search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sea"

    • 7.50 கோடி பச்சை வரி இறால் குஞ்சுகள் பாக்ஜல சந்தி கடலில் விடப்பட்டன.
    • பச்சை வரி இறால் வளத்தை காக்க இந்நடவடிக்கை உதவியாக இருக்கும் என்றார்.

    மண்டபம்

    மன்னார் வளைகுடா, பாக்ஜல சந்தி கடல் பகுதியில் இறால் மீன்வளம் குறைந்து வருவதையடுத்து, பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு உதவும் வகையிலும், மீன்பிடியை மேம்படுத்தவும் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் இறால் குஞ்சுகளை பொரிப்ப கங்களில் வளர்த்து கடலில் விடும் திட்டம் கடந்த பல வருடங்களாக செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அங்கு வளர்த்த 68 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் மீனவர்களுக்கு உதவும் வகையில் மண்டபம் கோவில்வாடி பாக்ஜல சந்தி கடல்பகுதியில் நேற்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் வினோத் தலைமையில் விடப்பட்டது. திட்ட தலைவர் தமிழ்மணி, விஞ்ஞானி ஜான்சன் உட்பட மீன் துறை அதிகாரிகள் மற்றும் மீனவ அமைப்பினர் பங்கேற்றனர்.

    இதுகுறித்து மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் வினோத் கூறுகையில், இத்திட்டம் தொடங்கிய பிப்.2022-ல் இருந்து இதுவரை 7.50 கோடி பச்சை வரி இறால் குஞ்சுகள் பொரிப் பகங்களில் வளர்க்கப்பட்டு மன்னார் வளைகுடா, பாக்ஜல சந்தி கடற்பகுதியில் விடப்பட்டுள்ளன. பச்சை வரி இறால் வளத்தை காக்க இந்நடவடிக்கை உதவியாக இருக்கும் என்றார்.

    • 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது.
    • மீன் பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரை திரும்பினர்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடி யக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது.

    இதனால் கடல் சீற்றமாக காணப்படுகிறது.

    இதனால் இன்று 2-வது நாளாக 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    ஒரு சில மீனவர்கள் கரையோரம் மீன்பிடிக்க சென்ற நிலையில் காற்று அதிகமாக வீசியதால் உடனடியாக கரை திரும்பி னார்.

    இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்ப டுகிறது.

    • கடலில் 48 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன.
    • ஏற்பாடுகளை மூத்த விஞ்ஞானி ஜான்சன் செய்திருந்தாா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டனம் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல் பட்டு வருகிறது.

    இங்கு பிரதமா் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொறிப்பகத்தில் வளர்க் கப்பட்ட பச்சை இறால் குஞ்சுகள் கடலில் விடப் பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் விஞ் ஞானி வினோத் தலை மையில் பொறிப்பகத்தில் வளா்க்கப்பட்ட 48 லட்சம் பச்சை இறால் குஞ்சுகளை படகில் எடுத்துச் சென்று பாக். ஜலசந்தி முனை பகுதியில் கடலில் விட்டனர்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரையில் 6.85 கோடி இறால் குஞ்சுகள் கடலில் விடப் பட்டுள்ளதாக மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்தனா். இதற்கான ஏற்பாடுகளை மூத்த விஞ்ஞானி ஜான்சன் செய்திருந்தாா்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனுஷ்கோடி அரிச்சல் முனை, அனந்தராயர் சத்திரம் பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன.
    • சங்குமால் பகுதியில் கடல் உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றின் வேக மாறுபாட்டால் ராமேசுவரம் கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

    தனுஷ்கோடி அரிச்சல் முனை, அனந்தராயர் சத்திரம் பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன. இதனால் மீனவர்கள் 3 நாட்களாக கடலுக்கு செல்லாமல் உள்ளனர். கடந்த 3 நாட்களாக அக்னி தீர்த்த கடல் உள்ளிட்ட பகுதிகளில் பகல் வேளைகளில் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இரவில் மீண்டும் சகஜ நிலையை அடைந்தது.

