search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடை ெசய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பறிமுதல்
    X

    தடை ெசய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பறிமுதல்

    • களூர் ரயில்வே கேட் அருகே உள்ள ஒரு பெட்டி கடையில்பான் மசாலா, குட்கா பறிமுதல்
    • விற்பனை ெசய்தவர்கள் மீது வழக்கு பதிவு

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புகளூர் ரயில்வே கேட் அருகே உள்ள ஒரு பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம் பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து விற்பனை செய்த செக்குமேடு பகுதியைச் சேர்ந்த ராஜீவ் (வயது60) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×