search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure"

    • திண்டிவனம் அருகே ஓட்டலில் சிலிண்டர், இரும்பு பைப்புகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சப்-இன்ஸ்பெ க்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சாரம் லேபை அருகே திண்டிவனம் ஜக்கா பேட்டை பகுதியை சேர்ந்த அசோக் (வயது 36) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது கடையின் பின்பக்கத்தில் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த 2 சிலிண்டர்கள், இரும்பு பைப்புகளை திருடி சென்றனர். இது குறித்து அசோக் கொடுத்த புகாரின் பெயரில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெ க்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

    அப்போது சாரம் லேபை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் சாரம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 54), கலாநிதி (35) ஆகியோர் என்பதும், இருவரும் ஓட்டலில் திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. இவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த சிலிண்டர் மற்றும் இரும்பு பைப்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • களூர் ரயில்வே கேட் அருகே உள்ள ஒரு பெட்டி கடையில்பான் மசாலா, குட்கா பறிமுதல்
    • விற்பனை ெசய்தவர்கள் மீது வழக்கு பதிவு

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் புகளூர் ரயில்வே கேட் அருகே உள்ள ஒரு பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம் பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து விற்பனை செய்த செக்குமேடு பகுதியைச் சேர்ந்த ராஜீவ் (வயது60) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முட்புதரில் மறைத்து வைக்கப்பட்ட 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் 2 பேரிடம் விசாரணை
    • இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி

    திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் ரெயில்வேக்கு சொந்தமான முட்புதர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருச்சி மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை போலீஸ் கமிஷனர் காமினி ஆலோசனையின் படி உதவி போலீஸ் கமிஷனர் காமராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    பின்னர் முட்புதர் பகுதியில் சல்லடை போட்டு தேடினர். அப்போது அங்கு ஒரு அட்டைப்பெட்டியில் 3 நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.

    பின்னர் அந்த வெடிகுண்டுகளை பாதுகாப்பு கருதி மணச்சநல்லூர் எதுமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் வெடிமருந்து குடோனுக்கு அனுப்பி வைத்தனர். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என போலீசார் தெரிவித்தனர்.

    ரவுடி கும்பல் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கி பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அந்த பகுதியில் இரு ரவுடிகளுக்கிடையே கோஷ்டி மோதல் இருந்து வருகிறது.

    இதில் ஒரு ரவுடி அவரது எதிரியை தீர்த்து கட்ட அந்த வெடிகுண்டுகளை வாங்கி வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

    அதன் அடிப்படையில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சியில் நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் அரியமங்கலம் மற்றும் பொன்மலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணப்பாறையில் உரிய ஆவணங்கள் இன்றி பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற 3 வாகனங்கள் பறிமுதல்
    • ரூ.54 ஆயிரம் அபராதம் மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி

    மணப்பாறை

    திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் மருங்காபுரி தாலுகா பகுதிகளில் பள்ளிக்குழந்தை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பாதுகாப்பு சரியான உள்ளதா? வாகனங்களுக்கு அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளதா? என்பதை மணப்பாறை மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியா அவ்வபோது ஆய்வு செய்து உரிய ஆவணங்கள் இன்றி அதிக குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் மற்றும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இதே போல் நேற்று மணப்பாறை மதுரை சாலை மற்றும் கோவில்பட்டி சாலைகளில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி வந்த 3 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தார். அதில் இரண்டு வாகனங்களில் காப்பீடு மற்றும் எப்சி இல்லாமல் இருப்பது ஒரு வாகனத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாத நிலையில் ஓட்டுனர் உரிமம் கூட இல்லாமல் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 வாகனங்களையும் பறிமுதல் செய்து 54 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இதுபோன்று விதிகளை மீறியும், உரிய ஆவணங்கள் இன்றியும் மோட்டார் வாகன விதிகளை மீறி பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

    • வெவ்வேறு இடங்களில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வளைத்து பிடித்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    மதுரை

    மதுரை கரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ரத்தினவேலு மற்றும் போலீசார் புட்டுத்தோப்பு, வைகை ஆற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த 5 பேரை பிடித்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

    பிடிபட்டவர்களிடம் சோதனை செய்தபோது வாள், கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. மேலும் விசாரணையில் அவர்கள் யோகநாதசாமி, தெற்கு மடத்தை சேர்ந்த முத்துமாணிக்கம் (25), கிராஸ் ரோடு அருள்மணி (26), யோகேசுவரன் (24), மகேஸ்வரன்(31), பொன்னகரம் ராஜா (25), மேலமடை விஜய் (25) என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். தப்பியோடிய முத்து மாணிக்கம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தெற்குவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்தப்பகுதியில் 11 பேர் பதுங்கி இருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் ஓடினர்.

