search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலகை"

    • ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையின் இருபுறங்களிலும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
    • மொத்தமாக 62 பலகைகளில் இந்த தகவல்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

    கோவை,

    சென்னைக்கு அடுத்தபடியாக தொழில், கல்வி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் வளர்ந்த நகரமாக கோவை திகழ்கிறது.இதற்கு பல்வேறு தரப்பினரின் உழைப்பும், பங்களிப்பும் முக்கிய காரணம்.

    இப்படிப்பட்ட மூத்த முன்னோடிகளை இன்றைய தலைமுறையினர் அறியும் விதமாக ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் லெஜண்ட்ஸ் ஆப் கோயம்புத்தூர் என்ற பெயரில் புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:-

    கோவை மாநகரம் பலரின் உழைப்பு, பங்களிப்பின் மூலமாக வளர்ந்த ஒரு நகரமாகும். ஒரு சிறிய நகரமாக இருந்து, இன்று தமிழகத்தின் 2-வது பெரிய மாநகராட்சியாக உயர்ந்து ள்ளது.

    கோவை மாநகராட்சி நிர்வாகம், பொலிவுறு திட்டத்தின் (ஸ்மார்ட்சிட்டி) கீழ் பல்வேறு திட்டபணிகளை மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் மாதிரிசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையின் இருபுறங்களிலும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    கோவை மாநகர் உருவாவதற்கு காரணமான பல தலைவர்கள் தங்களது அறிவு, நேரம், பொருட்கள் போன்றவற்றை செலவழித்துள்ளனர். அவர்களை நினைவு கூறும் வகையிலும், பெருமைப்படுத்தும் வகையிலும், மக்கள் அவர்களை தெரிந்து கொள்ளும் வகையிலும் கோவை நகரை சேர்ந்த தொழில்அதிபர்கள், பண்டைய கால நகர தலைவர்கள் உள்ளிட்டோரின் புகைப்படங்கள், அவர்கள் குறித்த தகவல்களை காட்சிக்கு வைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    தற்போது 32 பலகைகளில் இந்த காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் 30 பலகைளில் கோவை நகரை வளர்த்தவர்களின் புகைப்படங்கள், அவர்களது தகவல்களை வைக்க திட்டமிட்டுள்ளோம்.

    மொத்தமாக 62 பலகைகளில் இந்த தகவல்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதில் விடுபட்டுள்ளவர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    மேலும் பழங்காலத்தில் கோவையில் இருந்த இயற்கை சார்ந்த இடம், பழமை வாய்ந்த கட்டி டங்கள் குறித்த தகவல்களை தகவல் பலகைகளில் வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த தகவல் பலகைகளை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் நின்று பார்த்து படித்து சென்று வருகின்றனர்.

    ஆதி தமிழர் தூய்மை பணியாளர் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.

    அரவேணு,

    ஆதி தமிழர் கட்சி சார்பில், கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி முன்பு ஆதி தமிழர் தூய்மை பணியாளர் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஐக்கையன் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் இதில்100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் வெளிப்பகுதியில் தூய்மை பணியாளர்களும் பங்கு பெற்றனர்

    இதில் ஆதி தமிழர் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி மாவட்ட செயலாளராக ரைஸ் முகமது, கோத்தகிரி கிளை தலைவராக கார்த்திக், துணை மாவட்ட செயலாளராக நந்தகுமார், கோத்தகிரி ஒன்றிய செயலாளராக சத்தியமூர்த்தி, கிருஷ்ணா புதூர் கிளை செயலாளராக ஆறுமுகம்,எச்எப்சி நகர் கிளை செயலாளராக மாணிக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி பலியாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.
    • இதை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகூர் சில்லடி கடற்கரைக்கு வரும் வெளியூர் பயணிகள், கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி பலியாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.

    இதை தடுக்கும் வகையில், கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகை நாகூர் முஸ்லிம் ஜமாத் சார்பில் சில்லடி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.

    அதை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில், நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில் குமார், நாகூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஏ.எஸ்.ஏ.காதர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி செயற் பொறியாளர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    ×