலை தான் என்று கூறினார்.

    மேலும் அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறும்போது, எந்த பிராண்ட் ஏ.சி. வாங்கினாலும் அவை ஒரு வருடம் கூட முழுமையாக நீடிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் பழுதை சரி செய்யும் பொழுது ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை செலவாகிறது. ரூ.50 ஆயிரம் கொடுத்து 6 மாதத்திற்கு முன்பு ஒரு ஏ சி. வாங்கினேன். அது ஒரே மாதத்தில் பழுதாகிவிட்டது என்றார்.

    மேலும் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் பெரம்பூர் மற்றும் கொரட்டூர் பகுதி களில் குடியிருப்பவர்கள் அருகில் இருக்கும் கழிவு நீர் உந்து நிலையத்தில் இருந்து வெளிவரும் வாயுக்களால் ஏ.சி. எந்திரங்களில் பழுது ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இதற்காக நாங்கள் நிறைய பணம் செலவழிக்கிறோம் என்று அவர்கள் வேதனையுடன் கூறினார்கள்.

    இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி.யின் ஓய்வு பெற்ற வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் டி. சுவாமிநாதன் கூறியதாவது:-

    தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து ஹைட்ரஜன் சல்பைட் வாயு வெளியேகிறது. இது அழுகிய முட்டையை போன்ற துர்நாற்றத்தை வீசும். இது கந்தகமாகவோ அல்லது கந்தக அமிலமாகவோ மாறக்கூடும். இவை ஏ.சி.யின் செப்புப் பகுதிகளுடன் வினைபுரிந்து, அதை அரித்து வாயு கசிவை ஏற்படுத்துகிறது.

    மற்ற மின் சாதனங்களில் ஏ.சி.யை போல அதிக செப்பு பாகங்கள் இல்லை, அதனால்தான் டி.வி. போன்ற பிற மின் சாதனங்களை விட ஏ.சி. எந்திரங்கள் மட்டுமே அடிக்கடி சேதமடைகின்றன என்றார்.

    • துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் அவதி
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    வேலூர்:

    வேலூர் காட்பாடி சாலையில் தபால் நிலையம் அருகே உள்ள கால்வாயில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி உள்ளது. வேலூர் சிஎம்சி யில் சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க வந்து செல்லும் பயணிகள் காட்பாடி சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சிற்க்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதால் பஸ்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    காட்பாடி சாலையில் உள்ள கால்வாய்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. அதன் பிறகு மாநகராட்சி ஊழியர்கள் கால்வாயில் உள்ள அடைப்புகளை அப்புறப்படுத்தவில்லை.

    இதனால் அங்குள்ள தங்கம் விடுதிகள், வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கால்வாயில் அடைப்பு உள்ளதால் கழிவு நீர் கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாலையில் கழிவுநீர் வழிந்து ஓடுகிறது.

    அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்தபடி கடந்து செல்கின்றனர். இதேபோல் பெங்களூர் சாலையில் உள்ள டி மண்டி தெருவில் அரிசி பருப்பு எண்ணெய் மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அங்குள்ள கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியில்லாததால் சாலையில் கழிவு நீர் தேங்கி உள்ளது.

    இதனால் வர்த்தக நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் கழிவு நீரை கடந்து செல்ல கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை தூர்வாரி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழை கிட்டத்தட்ட 45 நிமிடம் வரை நீடித்தது. சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
    • கொங்கலம்மன் வீதியில் மழை நீருடன் கழிவு நீர் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் 100 டிகிரி வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை 5.30 மணி அளவில் கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் பயங்கர சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை கிட்டத்தட்ட 45 நிமிடம் வரை நீடித்தது. சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    இதேபோன்று மரங்களும் வேரோடு சாய்ந்தன. விளம்பர தட்டிகள், பேனர்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்தடையும் ஏற்பட்டது.

    ஈரோடு புதுமை காலனியில் உள்ள பழமையான மரம் வேரோடு சாய்ந்து அங்கிருந்த காளியம்மன் கோவில் கோபுரத்தில் விழுந்தது. இதில் கோபுரம் சேதம் அடைந்தது. மரக்கிளைகள் அங்கிருந்த டீ கடை மீது விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேப்போல் ஈரோடு ஐஸ்வர்யா ஓட்டல் அருகே இருந்த மரம், பெரியண்ணா வீதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    மூலப்பட்டறையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பெரியார் நகர் மற்றும் ஏ.பி.சி, மருத்துவமனை பகுதியில் தலா ஒரு மரம் விழுந்தது. ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சிறிய மரம் ஒன்று விழுந்தது. பழைய மோப்பநாய் பிரிவு பகுதியில் இருந்த மரக்கிளை முறிந்து விழுந்தது.