    அதில் 8 பேரை போலீசார் வளைத்து பிடித்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.விசாரணையில் அவர்கள் சோலையழகுபுரம் வினோத்குமார் (19), குமார் (24), பிரகாஷ் (19), சதீஷ், மதன்குமார் (19), வினோத், பிரகாஷ்(19) என்பது தெரியவந்தது.

    மேலும் 3 பேர் 17 வயது சிறுவர்கள். போலீசார் அவர்களை கைது செய்தனர். தப்பி ஓடிய சிவா, சபரி, ஆறுமுகம் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
    • பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடற்கரை வழியாக பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு தூத்துக்குடி கடற்கரை சாலை மீன்பிடி துறைமுகத்தை அடுத்து இனிகோநகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த லோடு ஆட்டோவை போலீசார் மறித்தனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள் லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

    லோடு ஆட்டோவை போலீசார் சோதனை செய்தபோது அதில் 40 மூடைகளில் 2 டன் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 சரக்கு வாகனத்தில் ஆற்று மணல் கடத்தி வந்ததை தடுத்து நிறுத்தினர்.
    • தப்பியோடிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நெய்வேலி அக்னி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவதாக ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பெயரில் ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் அன்பழகன் மேற்பார்வையில் தனிப்படை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமாரவேல், தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திருவோணம் மேட்டுப்பட்டி கிராம பகுதியில் 2 சரக்கு வாகனத்தில் ஆற்று மணல் கடத்தி வந்ததை தடுத்து நிறுத்தினர்.

    போலீசை பார்த்தும் இரண்டு வாகனத்தில் வந்த மூவரில் 2 பேர் தப்பி ஓடினர்.

    ஒருவரை மட்டும் மடக்கி பிடித்த தனிப்படை போலீசார் திருவோணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் நெய்வேலி வடபாதி ஆவனா ண்டி கொள்ளையைச் சேர்ந்த கவினேசன் (22) என்பவர் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து இரவு நேரங்களில் அக்னி ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து

    இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கவிநேசனை சிறையில் அடைத்தனர் . மேலும் தப்பி ஓடிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • 400 கிராம் எடையுள்ள 129 புகையிலை பொருட்கள் இருந்தது.
    • புகையிலை பொருட்களை கடத்தி வந்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கும்பகோணம்:

    திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா ஆகியோர் உத்தரவின் பேரில் போலீசார் கும்பகோணம் வழியாக செல்லும் ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இந்த நிலையில் புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சில மர்ம நபர்கள் சாக்கு முட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ரெயில் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையில் முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் சந்தேகப்ப டும்படி இருந்த ஒரு சாக்கு மூட்டையை போலீசார் சோதனையிட்டனர். அந்த சாக்குமூட்டை குறித்து அங்கிருந்த பயணிகளிடம் விசாரணை செய்தனர். அப்போது அந்த சாக்கு மூட்டைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து ரயில்வே தனிப்படை போலீசார் கும்பகோணம் ரயில்வே நிலையத்தில் அந்த சாக்கு மூட்டையை இறக்கி திறந்து பார்த்தனர். அப்போது அதில் 400 கிராம் எடையுள்ள 129 புகையிலை பொருட்கள் பொட்டலங்கள் 50 கிலோவுக்கு இருந்தது.