    இந்த நிலையில் இன்று காலை அக்னி தீர்த்த கடல் பகுதியில் 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியது. மேலும் பாம்பன், சங்குமால் கடல் பகுதிகளிலும் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகள் தரை தட்டி நின்றன.

    ராமேசுவரம் கோவில் அமைந்துள்ள அக்னி தீர்த்த கடல் பகுதியில் 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கி காணப்பட்டதால் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படவில்லை. இதனால் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    அமாவாசை, பவுர்ணமியை ஒட்டிய நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வு என்றாலும் இந்த முறை 200 மீட்டருக்கும் அதிகமாக கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் புனித நீராட முடியவில்லை. இதே போல சங்குமால் பகுதியில் கடல் உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    • காற்றின் வேகம் குறையாததால் இன்றும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து 2 மாவட்டங்களிலும் நேற்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை கரை களில் நிறுத்தி வைத்திருந்தனர். தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக காற்றின் வேகம் குறையவில்லை. இதனால் இன்றும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, பெருமணல் உள்பட 9 கடற்கரை மீனவ கிராமங்களில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 1,215 பைபர் படகுகள் கடற்கரை ஓரத்தில் 2-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 450 விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அங்கும் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    • இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
    • மூத்த விஞ்ஞானி ஜான்சன், மீனவா் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள மரைக்காயர் பட்டணம் பகுதியில் மத்திய அரசின், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீனவா்க ளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பச்சை வரி இறால்கள் உற்பத்தி செய்யப்பட்டு கடலில் விடப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத் தலைவா் தமிழ்மணி தலைமையில் அலுவலர்கள் 16லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகளை படகில் எடுத்துச் சென்று மன்னாா் வளைகுடா கடலில் விட்டனர்.

    இதுவரை சுமார் 5.80 கோடி பச்சை வரி இறால்கள் கடலில் விடப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிகழ்ச்சியில் மூத்த விஞ்ஞாடினி ஜான்சன், மீனவா் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

    • பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மன வேதனையுடன் நண்பர்களிடம் கூறி உள்ளார்.
    • குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் தவிப்பில் உள்ளனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த காட்டுப் பள்ளிதுறைமுக விரிவாக்க திட்டத்திற்கு இடம் அளித்ததற்காக 2009-ம் ஆண்டு காட்டுப் பள்ளிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 140 பேருக்கு பணி வழங்கப்பட்டது. அவர்கள் தற்காலிக பணியாளர்களாக பணி அமர்த்தப்பட்ட நிலையில் நிரந்தர பணி கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த நித்தியா (33) என்பவர் உள்பட 11 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட கலெக்டரையும் சந்தித்து புகார் மனு அளித்து உள்ளனர்.

    இதற்கிடையே நித்யா (33) உள்பட 4 பேர் கடலில் மீன் பிடிக்க படகில் சென்றனர். அப்போது பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மன வேதனையுடன் நண்பர்களிடம் கூறி உள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி கடலுக்குள் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் நித்யாவை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அவர் கடலில் மூழ்கினார். அவரை தேடி வருகிறார்கள்.

    இந்நிலையில் காட்டுப்பள்ளி கிராமமக்கள் ஏராளமானோர் திரண்டு துறைமுக நுழைவாயில் அருகே ஊராட்சித் தலைவர் சேதுராமன் தலைமையில் திரண்டு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நித்யாவின் பணிநீக்கத்துக்கு காரணமான துறைமுக நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஆவடி காவல் சரக துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கடலில் விழுந்து மாயமான நித்யாவை படகுகள் மூலம் தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவரது கதி என்ன ஆனது? என்பது தெரியாததால் குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் தவிப்பில் உள்ளனர். இது தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
    • ராமேசுவரம், பாம்பன் பகுதியில் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது.

    ராமேசுவரம்:

    மீன்களை இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் 61 நாட்கள் வரை தமிழக கடற்பகுதியில் விசைப்படகில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை கடந்த 15-ந் தேதி நிறைவடைந்தது.