    இதேபோல் அந்த பகுதியில் உள்ள பல்வேறு மரக்கிளைகள் முடிந்து விழுந்தன. ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ஈரோடு தாலுகா அலுவலகத்திலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மணிக்கூண்டு எல்லை மாரியம்மன் கோவில் அருகே இருந்த பழமையான மரம் கீழே விழுந்தது. ஈரோடு அண்ணாமலை லேஅவுட் பகுதியில் வேருடன் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேபோல் ஈரோடு கால்நடை மருத்துவமனை ரோட்டில் சுவர் இடிந்து விழுந்தது. ஈரோடு கொங்கலம்மன் வீதியில் மழை நீருடன் கழிவு நீர் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு இருந்தன. நேற்று மழை பெய்த கனமழையால் குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஒரே நாளில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. 100-க்கும் மேற்பட்ட மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஈரோடு மாநகராட்சி பணியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ரோட்டில் விழுந்து கிடக்கும் மரம் மரக்கிளைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

    இதேபோல் நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்தபோது ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பஸ்சில் ஏறி தீயணைப்பு நிலைய பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.

    அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் அங்கு இருந்த சாக்கடை கால்வாய் முழுவதும் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத அவர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தார்.

    இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அந்த நபர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 45 நிமிடம் பெய்த மழையால் ஈரோடு மாநகரம் ஸ்தம்பித்தது.

    இதேப்போல் கவுந்தப் பாடி, மொடக்குறிச்சி, கோபி போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-40, கவுந்தப்பாடி-26.80, மொடக்குறிச்சி-9, கோபி-4.20, சென்னிமலை, அம்மாபேட்டை-3 பெருந்துறை-2.

    • பாதாள சாக்கடையை சரி செய்யக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மாநகராட்சி வாகனம் வரவழைக்கப்பட்டு பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்து கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டது.



    பாதாள சாக்கடை கழிவுநீர் தெருவில் ஓடுவதை படத்தில் காணலாம்.

     மதுரை

    மதுரையில் வணிக நிறு வனங்கள், ஒர்க் ஷாப்கள் நிரம்பிய மைய பகுதியாக சிம்மக்கல் உள்ளது. 50-வது வார்டு பகுதியான இங்கு மாவட்ட மைய நூலகமும் உள்ளது. இதன் அருகில் உள்ள அபிமன்னன் கிழக்கு மேற்கு தெருவில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் தெருவில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

    முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். குழந்தைகளுக்கு வயிற்று போக்கு, காய்ச்சல் ஏற்பட்ட தாகவும், குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து இந்த பகுதி மக்கள் மாநகராட்சியில் புகார் செய்ததாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை திடீரென சிம்மக்கல் மெயின் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம் ஆகிய பகுதிக ளுக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் பெண்க ளின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இத னால் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத் தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இதையடுத்து மாநகராட்சி வாகனம் வரவழைக்கப்பட்டு பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்து கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டது.


    • குமாரபாளையத்தில் பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு முறை இயக்க ஆலோசனை கூட்டம் மாவட்ட மாசுக்கட்டுபாட்டுத் துறை அலுவலர் மணி வண்ணன் தலைமையில் நடைபெற்றது.
    • இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் உமா பங்கேற்று பேசினார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு முறை இயக்க ஆலோசனை கூட்டம் மாவட்ட மாசுக்கட்டுபாட்டுத் துறை அலுவலர் மணி வண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் உமா பங்கேற்று பேசினார்.

    கூட்டத்தில் பறக்கும் படை சுற்றுச்சூழல் பொறி யாளர் வனஜா, பள்ளி பாளையம், குமாரபாளை யம், நாமக்கல் நகராட்சி ஆணையர்கள் தாமரை, ராஜேந்திரன்(பொ) சென்னுகிருஷ்ணன், மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் சந்தான கிருஷ்ணன், குண சேகரன், உதயன் சாயப் பட்டறை சங்க நிர்வாகிகள் அசோகன், பிரபாகரன் உள்ளிட்ட உட்பட அரசுத் துறை அலுவலர்கள், சாய மற்றும் சலவை தொழிற் சாலை உரிமையாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    பின்னர் கலெக்டர் உமா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாயப்பட்டறை கழிவுகள் காவிரி ஆற்றில் கலப்பதாக புகார்கள் வரபெற்றன. இதன் அடிப்படையில் பல்வேறு சாயப்பட்டறை களில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. சாயப்பட்டறை மற்றும் சலவைத் தொழில் நலிவடையாமலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம், பொதுமக்களின் சுகாதாரம் பாதிப்படையாமல் இருக்க பூஜ்ய கழிவு நீர் சுத்திகரிப்பு முறை இயக்கத்தினை நல்ல முறையில் நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே பூஜ்ய கழிவு நீர் சுத்திகரிப்பு முறையினை தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் 122 சலவை மற்றும் சாயப்பட்டறைகள் உள்ளன. மேலும் இந்த தொழிலை பாதுகாத்திட தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் நடந்தாய் வாழி காவேரி என்ற திட்டத்தின் கீழ் 303 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்து தமிழ்நாடு அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பரிசீலினை செய்து நிதி ஒப்பளிப்பிற்கு மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