    இதைத்தொடர்ந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 50 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை கும்பகோணம் மாநகராட்சி உணவு பாதுகாப்பு பிரிவு அலுவலரிடம் அரசின் வழிகாட்டுதல் படி அழிக்க ஒப்படைத்தனர். மேலும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • காரைக்கால் அருகே ஜே.சி.பி. எந்திரத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • வீ.விஜய் (என்ற நபர், கடந்த மார்ச் 2022-ல் வாடகைக்கு எடுத்து சென்றுள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திருநள்ளாறில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ஜே.சி.பி எந்திரத்தை, ஏமாற்றி கடத்திசென்ற நபரை, ஒரு வருடத்திற்கு பிறகு திருநள்ளாறு போலீசார் கைது செய்து, ஜே.சி.பி எந்திரம் பறிமுதல் செய்து, மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் அருகே திருநள்ளாறு சுரக்குடி வடக்குபேட்டையை சேர்ந்தவர் த.விஜய். இவரது ஜே.சி.பி எந்திரத்தை, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தைச்சேர்ந்த வீ.விஜய் (வயது35) என்ற நபர், கடந்த மார்ச் 2022-ல் வாடகைக்கு எடுத்துசென்றுள்ளார்.

    ஒரு சில மாதங்கள் வாடகையை முறைப்படி வழங்கிய வீ.விஜய், அடுத்த சில மாதங்களாக வாடகையை தரவில்லை. மேலும், ஜே.சி.பி எந்திரம் எங்குள்ளது என்ற விவரத்தையும் கூற மறுத்துவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட த.விஜய், தனது ஜே.சி.பி. எந்திரத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கடந்த மார்ச் 2023ல், திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஸ் உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவ்ஹால் ரமேஷ் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, வீ.விஜயை தேடிவந்தனர். இந்நிலையில், வீ.விஜய் வாடகைக்கு எடுத்த ஜே.சி.பி எந்திரத்தை, தனது நண்பர் பாருக்கிடம் விற்றது தெரிவந்தது. தொடர்ந்து, சீர்காழியில் பாருக்கை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், வீ.விஜயை போலீசார் கைது செய்து, ஜே.சி.பி. எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • நாச்சியார்கோவில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    திருவிடைமருதூர் அருகே சமர்த்தனார்குடி பெரியகுளம் அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாச்சியா ர்கோவில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது சீனிவா சநல்லூர் அண்ணாநகர் மேலத்தெருவை சேர்ந்த கவுதம் (வயது 18), சமத்தனார்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கிஷோர் (19), திருப்பந்துறை மாதா கோவில் தெருவை சேர்ந்த கிறிஸ்டோபர் (19) ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது.

    அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர். 

    • 91 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது செல்லூர் வணிக வளாகம் ஒன்றில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வ விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. அங்கிருந்து 91 கிலோ புகையிலை பொருட்கள், 4 இருசக்கர வாகனங்கள், 4 செல்போன்கள், ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 160 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய ஜலில் இப்ராகிம்(61), எஸ்.ஆலங்குளம் அலமேலு நகர் ராஜேந்திரன் மகன் பாண்டியராஜன்(27), ஒத்தக்கடை அண்ணாமலை நகர் மாரியப்பன் மகன் கணேசன்(39), செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு கருப்புசாமி மகன் முருகேசன் (58), செல்லூர் பூந்தமல்லி மாரியப்பன் மகன் தினேஷ் குமார் (26), மீனாட்சிபுரம் சத்தியமூர்த்தி 5-வது குறுக்கு தெரு திருச்சிற்றம்பலம் மகன் அருண்குமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். 

    • விழுப்புரம் அருகே ரூ.4 லட்சம் மதிப்பிலான 260 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    • காரை நிறுத்தும்படி போலீசார் சிக்னல் காட்டினர்.

    விழுப்புரம்:

    மேல்மருவத்தூரில் இருந்து விழுப்புரத்திற்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி விழுப்புரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, பாண்டியன் தலைமையிலான போலீசார் முத்தம்பாளையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த காரை நிறுத்தும்படி போலீசார் சிக்னல் காட்டினர். காரை நிற்காமல் சென்றது.

    காரில் இருந்த 2 பேரிடம் விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குபின் முரணான தகவலை தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் காரை சோதனையிட்டபோது, புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா, பான் பராக், கூல் லீப், விமல், ஆர்.எம்.டி. போன்றவைகள் மூட்டைகளில் இருந்தது. ரூ.4 லட்சம் மதிப்பிலான 260 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த மேல்மருவத்தூர் பண்டாரம் (வயது 28), திண்டிவனர் பாஸ்கரன் (32) ஆகியோரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×