search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாய்பாபா காலனியில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது
    X

    சாய்பாபா காலனியில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது

    • வாகன ஓட்டிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் முகத்தை சுழித்தபடி சாலையை கடக்கின்றனர்.
    • சாக்கடை அடைப்பை சரிசெய்ய மாநகராட்சி ஊழியர்கள் யாரும் வரவில்லை.

    வடவள்ளி,

    கோவை சாய்பாபா காலனி- மேட்டுப்பாளையம் சந்திப்பு அருகே, சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் வெளியேற வழியின்றி, சாக்கடை மூடி வழியாக பீறிட்டு வெளியேறி வருகிறது. இதனால் சாலை முழுவதும் சாக்கடை நீர் ஆறாக ஓடுகிறது.

    இது அருகில் உள்ள பெட்ரோல் பங்க, மருத்துவமனை வாசலிலும் குளம் போல தேங்கி நிற்கிறது. எனவே அந்த பகுதிக்கு எவரும் செல்ல முடியவில்லை. இரு சக்கர- நான்கு சக்கர வாகன ஓட்டிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் முகத்தை சுழித்தபடி சாலையை கடந்து செல்கின்றனர்.

    கோவை சாய்பாபா காலனியில் அதிகாலை முதல் கழிவு நீர் வெளியேறி வருகிறது. இருந்தபோதிலும் சாக்கடை அடைப்பை சரிசெய்ய மாநகராட்சி ஊழியர்கள் யாரும் வரவில்லை. எனவே பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    Next Story
    ×