    நிதி ஒப்புதல் செய்யப்பட்டவுடன் தேர்வு செய்யப்பட்டுள்ள பல்லக்கா பாளையம், எலந்தகுட்டை மற்றும் சவுதாபுரம் ஆகிய இடங்களில் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த பொது சுத்திகரிப்பு மையம் அமைப்பதன் மூலம் சலவை மற்றும் சாயப்பட்டறை கழிவு நீரற்ற சுத்திகரிப்பு முறை உறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்கவுள்ள இடத்தினை நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மத்திய, மாநில அரசின் நிதி ஒதுக்கீடு பெறுவதற்காக அனைத்து பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் பொது சுத்திகரிப்பு மையம் அமைத்து சலவை மற்றும் சாயப்பட்டறைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில் 20 சதவீத பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
    • பொதுமக்கள் தனியார் லாரி மூலம் வரும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

    கொளத்தூர்:

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

    பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர்கால்வாய் பணி காரணமாக குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்து வருகிறது. கால்வாய் பணி இன்னும் முழுமையாக முடியாததால் இந்த பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    கொளத்தூர் தொகுதியில் சுமார் ரூ.120 கோடி மதிப்பில் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில் 20 சதவீத பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதனால் கொளத்தூர் திருமுருகன் நகர், டீச்சர்ஸ் கில்ட் காலனி, வி.வி. நகர் பூம்புகார் நகர், ஜெயராம் நகர், ஜி.கே.எம். காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பணி நிறைவடையாமல் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் உள்ளன. அதில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வாகன ஓட்டிகளையும், அவ்வழியே செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் காணப்படுகிறது.

    மேலும் பல இடங்களில் கால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவு நீர் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொளத்தூர் மூகாம்பிகை கோவில் மெயின் ரோட்டில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் குளம்போல் தேங்கி காணப்படுகிறது.

    பூம்புகார் நகர், வி.வி.நகர் பகுதியில் கால்வாய்க்கு பள்ளம்தோண்டியபோது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர்கலந்தது. இதனால் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தனியார் லாரி மூலம் வரும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

    மேலும் மழை நீர் வடிகால் பணி முடிந்த பல சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள்.

    எனவே கொளத்தூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடித்து தோண்டப்பட்ட இடங்களில் தரமான சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து பூம்புகார் நகரை சேர்ந்த ஒருவர் கூறும்போது, மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் கழிவுநீரால் நிரம்பி உள்ளன. குடிநீர் வாரிய அதிகாரிகள் அதனை சீரமைத்தாலும், அது தற்காலிக தீர்வாகவே உள்ளது. மீண்டும் சில நாட்களில் மற்ற தெருக்களில் இதே பிரச்னை ஏற்படுகிறது. கால்வாய் பணி காரணமாக குடிநீர் குழாய், மின்வயர்கள் சேதம் அடைந்து உள்ளன. உடைந்த குடிதண்ணீர் குழாய்களில் கழிவு நீர் கலந்து வருகிறது. கால்வாய் பணி முடியாததால் இதனை சீரமைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. மழைநீர் வடிகால் பணியை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும். கழிவு நீர் கலந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய ரூ.3 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது என்றார்.

    • கொடுங்கையூரில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கழிவு நீர் இறைக்கும் நிலையம் செயல்படாது.
    • கழிவுநீர் உறிஞ்சும் எந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    சென்னை:

    கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (28-ந்தேதி) அன்று காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை மண்டலம் 4-க்கு உட்பட்ட ராதாகிருஷ்ணன் நகர் (வடக்கு) கழிவு நீர் இறைக்கும் நிலையம் செயல்படாது.