    இதையடுத்து பாம்பன் மீனவர்கள் அன்று நள்ளிரவு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆனால் புயல் சின்னம் காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் இன்று காலையே மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அனுமதி அளித்திருந்தது.

    ஆனால் அதனை மீறி ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று மதியம் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரி கூறியதாவது:-

    ராமேசுவரம், பாம்பன் பகுதியில் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. ராமேசுவரம் மீனவர்கள் அதனை மீறி முன்கூட்டியே கடலுக்கு சென்றுள்ளனர். இது விதிகளை மீறிய செயலாகும்.

    இவ்வாறு செல்லும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்குவது ஒரு மாத காலம் நிறுத்தப்படும். மேலும் மானிய டீசலும் ரத்து செய்யப்படும். ராமேசுவரம் மீனவர்களின் விதிமீறல் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பவுர்ணமியையொட்டி நேற்று முதல் கன்னியாகுமரியில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.
    • படகுத்துறை நுழைவு வாயிலில் 2 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, நீர்மட்டம் தாழ்வது, நீர்மட்டம் உயர்வது, சீற்றம், கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் பவுர்ணமியையொட்டி நேற்று முதல் கன்னியாகுமரியில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இன்று காலை கடல் நீர்மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.

    இதனால் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகுகள் படகு துறையில் மணலில் தரை தட்டி நின்றது. அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கப்படவில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் 2 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜநிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு 2 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் கடல் சீற்றம் காரணமாக கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர்.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. 

    • கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி பலியாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.
    • இதை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகூர் சில்லடி கடற்கரைக்கு வரும் வெளியூர் பயணிகள், கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி பலியாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.

    இதை தடுக்கும் வகையில், கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகை நாகூர் முஸ்லிம் ஜமாத் சார்பில் சில்லடி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.

    அதை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில், நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில் குமார், நாகூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஏ.எஸ்.ஏ.காதர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி செயற் பொறியாளர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • நேற்று ஜெயராஜ் அதே பகுதியை சேர்ந்த 5 மீனவர்களுடன் சங்கு குளிக்க சென்றார்.
    • அவர்கள் புதிய துறைமுகம் ஆழ்கடல் பகுதியில் சங்கு குளித்த போது திடீரென ஜெயராஜ் கடலில் மூழ்கினார்.

    தூத்துக்குடி :

    தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுக்குடி அருகே உள்ள சாமுவேல் புரத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது45). சங்குகுழி மீனவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று ஜெயராஜ் அதே பகுதியை சேர்ந்த 5 மீனவர்களுடன் சங்கு குளிக்க சென்றனர். அவர்கள் புதிய துறைமுகம் ஆழ்கடல் பகுதியில் சங்கு குளித்த போது திடீரென ஜெயராஜ் கடலில் மூழ்கினார். அவரை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்த னர்.

    பின்னர் அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தருவை குளம் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடல் பகுதியில் கரை ஒதுங்கிய 184 பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக கஞ்சா, போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. 

    தற்போது அங்கு பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் இங்கிருந்து அத்தியா வசியமான பொருட்களும் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க கடலோர காவல் படையினர் ராமநாத புரம் மாவட்ட கடல் பகுதியில் தீவிர ரோந்து  மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சாயல்குடி அருகே உள்ள ரிப்பையூர் கடற்கரை பகுதியில் 184 பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் கரை ஒதுங்கின. இதில் 1 லிட்டர் பச்சை கலர் பாட்டில் 70-ம், 1 லிட்டர் வெள்ளை கலர் பாட்டில் 64-ம், அரை லிட்டர் பாட்டில் 50 என மொத்தம் 184 இருந்தது. 

    இதனை கைப்பற்றிய கடலோர காவல்படை போலீசார் இங்கிருந்து இலங்கைக்கு கடத்தும்போது கடலில் தவறி விழுந்திருக்கலாம் என்ற கோணத்திலும், கடத்திச் சென்றது யார்? என்பதும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×