    எனவே தண்டையார்பேட்டைக்கு உட்பட்ட இடங்களில் உள்ள எந்திர நுழைவு வாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை ஏற்பட்டால் அவசர தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் எந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற பகுதி பொறியாளர்-4 செல்போன் எண்: 8144930904, துணை பகுதி பொறியாளர் 8144930254 மற்றும் தலைமை அலுவலக எண்: 044-45674567 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    • வாகன ஓட்டிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் முகத்தை சுழித்தபடி சாலையை கடக்கின்றனர்.
    • சாக்கடை அடைப்பை சரிசெய்ய மாநகராட்சி ஊழியர்கள் யாரும் வரவில்லை.

    வடவள்ளி,

    கோவை சாய்பாபா காலனி- மேட்டுப்பாளையம் சந்திப்பு அருகே, சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் வெளியேற வழியின்றி, சாக்கடை மூடி வழியாக பீறிட்டு வெளியேறி வருகிறது. இதனால் சாலை முழுவதும் சாக்கடை நீர் ஆறாக ஓடுகிறது.

    இது அருகில் உள்ள பெட்ரோல் பங்க, மருத்துவமனை வாசலிலும் குளம் போல தேங்கி நிற்கிறது. எனவே அந்த பகுதிக்கு எவரும் செல்ல முடியவில்லை. இரு சக்கர- நான்கு சக்கர வாகன ஓட்டிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் முகத்தை சுழித்தபடி சாலையை கடந்து செல்கின்றனர்.

    கோவை சாய்பாபா காலனியில் அதிகாலை முதல் கழிவு நீர் வெளியேறி வருகிறது. இருந்தபோதிலும் சாக்கடை அடைப்பை சரிசெய்ய மாநகராட்சி ஊழியர்கள் யாரும் வரவில்லை. எனவே பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    • பல்வேறு தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்தது.
    • மக்கள் குடித்தால் கண்டிப்பாக உயிர் பலி ஏற்படும் அபாயம் நிலவி உள்ளது என சரமாரியாக குற்றம் சாட்டி இருந்தனர்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சில் 30 வார்டுகள் உள்ளன. இதில் நெல்லிக்குப்பத்தில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 9-வது வார்டில் கந்தசாமி தெரு, ராமு தெரு, விஜயலட்சுமி நகர், பங்களா தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து குடிநீரை பிடித்த போது கடும் துர்நாற்றம் வீசி வந்தது.

    தொடர்ந்து வார்டு கவுன்சிலர் சத்யா மற்றும் பொது மக்கள் நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு குடி நீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பொது மக்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற நோய் ஏற்படும் அபாயம் நிலவி வருவதாக கூறி புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து புகார் அளித்த சிறிது நாட்களுக்குப் பிறகு அதிகாரிகள் நெல்லிக்குப்பம் பகுதியில் 5 இடங்களில் பள்ளங்கள் தோண்டி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று சரி செய்யும் பணியினை ஆய்வு செய்து வருங்காலங்களில் இது போன்ற பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களுக்கு அறிவுறுத்தினர்.

    இந்த நிலையில் சரி செய்து சில நாட்களான நிலையில் மீண்டும் விஜயலட்சுமி நகர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் இதுபோன்று தொடர்ந்து குடிநீர் வந்தால் எப்படி மக்கள் குடிப்பது? இதனை குடித்தால் கண்டிப்பாக உயிர் பலி ஏற்படும் அபாயம் நிலவி உள்ளது என சரமாரியாக குற்றம் சாட்டி இருந்தனர். மேலும் இது சம்பந்தமாக அதிகாரியிடம் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் எங்கள் பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்று அதிகாரிகள் அலட்சியத்தால் கழிவு நீர் கலந்த குடிநீர் வருவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என பொது மக்கள் தெரி வித்துள்ளனர்.

    ஆனால் நெல்லிக்குப்பம் நகராட்சியில் சில அதிகாரிகள் ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் புதிய அதிகாரிகள் நிய மிக்கப்படாததால் இது போன்ற அத்தியாவசிய பணி களை யார் மேற்கொள்வது? என தெரி யாமல் நகரா ட்சி நிர்வாகம் உள்ளது. மேலும் போதுமான பணியாளர்களும் இல்லாததால் நகராட்சி நிர்வாகம் சீர்குலைந்து வருகின்றது. இது போன்ற மக்களுக்கு தேவையான அத்தியாவசிய குடிநீர் சரி செய்யாமல் தொடர்ந்து வருவதால் மிகப் பரிய உயிரிழப்பு சம்பவம் நடைபெற்று விடுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்க தாகும். இதற்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பார்களா? 

    ×